முகத்தில் சுருக்கங்களாக இருக்கிறதா? ஒரே வாரத்தில் சுருக்கம் நீங்கி உங்க முகம் இளமையாக இருக்க வீட்டில் இருக்கும் 2 பொருளில் இதை ட்ரை பண்ணுங்க!

muga-surukkam-kadalai-maavu
- Advertisement -

வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து சில விஷயங்களை எளிதாக நாம் விரட்டி அடித்து விடலாம். அதில் முகச்சுருக்கமும் ஒன்று! முகத்தில் ஆங்காங்கே சிலருக்கு இளமையான தோற்றம் இல்லாமல், சுருங்கி காணப்படும். இதை முகச்சுருக்கம் என்கிறோம். இந்த முகச்சுருக்கத்தை ரொம்பவே எளிதாக விரட்டி அடிப்பது எப்படி? என்பதை தான் இந்த அழகு குறிப்பு பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

முகச்சுருக்கம் நீங்க பெரும்பாலும் இன்று பயன்படுத்தப்படுவது முட்டை! இந்த முட்டையில் இருக்கும் மூலக்கூறுகள் முகத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்கி, முகத்தை பளபளன்னு பாலிஷாக வைத்துக் கொள்வதற்கு உதவுகிறது. அது மட்டும் அல்லாமல் முகத்தை இறுக செய்கிறது. இதனால் முகம் தளர்வாக இருப்பதில் இருந்து சற்று இறுக ஆரம்பிக்கிறது.

- Advertisement -

முகத்தில் இருக்கும் சரும பகுதி எப்பொழுதும் தளர்வாக இருக்கக் கூடாது. இதனால் முகம் தொங்கிப் போனது போல காணப்படும். சிறுவயதிலேயே முதிர்ந்த தோற்றமும் தென்படுகிறது. எனவே சருமத்தை டைட்டாக வைத்துக் கொள்வதற்கு, இந்த முட்டை ரொம்பவே உதவியாக இருக்கும். இந்த முட்டையை முழுதாக ஒன்றை உடைத்து ஒரு பவுலில் ஊற்றிக் கொள்ளுங்கள்.

பின்னர் இது எந்த அளவிற்கு கெட்டியாக திக் பேஸ்ட் ஆக வரவழைக்க முடியுமோ, அந்த அளவிற்கு கடலை மாவு இதனுடன் சேர்த்து பேஸ்ட் ஆக கரைத்து வைத்துக் கொள்ளுங்கள். முட்டையுடன் கடலை மாவு சேர்க்கும் பொழுது நன்கு கலந்து விடும். ஒன்றுடன் ஒன்று மிக்ஸ் ஆகி பேஸ்ட் போல மாறியதும், இதை உங்களுடைய கண்கள் மற்றும் உதடுகளை தவிர மற்ற எல்லா இடங்களிலும் அப்ளை செய்து கொள்ளுங்கள். அப்படியே அரை மணி நேரம் ஊற விட்டு விடுங்கள்.

- Advertisement -

அரை மணி நேரம் நன்கு ஊறி உலர்ந்து காய வேண்டும். அப்பொழுது தான் சருமமானது டைட்டாக இறுக ஆரம்பிக்கும். தளர்வாக தளதளவென்று இருந்த உங்களுடைய தோல் இறுகுவதை அந்த பேஸ்ட் காய காய நீங்கள் உணர ஆரம்பிப்பீர்கள். இந்த சமயத்தில் நீங்கள் முகத்தை சாதாரண தண்ணீரில் கழுவி சுத்தம் செய்து கொள்ளுங்கள். இது போல தொடர்ந்து தினமும் ஒரு வாரம் நீங்கள் அரை மணி நேரம் ஒதுக்கி செய்து வந்தாலே உங்களுடைய சருமமானது இளமையான தோற்றத்துடன் பொலிவுடன் பளபளன்னு ஜொலிக்க ஆரம்பிக்கும். முகத்தில் இருக்கும் சருமத்துளைகள் அனைத்தும் இறுக ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:
கண் கருவளையம் நீங்க இயற்கை சொல்லும் இந்த 5 குறிப்புகள் போதும். இதை பின்பற்றினாலே ஐந்து நாட்களில் கண் கருவளையம் இருந்த தடம் தெரியாமல் காணாமல் போகும்.

சரும துளைகளுக்குள் இருக்கும் அழுக்குகள், கிருமிகள் அனைத்தும் நீங்கும். இறந்த செல்கள் வெளியேறும் இதனால் துளைகள் பெரிதாவதை தடுக்கலாம். தொடர்ந்து ஏழு நாட்களும் இதை நீங்கள் உங்களுடைய முகத்தில் அப்ளை செய்வதால் உங்களுடைய முகத்தில் ராஷஸ் அல்லது ஏதாவது மாற்றம் தெரிய ஆரம்பித்தால் இதனை தவிர்த்துக் கொள்ளுங்கள். நீங்கள் பயன்படுத்தும் கடலை மாவு தரமானதாக இருக்க வேண்டும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் வீட்டில் அரைத்ததாக இருந்தால் நன்றாக இருக்கும். இயற்கையான பொருட்கள் என்றாலும் அதன் தரம் குறித்தே நம்முடைய சருமம் பாதுகாப்பாக இருக்கும்.

- Advertisement -