2 நாளில் முடி வளரும் அதிசயம் நடக்க வேண்டுமா?அப்படியானால் கடுகு எண்ணெயை இப்படி பயன்படுத்தி பாருங்கள். முடியின் அசுர வளர்ச்சியை கண்டு நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.

Mustrad oil hair tips
- Advertisement -

முடி அடர்த்தியாக்கவும், நல்ல நீளமாகவும் வளர வேண்டும் என்று நினைப்பவர்கள் முடிந்த அளவிற்கு இயற்கை முறையை முயற்சிப்பது நல்லது. அந்த வகையில் இந்த கடுகை எண்ணையை பயன்படுத்தும் போது முடி நல்ல முறையில் வளர்வதோடு, நரைமுடி கூட அவ்வளவு சீக்கிரத்தில் வராது. அது மட்டும் இன்றி முடி நல்ல சைனாக்கவும் பொடுகு போன்ற தொல்லைகள் இருந்து மீளவும் இந்த எண்ணெய் பெரிய அளவில் உதவி செய்யும். இதில் இருக்கும் விட்டமின் ஏ, கே போன்ற சத்துக்கள் முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவி செய்யும். ஆனால் இந்த எண்ணெயை நேரடியாக அப்படியே பயன்படுத்தக் கூடாது. இத்துடன் சில பொருட்களை கலந்து தான் பயன்படுத்த வேண்டும். அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த கடுகு எண்ணையை பயன்படுத்தி உபயோகிக்கும் முறைகள் அனைத்துமே நீங்கள் தலைக்கு குளிக்கும் அரை மணி நேரத்திற்கு முன்பாக தேய்த்து மசாஜ் செய்த பிறகு மைல்டான ஷாம்பு அல்லது சீயக்காய் போட்டு உங்கள் முடியை அலசி விட வேண்டும். வாங்க இப்போது இந்த கடுகு எண்ணெயுடன் எதையெல்லாம் சேர்த்து குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

குறிப்பு: 1
இந்த முறைக்கு சுத்தமான ஆலுவேரா ஜெல் தேவை. இதற்கு கடைகளில் விற்கும் ஜெல்லை பயன்படுத்தக் கூடாது. கற்றாழை மடலை எடுத்து சுத்தம் செய்து அதில் இரண்டு ஸ்பூன் ஜெல்லை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள். கடுகு எண்ணெய் இரண்டு ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் நன்றாக கலந்து உங்கள் தலையில் தேய்த்து மசாஜ் செய்து அரை மணி நேரம் கழித்து குளித்து விடுங்கள்.

குறிப்பு: 2
வெங்காய சாறு இரண்டு ஸ்பூன், கடுகு எண்ணெய் இரண்டு ஸ்பூன் இதையும் நன்றாக கலந்து தலையில் தேய்த்து மசாஜ் செய்த பின் குளிக்கலாம். இந்த முறையில் தேய்ப்பதற்கு சின்ன வெங்காயத்தை பயன்படுத்தும் போது இன்னும் ரிசல்ட் சீக்கிரமாகவே கிடைக்கும்.

- Advertisement -

குறிப்பு: 3
இதற்கு நாலு ஸ்பூன் அதிகம் புளிக்காத தயிரை எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் கடுகு எண்ணெய் இரண்டையும் நன்றாக கலந்து தேய்க்கும் போது முடி வளர்ச்சி அதிகமாவதுடன் பொடுகு தொல்லையும் நீங்கி முடி நல்ல மிருதுவாக இருக்கும்.

குறிப்பு: 4
இந்த முறையில் ஒரு முழு எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து எடுத்துக் கொள்ளுங்கள். அத்துடன் இரண்டு ஸ்பூன் கடுகு எண்ணெயை கலந்து இதையும் தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி வளர்ச்சி அதிகரிப்பதுடன் தலையில் பேன், பொடுகு போன்றவை இருந்தாலும் நீக்கி முடி வளர்ச்சியை தூண்டும்.

இதையும் படிக்கலாமே: வெறும் 4 பொருட்கள் போதும், முடி உதிர்வு, நரை முடி போன்ற பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு கருகருவென அடர்த்தியான கூந்தலை பெற முடியும்.

இந்த நான்கு குறிப்புகளில் உங்களுக்கு எந்த குறிப்பு சுலபமாக உள்ளதோ அல்லது உங்கள் முடிக்கு எந்த முறை ஏற்றுக் கொள்கிறதோ அதை தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள். முடியின் வளர்ச்சி கட்டாயமாக நீங்கள் எதிர்பார்த்ததை விட அதிகமாகவே இருக்கும். இரண்டு முறை இந்த எண்ணையை பயன்படுத்திய பிறகு நீங்களே உங்கள் தலையில் புதிய முடிகள் முளைத்திருப்பதை காண முடியும்.

- Advertisement -