பாட்டியாகும் வயதில் கூட பியூட்டியாக இருக்க வேண்டும் என்றால், நிச்சயமாக இதை தான் பயன்படுத்த வேண்டும். முதுமை தோற்றத்தை வர விடாமல் தடுக்கும் சூப்பர் டிப்ஸ்.

Age wrinkels
- Advertisement -

ஒருவருக்கு வயதாகி விட்டது என்பதை முதலில் வெளிப்படுத்துவதே முகம் தான். முன்பெல்லாம் 50 வயதை கடந்தவர்களை பார்த்தால் தான் ஏதோ கொஞ்சம் வயது ஆனவர்கள் போல தோன்றும். இப்போதெல்லாம் சிறு வயது பிள்ளைகள் கூட முகத் தோல் சுருங்கி அதிக வயதானவர்கள் போல் தெரிகிறார்கள். அப்படி இளம் வயதிலேயே இந்த முகச் சுருக்கம் வராமல் தடுப்பது எப்படி என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

முகத்தில் சுருக்கங்கள் தோன்றி வயதான தோற்றம் வருவதற்கு அதிக காரணங்கள் உண்டு. முதல் காரணம் மன உளைச்சலுக்கு ஆளாவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். சரியான உணவு, தேவையான அளவு தண்ணீர், சத்து மிகுந்த ஆகாரம், நல்ல தூக்கம் முறையான உடற்பயிற்சி இவையெல்லாம் சரியாக இருக்கும் பொழுது இந்த முகச்சுருக்கம் பிரச்சனை அதிக நாட்களுக்கு தள்ளி போட முடியும். இத்துடன் இந்த ஒரு பேக்கை நாம் தயார் செய்து பயன்படுத்தும் போது முகச்சுருக்கம் என்பதை அதிக நாட்கள் தள்ளிப் போட முடியும். வாங்க அந்த பேக் எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முகச்சுருக்கம் வராமல் தடுக்கும் பேக் தயார் செய்யும் முறை:
இந்த பேக்கை தயார் செய்ய முதலில் ஒரு சுத்தமான பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் ஆலுவேரா ஜெல் இதற்கு நாம் வீட்டில் வளர்க்கும் கற்றாழை ஜெல்லை கூட சுத்தம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். அத்துடன் ரெண்டு ஸ்பூன் பால், இதற்கு காய்ச்சிய பால் காய்ச்சாத பால் எதுவாக இருந்தாலும் பயன்படுத்தலாம். ஒரு சிலருக்கு பால் சேர்க்கும் போது சருமத்தில் அலர்ஜி தோன்றும். அப்படியானவர்கள் இந்த பாலுக்கு பதிலாக தயிரையும் சேர்த்துக் கொள்ளலாம்.

இவை இரண்டையும் சேர்த்து நன்றாக கலந்த பிறகு இத்துடன் ஒரு டேபிள் ஸ்பூன் பொட்டுக் கடலை மாவு. பொதுவாக அழகு சம்பந்தமான எந்த பேக் தயாரிக்கவும் கடலை மாவை தான் பயன்படுத்துவார்கள். கடலை மாவு சில சமயங்களில் முகத்தில் இருக்கும் ஈரத் தன்மையை முற்றிலும் நீக்கி வறட்சித் தன்மையை ஏற்படுத்தி விடும். ஆகவே இந்த பேக்கிற்கு பொட்டுக் கடலை மாவை பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இப்போது இவை மூன்றையும் நன்றாக கலந்த பிறகு முகத்தை சுத்தம் செய்து துணி வைத்து ஈரமில்லாமல் துடைத்த பிறகு இதை உங்கள் முகத்தில் பேக் போல போட்டு ஒரு பத்து நிமிடம் அப்படியே விடுங்கள். 10 நிமிடம் கழித்து உங்கள் முகத்தில் லேசாக மசாஜ் செய்து முகத்தை அலம்பி விட்டால் போதும்.

இதை செய்த பிறகு உங்கள் வீட்டில் மாஸ்டர்ரைசர் இருந்தால் பயன்படுத்துங்கள். அல்லது பாதாம் ஆயில், ஆலிவ் ஆயில் இரண்டில் எந்த எண்ணெய் இருந்தாலும் அதை ஒரு சொட்டை மட்டும் உங்கள் முகத்தில் தேய்த்து விடுங்கள் போதும்.

- Advertisement -

பால் ஆலுவேரா இவை இரண்டுமே முகத்தில் உள்ள இறந்த செல்களை நீக்கி முகத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து புதிய சொற்கள் உருவாக உதவி செய்யும். அது மட்டும் இன்றி இதில் சேர்க்கப்படும் பொட்டுக் கடலை நல்ல நிறத்தை கொடுப்பதில்லாமல் முகச்சுருக்கம் வராமல் முகத்தில் சதைகள் இறுகச் செய்து முகத்திற்கு தனி பொலிவைத் தரும். இந்த பேக்கை நாம் தினம் தினம் தயார் செய்து பயன்படுத்துவது மிகவும் நல்லது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் வாழைப்பழம் மட்டும் இருந்தா 10 பைசா செலவில்லாமல் நம்ம முகத்தை பளிங்கு போல 10 நிமிடத்தில் மாற்றலாமே!

இந்த எளிய குறிப்பை தெரிந்து கொண்டு முகச் சுருக்கம் வருவதற்கு முன்பாகவே வாரம் ஒரு முறை அல்லது வாரத்துக்கு இரண்டு முறை பயன்படுத்தி வரும் போது முகச் சுருக்கம் என்பதை வராமலே தடுத்து விட முடியும். இந்தக் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் இது ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -