கத்தை கத்தையா கட்டுக்கடங்காமல் முடி வளர கருஞ்சீரகத்தை இப்படி பயன்படுத்தினால் போதும். ஒரு நரை முடி கூட இல்லாமல் கருகரு கூந்தலை பெற அருமையான வழி.

long hair karunseeragam
- Advertisement -

அழகு என்று சொன்னாலே அதில் தலைமுடி கட்டாயமாக வந்து விடும். என்ன தான் முகம் அழகாகவும், ஆள் பார்க்க நேர்த்தியாகவும் இருந்தாலும் கூட முடியின் அழகு குறைந்து விட்டால் அவர்களின் மொத்த அழகுமே பாதித்து விடும். அழகியலில் அந்த அளவிற்கு முக்கியத்துவம் பெற்ற தலைமுடியை பராமரிப்பது இன்றைய காலக்கட்டத்தில் கொஞ்சம் கடினமான காரியம் தான். இந்த கருச்சீரக எண்ணெய் தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது முடி தொடர்பான பிரச்சனைகள் அனைத்தையும் சரி செய்து விடலாம்.

வேறு எந்த தாவரத்திற்கும் இல்லாத பல விசேஷ மருத்துவ குணங்கள் இந்த கருஞ்சீரகத்திற்கு உண்டு. இதில் இரும்புச்சத்து, சோடியம், கால்சியம் மற்றும் பொட்டாசியம் அதிகளவில் இருப்பதால் முடி தொடர்பான பிரச்சனைகளை சரி செய்ய உதவுகிறது. அதுமட்டுமின்றி முடியின் வளர்ச்சியிலும், ஆரோக்கியத்திலும் கருஞ்சீரகத்தின் பங்கு பெரும் அளவில் உள்ளது. இது முடிஉதிர்வை கட்டுப்படுத்தி முடி நீண்டு வளர உதவி செய்வதுடன், நரைமுடி வராமல் தடுக்கவும், தலையில் சொட்டை, வழுக்கை போன்ற பிரச்சனைகளால் உதிர்ந்து இருந்தாலும் அந்த இடத்தில் புதிய முடிகள் முளைக்கவும் தலையில் பூச்சி வெட்டு அரிப்பு போன்ற தொந்தரவுகள் இருந்தாலும் அதை சரி செய்யக் கூடிய ஆற்றலும் இந்த கருஞ்சீரகத்திற்கு உண்டு.

- Advertisement -

முடியின் வளர்ச்சி அதிகரிக்க கருஞ்சீரக தைலம்
இந்த எண்ணெய் தயாரிக்க முதலில் 50 கிராம் கருஞ்சீரகம், 50 கிராம் வெந்தயம் இரண்டையும் சம அளவு எடுத்து இரும்பு கடாயில் சேர்த்து லேசாக நிறம் மாறாமல் வறுத்து மிக்ஸி ஜாரில் சேர்த்து பொடி செய்து கொள்ள வேண்டும். இதற்கு செக்கில் ஆட்டிய சுத்தமான எண்ணெய்களை தான் பயன்படுத்த வேண்டும் 400 கிராம் சுத்தமான தேங்காய் எண்ணெயும் 100 கிராம் சுத்தமான விளக்கெண்ணையும் ஒன்றாக கலந்த பிறகு அதில் இந்த பொடிகளை சேர்த்துக் கொள்ளுங்கள்.

இத்துடன் கருவேப்பிலை ஒரு கைப்பிடி அளவு எடுத்து மொட மொடவென்று காய்ந்த பிறகு அதை மிக்ஸியில் அரைத்து அந்த பவுடரையும் இதில் சேர்த்துக் கொள்ளுங்கள். இவை அனைத்தையும் சேர்ந்த பிறகு எண்ணையை நன்றாக கலந்து ஒரு பாட்டிலில் ஊற்றிக் கொள்ளுங்கள். இப்போது இந்த பாட்டிலை சூரிய ஒளி படும் இடத்தில் பத்து நாட்கள் வரை வைக்க வேண்டும். இப்படி வெயிலில் வைப்பதன் மூலம் கருஞ்சீரகத்தில் இருக்கும் சத்துக்கள் அனைத்தும் சூரிய ஒளி பட்டு அதிகரிப்பதுடன், சூரிய ஒளியில் இருக்கக்கூடிய சத்துக்களும் இந்த எண்ணெயில் சேர்த்து முடி வளர்ச்சிக்கு நல்ல பலனை தரும்.

- Advertisement -

அதன் பிறகு இந்த எண்ணெயை நாம் தலை முடிக்கு தொடர்ந்து பயன்படுத்தி வரலாம். இந்த எண்ணெயை நாம் வெளியில் வைத்து பயன்படுத்தலாம். இந்த எண்ணையை நாம் தலைக்கு குளிக்கும் முன்பு சிறிது நேரம் தலையில் தேய்த்து மசாஜ் செய்த பிறகு குளிக்கலாம். அல்லது நாம் எப்போதும் பயன்படுத்தும் தேங்காய் எண்ணெய்க்கு பதிலாகவும் இந்த எண்ணையை பயன்படுத்தலாம். இரண்டுமே நல்ல பலனை தரக்கூடிய முறை தான். முடி நீளமாகவும் அடர்த்தியாகவும் கருகரு என்று வளர வேண்டும் என்று நினைப்பவர்களும் நரைமுடி வராமல் தடுக்கவும் இளநரை ஏற்படாமல் இருக்கவும் முடி உதிர்ந்த இடத்தில் எல்லாம் புதிய முடிகள் முளைக்கவும் என அனைத்து பிரச்சனைகளையும் இந்த ஒரு எண்ணெய் கொண்டு நாம் சுலபமாக சரி செய்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: கொத்துக்கொத்தா வேரிலிருந்தே உதிரும் முடியை தடுத்து நிறுத்த எந்த எண்ணெயும் வேண்டாம் இந்த பொருட்களை மட்டும் சாப்பிடுங்கள் போதும்!

இதற்கென நாம் தேவை இல்லாத கெமிக்கல் கலந்த பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை காட்டிலும் இது போல இயற்கையான முறையில் உள்ள எண்ணெய்யை தயாரித்து பயன்படுத்தும் பொழுது பலனும் அதிகம். இதனால் எந்த பக்க விளைவும் ஏற்படாது. இந்த எண்ணெய் தயாரிப்பு முறை உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இதே போல செய்து உங்கள் முடி வளர்ச்சியை அதிகரித்துக் கொள்ளலாம்.

- Advertisement -