உங்கள் முக அழகை ரொம்பவும் குறைத்துக் காட்டும் 4 தவறுகள்! இந்த தவறுகளை சரி செய்து விட்டாலே நீங்கள் பேரழகி தான்.

face11
- Advertisement -

என்னவெல்லாம் செய்தால் நாம் அழகாக மாறிவிடலாம் என்று தான் நாம் யோசிக்கின்றோமே தவிர, நம் முகத்தில் இருக்கும் பிரச்சனை கண்டு கொள்வதே கிடையாது. நம்முடைய முகத்தில் இந்த பிரச்சனைகள் எல்லாம் இருந்தால் நிச்சயமாக, எவ்வளவுதான் அழகாக மேக்கப் போட்டாலும் அது உங்களுக்கு முழுமையான அழகை கொடுக்காது. அழகான அழகை முழுமையாக பெற செய்ய வேண்டிய நான்கு விஷயங்கள் என்னென்ன. இந்த நான்கு பிரச்சனைகள் உங்கள் முகத்தில் இருந்தால் அதை ஒரு முறை இப்படி செய்து சரி செய்து பாருங்கள். நிச்சயம் நீங்கள் விரும்பிய அழகை கண்ணாடியில் பார்க்கலாம்.

மூக்குக்கு மேலே கரும்புள்ளிகள், வெள்ளை புள்ளிகள் அதாவது பிளாக்ஹெட்ஸ் ஒயிட் ஹெட் இருக்கக் கூடாது. கண்ணுக்கு கீழே கருவளையம் இருக்கக் கூடாது. முகத்தில் தேவையற்ற முடிகள் இருக்கக் கூடாது. நான்காவது முகம் சோர்வடைந்து பொலிவளைந்து இருக்கக் கூடாது. இந்த நான்கு விஷயங்களை சரி செய்ய ஒரு சில ஐடியாக்கள் இந்த குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு சரி என்று பட்டால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -

மூக்கின் மேலே இருக்கும் பிளாக்ஹெட் ஒயிட்ஹெட் நீங்க:
இதற்கான ஒரு சிறந்த தீர்வு இதுதான். இதைத் தவிர நீங்கள் வேறு எதை முயற்சி செய்து பார்த்தாலும் அதில் பாதி பலன் மட்டுமே கிடைக்கும். இதை செய்தால் பியூட்டி பார்லருக்கு போனாலும் இப்படி ஒரு பலனை உங்களால் பார்க்க முடியாது. ஒரு கிண்ணத்தில் ஜெலட்டின் பவுடர் 1 ஸ்பூன், சார்கோல் பவுடர் 1 ஸ்பூன் போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி கலந்து டபுள் பாய்லிங் மெத்தடில் சூடு செய்ய வேண்டும்.

இது வெதுவெதுப்பாக இருக்கும்போது மூக்கின் மேலே அப்ளை செய்து விட்டு அது நன்றாக காய்ந்ததும் உரித்து எடுத்து விட்டால், உங்கள் மூக்கின் மேலே இருக்கும் பிளாக்ஹெட் ஒயிஹெட் அனைத்தும் நீங்கிவிடும்.

- Advertisement -

கண்ணுக்கு கீழே இருக்கும் கருவளையம் நீங்க:
எப்போதும் கைபேசி, கணினி பார்த்துக் கொண்டிருப்பவர்களுக்கு, இரவு கண் விழிப்பவர்களுக்கு இந்த கருவளையம் நிச்சயம் இருக்கத்தான் செய்யும். உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து குறைபாடு இருந்தாலும் கருவளையம் இருக்கும். இந்த ரெமிடியை முயற்சி செய்வதற்கு முன்பு உங்கள் உடல் ஆரோக்கியத்தை கொஞ்சம் கவனியுங்கள்.

பிறகு இந்த ரெமடியை ட்ரை செய்யலாம். திரிபலா பவுடர் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். கடுக்காய், மாசிக்காய், ஜாதிக்காய், சேர்த்த பொடியில் கொஞ்சமாக ரோஸ் வாட்டர் ஊற்றி பேஸ்ட் ஆக கலந்து இதை கண்ணுக்குக் கீழே பேக் போடவும். 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த தண்ணீரில் கழுவி விடவும். வாரத்தில் இரண்டு நாட்கள் இந்த பேக்கை தொடர்ந்து போட்டு வர கருவளையம் குறையும்.

- Advertisement -

முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை நீக்க:
முகத்தில் இருக்கும் தேவையற்ற முடிகளை சட்டென நீக்கி முகம் அழகாக வேண்டும் என்றால் பேஸ் ரைசர் பயன்படுத்தலாம். தவறு கிடையாது. தவிர்த்து வேக்சிங், மற்றபடி த்ரெட்டிங் இவைகளை எல்லாம் செய்தால் நம்மளுடைய முகம் வீக்கம் அடைந்து ரேஷஸ் வருவதற்கு வாய்ப்புகள் உள்ளது. பர்மனெண்டாக முடிகளை நீக்க வேண்டும் என்றால் லேசர் ட்ரீட்மெண்டை சில பேர் முயற்சி செய்கிறார்கள். ஆனால் அது எல்லோராலும் முடியாது அல்லவா. ஆகவே ரேசர் கொண்டு தேவையற்ற முடிகளை நீக்கி கொள்ளுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடலை மாவு இருந்தா போதும் வறண்ட, எண்ணெய் வடியும் சருமம் கூட நிமிடத்தில் பளிச்சின்னு பிரகாசமா மாத்திட முடியும். இந்த வெயிலில் கூட முகம் எப்போதும் பளிச்சென்று பிரகாசமாக இருக்க கடலை மாவை இப்படி ட்ரை பண்ணி பாருங்க.

முகம் பொலிவு பெற:
ஒரு சிறிய கிண்ணத்தில் ஆலோவேரா ஜெல் 1 ஸ்பூன்,  விட்டமின் ஈ கேப்ஸ்யூல் உள்ளே இருக்கும் ஜெல் 1, பீட்ரூட் ஜூஸ் இந்த மூன்று பொருட்களை ஒன்றாக கலந்து முகத்தில் எல்லா இடங்களிலும் படும்படி வட்ட வடிவில் மசாஜ் செய்து கொள்ளவும். இரவு தூங்கும் போது இதை முகத்தில் போட்டுக் கொள்ளுங்கள் மறுநாள் காலை முகத்தை கழுவிக் கொண்டால் முகம் பொலிவு பெறும்.

தினமும் கூட இந்த ஜெல்லை முகத்தில் போடலாம் தவறு கிடையாது. இல்லையென்றால் ஒரு தக்காளியை இரண்டாக வெட்டி முகத்தில் வைத்து வட்ட வடிவில் மசாஜ் செய்தாலும் முகம் உடனடியாக பொலிவு பெறும். மேலே சொன்ன அழகு குறிப்பு உங்களுக்கு ஆர்வம் இருந்தால் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -