முக வசியம் தரும் கல் உப்பு

sivan kaluppu
- Advertisement -

ஒவ்வொரு உயிரினத்திற்கும் முகவசியம் என்பது கண்டிப்பான முறையில் இருக்கும். இந்த முக வசியம் நீங்குவதற்குரிய காரணமாக கருதப்படுவது எதிர்மறை சக்திகள் தான். முகத்தில் அருளே இல்லை, கலை இழந்து இருக்கிறது, கருமையாக இருக்கிறது என்று கிராமப்புறங்களில் கூறி இருப்பதை நாம் கேட்டு இருப்போம். அப்படி ஒருவருடைய முகத்தில் அருள் இல்லாமல் இருந்தால் உடனே தீய சக்திகளால் பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது என்று கோவிலுக்கு அழைத்துச் சென்று வேப்பிலைகளால் மந்திரிக்கும் பழக்கத்தையும் இன்றளவும் கிராமப்புறங்களில் நடந்திருக்கிறது.

எதையோ பார்த்து பயந்துவிட்டது குழந்தை சாப்பிட மாட்டேன் என்கிறது என்று சொல்லிவிட்டு மசூதிக்கு அழைத்துச் சென்று ஓதும் நபர்களும் பலர் இருக்கிறார்கள். இவை அனைத்துமே முகவசியத்திற்குரிய ஒரு முறை தான். இந்த முகவசியத்தை ஏற்படுத்தவும் அதேசமயம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகளை நீக்கவும் செய்யக்கூடிய ஒரு கல் உப்பு பரிகாரத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

ஒரு சிலர் முகத்தை பார்க்கும் பொழுது மகாலட்சுமி போல் தோன்றுகிறது என்று நினைப்போம். இன்னும் சில முகத்தை பார்க்கவே பிடிக்காது. ஏதோ ஒரு வித நெகட்டிவ் எனர்ஜி இருப்பது போல் தோன்றும். கண்டிப்பான முறையில் இந்த நிலை அனைவருக்கும் ஏற்பட்டு தான் இருக்கும். அப்படி எதிர்மறை ஆற்றல்கள் அதிகரித்து இருக்கும் நபர்களின் முகத்தை தெய்வம்சம் பொருந்திய முகமாக இருக்காது. அதே சமயம் கண் திருஷ்டியாலும் கூட முகத்தின் வசிய தன்மை கெடும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட முகவசியத்தை நாம் அதிகரித்துக் கொள்ள செய்யக்கூடிய எளிமையான வழிமுறையை பார்ப்போம்.

இதை எந்த நாளில் வேண்டுமானாலும் செய்யலாம். தொடர்ந்து மூன்று நாட்கள் செய்தால் போதும். மாதத்திற்கு ஒரு முறையோ, 3 மாதத்திற்கு ஒரு முறையோ, 6 மாதத்திற்கு ஒரு முறையோ அல்லது வருடத்திற்கு ஒரு முறையோ அல்லது நமக்கு ஏதோ ஒரு எதிர்மறை ஆற்றல் இருக்கிறது என்று தோன்றும் போதெல்லாம் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம்.

- Advertisement -

இந்த பரிகாரத்திற்கு நமக்குத் தேவைப்படுவது கல் உப்பு மட்டுமே. வேறு எதுவும் தேவையில்லை. காலை எழுந்ததும் குளிப்பதற்கு முன்பாக ஒரு பாத்திரத்தில் சுத்தமான தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்ளுங்கள். அதற்குள் மூன்று கைப்பிடி கல்லுப்பை சேர்க்க வேண்டும். முதலில் ஒரு கைப்பிடி கல்லுப்பை எடுத்து “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை 21 முறை உச்சரித்து தண்ணீரில் போட வேண்டும்.

இரண்டாவது முறை ஒரு கைப்பிடி அளவு உப்பை எடுத்து மறுபடியும் 21 முறை “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை கூறி தண்ணீரில் போட வேண்டும். மூன்றாவது முறையும் கல் உப்பை கையில் எடுத்து “ஓம் நமசிவாய” என்னும் மந்திரத்தை 21 முறை கூறி தண்ணீரில் போட்டு நன்றாக உப்பை கரைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

இந்த தண்ணீரில் உப்பு அனைத்தும் கரைந்த பிறகு இந்த உப்பு தண்ணீரை இரண்டு கைகளிலும் எடுத்து மூன்று முறை முகத்தை கழுவ வேண்டும். மீதம் இருக்கும் தண்ணீரை குளிக்கும் தண்ணீருடன் சேர்த்து நாம் குளித்துக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து மூன்று நாட்கள் காலையிலும் மாலையிலும் செய்ய வேண்டும். இதன் மூலம் நம்மிடம் இருக்கக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் அனைத்தும் நீங்கி தெய்வீக சக்தி அதிகரித்து முக வசியம் உண்டாகும் என்று கூறப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: ஏப்ரல் மாத மைத்ரேய முகூர்த்தம்

மிகவும் எளிமையான இந்த உப்பு பரிகாரத்தை நம்பிக்கையுடன் செய்து தெய்வீக அருளை பெற்று நலமுடன் வாழலாம்.

- Advertisement -