முகம் ஒரே நாளில் பளபளப்பாக மாற இதை ஒரு முறை போட்டாலே போதும்.

egg face pack lady
- Advertisement -

முகம் நல்ல நிறமாக மாறி பளபளப்பாக வேண்டும் என்று அனைவரும் நினைப்பது உண்டு. அதுவும் உடனடியாக மாற வேண்டும் என்பது தான் அனைவரின் விருப்பமாக உள்ளது. ஏனெனில் இன்றைய கால சூழ்நிலையில் எதற்கும் யாரும் காத்திருக்க நேரம் இருப்பதில்லை. அப்படியான இந்த சூழ்நிலையில் ஒரே ஒரு முறை நீங்கள் போடும் இந்த பேக்கினால் முகம் அவ்வளவு பிரகாசமாக மாறும் என்பது ஆச்சரியமான விஷயம் தானே.

இந்த அழகு குறிப்பு பதிவில் ஒரே நாளில் முகத்தை எப்படி பிரகாசமாக மாற்றுவது என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம். அதற்கான அதிக செலவு செய்யாமல், வீட்டில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை வைத்து இந்த எளிமையான பேக்கை அதே நேரத்தில் சுலபமாக எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம் வாங்க.

- Advertisement -

ஒரே நாளில் முகம் பளபளப்பாக மாற

இந்த ஃபேஸ் பேக் தயாரிக்க தேவையான முக்கிய பொருள் முட்டை தான். முட்டை முகத்தை நிறமாக்கி முகத்தின் அழுக்குகளை நீக்குவதோடு மட்டுமில்லாமல் முகம் எப்போதும் இளமையாக இருக்க உதவி செய்யும். முதலில் ஒரு பவுலில் ஒரு முட்டையை உடைத்து ஊற்றிக் கொள்ளுங்கள்.

இத்துடன் அரை டீஸ்பூன் பேஸ்ட், ஒரு டேபிள் ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் ரோஸ் வாட்டர் இவை மூன்றையும் சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு குழைத்துக் கொள்ளுங்கள். தயிருக்கும் நம் முகத்தின் நிறத்தை அதிகரிக்க கூடிய சக்தி அதிகம் உண்டு. அதே நேரத்தில் முகத்தில் இருக்கும் தேவையற்ற எண்ணெய் பசைகளை நீக்கி முகப்பரு வராமல் தடுக்கும்.

- Advertisement -

ரோஸ் வாட்டர் நம் முகத்தில் இருக்கும் வறட்சித் தன்மையை நீக்கி முகத்தை எப்போதும் புத்துணர்ச்சியுடன் வைத்து இருக்கும். இத்துடன் சேர்த்து இருக்கும் பேஸ்ட்டும் முகத்தில் வெய்யிலால்லான கரு திட்டுகளை உடனே நீக்கக் கூடிய ஆற்றல் கொண்டது. இவையெல்லாம் சேர்த்து நன்றாக கலந்த பிறகு ஒரே ஒரு விட்டமின் ஈ ஆயில் கேப்சூல் சேர்த்துக் மட்டும் கொள்ளுங்கள்.

இந்த கேப்சிலும் நம்முடைய நிறத்தை தக்க வைக்கவும் முகத்தை எப்போதும் இளமையாக வைத்திருக்கவும், கண் கருவளையம் நீக்கவும் உதவி செய்யும். இந்த அனைத்தும் ஒன்றாக கலந்த பேக்கை உங்களுடைய முகத்தில் தேய்த்து பத்திலிருந்து பதினைந்து நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள்.

- Advertisement -

இந்தப் பேக்கில் முட்டை சேர்த்து இருப்பதால் முகத்தில் பிடிப்பது போல இருக்கும் பயப்பட வேண்டாம் அப்படியே விட்டு விடுங்கள். 15 நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீர் கொண்டு அலம்பி விடுங்கள். முகம் அத்தனை பிரகாசமாக மாறி பளிச்சென்று இருக்கும்.

இதையும் படிக்கலாமே: முடி உதிர்வை தடுத்து புதிய முடிகளை வளர வைக்கும் கடுகு.

நீங்கள் வெயிலில் எங்கு சென்று வந்தாலும் சரி அல்லது திடீரென ஏதாவது விசேஷத்திற்கு கிளம்ப வேண்டும் என்றாலும் இந்த பேக்கை போட்டு கொள்ளலாம். முகம் உடனடியாக பளிச்சென்று மாறுவதுடன் நல்ல பிரகாசமாகவும் இருக்கும். இந்தக் குறிப்பு உங்களுக்கு பிடித்திருந்தால் நீங்களும் ஒரு முறை முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -