முகத்தில் இருக்கும் மங்கு, கருமை, கரும்புள்ளி, கருவளையம் அனைத்தும் மாயமாய் மறைந்து முகம் கண்ணாடி போல மின்ன சமையல் கட்டில் இருக்கும் இந்த 2 பொருள் போதுமே!

potato-turmeric-face-pack
- Advertisement -

மாசு, மரு இல்லாமல் முகம் கண்ணாடி போல பொலிவாக இருந்தால் தான் நமக்குள் தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். பொலிவான தோற்றம் பெற முகத்தில் இருக்கக் கூடிய மங்கு, கரும்புள்ளி, கருவளையம், கருமை ஆகியவற்றை 10 பைசா செலவில்லாமல் நம் வீட்டில் இருக்கக் கூடிய இந்த 2 பொருட்களை வைத்தே விரட்டி அடிக்கலாம். அழகான சருத்திற்கு நாம் செய்ய வேண்டியது என்ன? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு ரகசியத்தின் மூலம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

சருமத்தில் இருக்கக் கூடிய மெல்லிய துவாரங்கள் வழியே செல்லக் கூடிய அழுக்குகள், தூசுகள் போன்றவற்றால் உண்டாக கூடியது இவை அனைத்தும் ஆகும். நாம் இயற்கையாகவே நல்ல அழகுடன் இருந்தாலும், வெயிலில் அதிகம் சுற்றி திரிவதாலும், தூசுகளில் அதிகம் செல்வதாலும் நாட்கள் செல்ல செல்ல நம் பொலிவான தோற்றத்தை இழந்து வருகிறோம். இழந்த இந்த தோற்றத்தை மீண்டும் அடைவது என்பது கொஞ்சம் சிரமமான காரியம் தான். இதற்காக ஆயிரக்கணக்கில் செலவு செய்து பியூட்டி பார்லர் சென்று பேசியல் செய்து கொள்ள வேண்டிய அவசியம் இனி இல்லை!

- Advertisement -

நம் வீட்டில் நம்முடைய சமையல் அறையில் பயன்படுத்தக் கூடிய இந்த ரெண்டு முக்கியமான பொருட்களை ஒன்றாக சேர்த்து முகத்திற்கு பயன்படுத்தினாலே முகம் பேரழகாக ஜொலிக்கும். இதற்கு முதலில் ஒரு மீடியம் சைஸ் அளவிற்கு உருளைக் கிழங்கை எடுத்துக் கொள்ளுங்கள். உருளைக்கிழங்கை நன்கு சுத்தம் செய்து மேல் தோலை கொஞ்சம் கூட இல்லாமல் நன்கு வழித்து சீவி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நன்கு கழுவி கொள்ளுங்கள். இந்த உருளைக்கிழங்கை தேங்காய் துருவும் துருவலில் போட்டு மெல்லிய துருவலாக துருவி எடுத்துக் கொள்ளுங்கள்.

இந்த துருவலை கைகளால் நன்கு பிழிந்து எடுத்தாலே அதிலிருந்து சாறு வர துவங்கும். இந்த உருளைக்கிழங்கு ஜூஸில் ஏராளமான நன்மைகள் அடங்கியுள்ளன. இது நம்முடைய சருமத்தை ப்ளீச் செய்து பட்டு போல தங்கம் மாதிரி மாற்றி கொடுக்கும் ஆற்றல் கொண்டுள்ளது. இதில் இருக்கும் ஸ்டார்ச் நம்முடைய சருமத்தை சுத்தம் செய்து அழுக்குகளை அகற்றி, இறந்த செல்களை நீக்கும். எப்பேர்பட்ட சருமத்தினராக இருந்தாலும் முதலில் நீங்கள் உங்களுடைய முகத்தை ஆவி பிடித்து ஸ்டீம் செய்து கொள்ளுங்கள். வெறும் தண்ணீரிலேயே நீங்கள் ஆவி பிடிக்கலாம்.

- Advertisement -

இதனால் முகத் துவாரங்களுக்குள் இருக்கக்கூடிய அழுக்குகள், கிருமிகள், பாக்டீரியாக்கள் போன்றவற்றை வெளியேற்றி முகத்தை முதலில் சுத்தம் செய்து விடும். அதன் பிறகு முகத்தை மென்மையாக ஒரு காட்டன் துணியால் ஒற்றி எடுத்துக் கொள்ளுங்கள். பிறகு நீங்கள் தயார் செய்து வைத்துள்ள உருளைக்கிழங்கு ஜூஸ் உடன் தேவையான அளவிற்கு சுத்தமான மஞ்சள் தூள் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படிக்கலாமே:
ஒரே நாளில், முடி உதிர்வை நிறுத்தி ஒட்டுமொத்த முடியையும் வலுவாக மாற்ற, ஒரே வழி இது மட்டும்தான். 10 ரூபாய் செலவில் பவர்ஃபுல்லான ரெமெடி.

மஞ்சள் தூள் சிறந்த கிருமி நாசினி மற்றும் அழகு பொருட்களில் அதிகம் பயன்படுத்தக்கூடிய ஒரு மூலிகையாக இருக்கிறது. இவை இரண்டையும் கலந்த பின்பு நைஸ் ஆனா பேஸ்ட் போல கிடைக்கும் இதை, நீங்கள் முகம் முழுவதும் தடவி நன்கு உலர விட்டுவிட வேண்டும். ஒரு 15 இல் இருந்து 20 நிமிடம் உலர விட்டு பின்பு முகத்தை வெதுவெதுப்பான நீரினால் கழுவி கொள்ளுங்கள். அவ்வளவுதான், உங்களுடைய முகம் தங்கம் மாதிரி ஜொலிக்கும். இது போல வாரம் ஒரு முறை நீங்கள் செய்து பாருங்கள். மங்கு, கருவளையம், கருமை, கருந்திட்டுக்கள், கரும்புள்ளி, வெண்புள்ளி என்று முகத்தில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் பெரும்பாலும் விரட்டி அடிக்கப்பட்டு முகம் பளிங்கு மாதிரி ஜொலிக்கும்.

- Advertisement -