ஒரே இரவில் உங்கள் முகம் பளிச்சின்னு மாறி பேரழகி ஆகும் அதிசயம் நடக்க வேண்டுமா? அப்படியானால் இந்த பேக் ட்ரை பண்ணி பாருங்க. ஒரே இரவில் இத்தனை அழகு கூடுமா என்பதை நீங்கள் கனவிலும் நினைத்திருக்க மாட்டீர்கள்.

- Advertisement -

முகம் நல்ல நிறத்துடன் பார்க்க பளிச்சென்று வைத்திருக்க வேண்டும் என்று நினைக்காதவர்கள் யாரும் இல்லை. அதற்காக நாம் அழகு நிலையம் சென்று அதிக அளவில் செலவு செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே செலவில்லாமல் அதே நேரத்தில் முகத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் முகத்தை எப்படி வெண்மையாக மாற்றுவது என்பதை பற்றி தான் இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

முகத்தை நல்ல நிறமாக மாற்ற வேண்டும் என்றால் முதலில் முகத்தில் இருக்கும் அழுக்கு இறந்த செல்கள் அனைத்தையும் வெளியேற்ற வேண்டும். இவை வெளியேறினாலே முகம் நல்ல ஒரு பளபளப்பை கொடுக்க ஆரம்பித்து விடும். முகத்திற்கு எந்த வித பேக்கை பயன்படுத்துவதாக இருந்தாலும் முதலில் முகத்தில் இருக்கும் இந்த இறந்த செல்கள், அழுக்கு அனைத்தையும் வெளியேற்றிய பிறகு தான் பேக் போட வேண்டும். அப்போது தான் நீங்கள் போடும் பேக்கிற்கான முழு பலனையும் பெற முடியும்.

- Advertisement -

இப்போது இந்த குறிப்பில் தயாரிக்கப்படும் இந்த பேக்கானது முகத்தில் தங்கியிருக்கும் அழுக்கு, இறந்த செல்கள் அனைத்தையும் வெளியேற்றுவதுடன், முகத்தின் அழகையும், நிறத்தையும் கூட்டி கொடுக்கக் கூடியது. ஒரே பேக்கில் இந்த இரண்டு விஷயங்களையும் செய்து விடலாம். இதற்கென தனித்தனியாக நேரமும் பொருளும் செலவு செய்ய வேண்டியது இல்லை. வாங்க இப்போ அந்த பேக்கை எப்படி தயார் செய்வது என்று தெரிந்து கொள்ளலாம்.

முகம் வெள்ளையாக பேஸ் பேக் தயாரிக்கும் முறை:
இதற்கு சுத்தமான பவுல் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் ஒரு டீஸ்பூன் காபி பவுடர் இதற்கு இன்ஸ்டன்ட் காபி பவுடர் எது வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்திக் கொள்ளலாம். அடுத்ததாக ஒரு ஸ்பூன் அரிசி மாவு. இதற்கு நீங்கள் வீட்டில் அரைத்து வைத்திருக்கும் அரிசி மாவையும் பயன்படுத்தலாம் அல்லது கடைகளில் விற்கும் அரிசி மாவு புட்டு மாவு போன்றவற்றை கூட இதற்கு பயன்படுத்தலாம். இவை இரண்டையும் ஒன்றாக கலக்க ஒரு ஸ்பூன் நல்ல கெட்டியான தயிர் சேர்த்து ஒரு நிமிடம் நன்றாக கலந்தால் இது ஒரு கிரீம் பதத்திற்கு நமக்கு கிடைத்து விடும்.

- Advertisement -

இந்த பேக்கை போடுவதற்கு முன்பாக ஏதேனும் ஒரு ஃபேஸ் வாஷில் உங்கள் முகத்தை கழுவி விடுங்கள். சோப்பு பயன்படுத்த வேண்டாம். அடுத்து சுத்தமான காட்டன் துணி வைத்து முகத்தை துடைத்த பிறகு இந்த பேக்கை உங்கள் முகத்தில் போட்டு கொள்ளுங்கள். அதன் பிறகு முகத்தை கீழிருந்து மேலாக ஐந்து நிமிடம் வரை லேசான மசாஜ் கொடுங்கள். இப்படி செய்வதால் முகம் வெண்மையாக மாறுவதுடன் தோள்கள் சீக்கிரம் சுருங்காமல் அதிக நாட்கள் முகம் இளமை தோற்றத்துடன் இருக்க முடியும்.

ஐந்து நிமிடம் மசாஜ் செய்த பிறகு மேலும் ஒரு பத்து நிமிடம் இந்த பேக் உங்கள் முகத்திலே இருக்கட்டும். அதன் பிறகு சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை கழுவிய பிறகு முகத்தை துடைத்து விட்டு அப்படியே உறங்கி விடுங்கள். மறுநாள் காலையில் உங்கள் முகத்தைப் பார்த்தால் நீங்களே அசந்து போகும் அளவிற்கு அவ்வளவு பளிச்சென்று இருக்கும்.

இதையும் படிக்கலாமே: மென்மையான உதடுகள் பெற, உதடு கருமை நீங்கி ரோஸ் நிறமாக மாற அதிகம் செலவு செய்யாதீங்க இத செய்ங்க போதும்!

இந்த எளிமையான குறிப்பின் மூலம் உங்கள் முகத்தை இயற்கையாக நிறமூட்டி கொள்ளலாம். இதனால் எந்த ஒரு பக்க விளைவும் கிடையாது. இதில் தயிர் சேர்த்தால் ஒத்துக் கொள்ளாது என்பவர்கள் தயிருக்கு பதிலாக ரோஸ் வாட்டர் கூட சேர்த்துக் கொள்ளலாம். இந்த அழகு குறிப்பு உங்களுக்கும் பிடித்திருந்தால் நீங்களும் இதை ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -