கேரளா பெண்களின் கூந்தல் ரகசியத்தை தெரிந்து கொள்ள இந்த 2 பொருட்கள் போதுமே! முடி காடு மாதிரி அடர்த்தியாக வளரும்.

jeeragam-venthayam-hair
- Advertisement -

அதிகமான நீண்ட கூந்தலுக்கு உதாரணத்திற்கு கேரள பெண்களை கூறுவார்கள். கேரளாவில் இருக்கும் பெண்களின் கூந்தல் நீண்டு கருகருவென அடர்த்தியாக வளர்ந்திருக்கும். அதை பார்ப்பதற்கே நமக்கு ஆச்சரியமாகவும், ஏக்கமாகவும் கூட இருக்கும். இந்த ரெண்டு பொருட்களை பயன்படுத்தி பார்த்தால் நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு உங்களுடைய முடி கருகருவென அடர்த்தியாக கேரளப் பெண்களைப் போல நீண்டு வளரும். அது என்ன பொருட்கள்? அது எப்படி தயாரிப்பது? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

hair-in-comb1

பொதுவாக முடி கொட்டுவதற்கு நிறைய காரணங்கள் கூறப்பட்டாலும் மிக முக்கிய காரணம் என்பது நம் உணவு முறை மாற்றம். பாரம்பரிய உணவு முறை பழக்கத்தில் இருந்து எப்பொழுதும் மாற ஆரம்பித்தோமோ! அப்போதிலிருந்து முடி கொட்டும் பிரச்சனையும் அதிகரித்து வந்தது. அதனுடன் சேர்ந்து காற்றில் கலந்திருக்கும் மாசு மேலும் முடி உதிர்வைத் அதிகரிக்க செய்கிறது. இதற்கு சக்தி வாய்ந்த மூலிகைப் பொருள் நம் கூந்தல் வேர்க்கால்களுக்கு தேவை, அதற்கு அதிக செலவு செய்ய வேண்டிய அவசியமில்லை. நாம் எல்லோரும் அறிந்த இரண்டு பொருட்களை வைத்தே இதனை நாம் சாதித்து காட்ட முடியும். அது என்ன தெரியுமா?

- Advertisement -

முதல் பொருள் கருஞ்சீரகம். இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. மேலும் புரோட்டீன், விட்டமின் ஏ, பி, சி, இ, ஒமேகா-3 போன்ற சத்துக்கள் அதிகம் இருப்பதால் முடி வளர்ச்சிக்கு நல்ல ஒரு ஊட்டச்சத்தை கொடுத்து வேர்களை தூண்டி விட செய்யும். கருஞ்சீரகத்தை கொண்டு செய்யப்படும் எண்ணெய்கள் மேற்கத்திய நாடுகளில் முடி வளர்ச்சிக்கு பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெந்தயத்தில் இருக்கும் புரோட்டீன், பொட்டாசியம், சோடியம், பாஸ்பரஸ், நிகோடினிக் அமிலம் ஆகிய மூலப் பொருட்கள் முடி உதிர்வை தடுத்து வேகமாக அடர்த்தியாக வளர செய்யும்.

Karunjeeragam benefits in Tamil

இந்த ரெண்டு பொருட்களுடன் இந்த இரண்டு எண்ணைகளை சேர்த்து பயன்படுத்தினால் நிச்சயம் 100% நல்ல பலன்களைக் கொடுக்கும். மூன்று பங்கு தேங்காய் எண்ணெயுடன், ஒரு பங்கு விளக்கெண்ணெய் சேர்த்து அடுப்பில் லேசாக சூடேற்ற வேண்டும். அதில் கருஞ்சீரகம் மற்றும் வெந்தயம் தலா 2 டேபிள் ஸ்பூன் அளவிற்கு சேர்த்து கொதிக்க விடுங்கள். லேசாக நுரை போல பொங்கி வரும், அந்த நுரை பொங்கி அணையும் வரை கிண்டி விட்டு கொண்டே இருங்கள். அதன் பிறகு அடுப்பை அணைத்து விடுங்கள்.

- Advertisement -

நன்கு ஆற விட வேண்டும், ஒரு ஐந்து மணி நேரம் அதில் இந்த இரண்டு பொருள்களும் அப்படியே ஊற விடுங்கள். எண்ணெய் ஆறி சீரகம் மற்றும் வெந்தயம் நன்கு ஊறி இருக்கும். அதன் பிறகு எண்ணெயை வடிகட்டி ஒரு பாட்டிலில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை கொண்டு வாரம் மூன்று முறை வேர் கால்களுக்கு மசாஜ் செய்து விட வேண்டும். இந்த எண்ணெய் இரவு நேரங்களில் தலைக்கு மசாஜ் செய்து விட்டு மறுநாள் காலையில் தலைக்குக் குளித்து விடலாம். அல்லது வாரம் மூன்று முறை லேசாக முடியின் வேர்க்கால்களுக்கு மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடவும் செய்யலாம்.

long-hair

அது உங்கள் விருப்பம் தான். இப்படி தொடர்ந்து மூன்று மாதம் செய்ய உங்கள் இழந்த முடி மீண்டும் வளர்ச்சி அடையும். கொட்டிய இடத்தில் இருந்து மீண்டும் புதிய முடி முளைக்க துவங்கும். ஆரம்ப கட்டத்தில் முடி உதிர்வது போன்ற தோற்றம் உங்களுக்கு ஏற்படும் எனவே அவற்றை கண்டு பயப்படாமல் தொடர்ந்து தடவி வாருங்கள். போகப்போக முடி வளர்ச்சியை எட்டும் பொழுது நீங்களே அதை உணர்வீர்கள்.

- Advertisement -