உங்க முகம் பால் போல பளிச்சியென்று மாற, தினமும் 5 நிமிஷம், 5 நாள் மட்டும் இதை செஞ்சு பாருங்க, அப்புறம் நம்மளா இவ்வளவு கலராக மாறிட்டோம்ன்னு நீங்களே நினைப்பீங்க.

- Advertisement -

முகம் அழகாக இருக்க வேண்டும் என்று தான் எல்லோரும் மெனக்கெட்டு பார்லர் சென்று செலவு செய்து முகத்தை அழகாக்கி கொள்கிறார்கள். அப்படியானால் முகத்தை அழகுப்படுத்த பார்லரே செல்ல வேண்டாம் என்று கூறவில்லை. அடிக்கடி பார்லர் செல்லாமல் நம் வீட்டில் இருக்கும் சில பொருட்களை வைத்து முகத்தை அழகாக்கி கொள்ளலாம். இதனால் நம் சருமத்திற்கும் நல்லது. அப்படி முகத்தை அழகாக, எந்தெந்த பொருட்களை வைத்து எப்படி நம்மை அழகுப்படுத்திக் கொள்வது என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க

பளிச்சென்ற பால் போன்ற வெள்ளை சருமத்தை பெற:
முதலில் முகத்தை கிளின்சினிங் செய்ய வேண்டும் அதாவது சுத்தப்படுத்த வேண்டும். அதற்கு தக்காளி சாறு ஒரு ஸ்பூன், தயிர் ஒரு ஸ்பூன் இரண்டையும் நன்றாக பேஸ்ட் போல கலந்து கொள்ளுங்கள். இந்த பேஸ்டை பஞ்சில் தொட்டு உங்கள் முகத்தில் வட்ட வடிவில் தேய்த்து கொடுங்கள். ஐந்து நிமிடம் இதை தேய்க்க வேண்டும். இப்படி தேய்ப்பதால் உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்கள், அழுக்கு எல்லாம் நீங்கி முகம் சுத்தம் ஆகி விடும்.

- Advertisement -

அடுத்து முகத்தை ஸ்கிரப் செய்ய வேண்டும். இதன் மூலம் உங்கள் முகத்தில் அழுக்கு நீங்கி முகத்தின் உள்ளே துளைகள் திறந்து, அடுத்து போடும் பேக் ஆனது முகத்தினுள் சென்று வேலை செய்ய உதவி புரியும். அதற்கு ஒரு ஸ்பூன் தக்காளி சாறுடன், ஒரு ஸ்பூன் ரவை இரண்டையும் நன்றாக கலந்து அதை உங்கள் முகத்தில் தேய்த்து விடுங்கள். இதை அதிக நேரம் போட்டு தேய்க்க வேண்டாம். லேசாக தேய்த்து விட்டு முகத்தை அலம்பி விடுங்கள் போதும். ரவையில் உள்ள கொர கொரப்பு தன்மை உங்கள் முகத்தில் ஒரு ஸ்க்ரப்பர் போல செயல் பட்டு முகத்தை சுத்தம் செய்யும்.

இப்போது முகத்தை வெள்ளையாக்கும் கிரீமை தயார் செய்து கொள்ளலாம். அதற்கு ஒரு ஸ்பூன் சோள மாவு, ஒரு ஸ்பூன் தயிர், ஒரு ஸ்பூன் தக்காளி சாறு, இத்துடன் அரை ஸ்பூன் கிளிசரின் இவையெல்லாம் சேர்த்து நல்ல பேஸ்ட் பதத்திற்கு குழைத்து உங்கள் முகத்தில் அப்ளை செய்து ஐந்து நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். ஐந்து நிமிடம் கழித்து முகத்தை சுத்தமான தண்ணீர் வைத்து கழுவி விடுங்கள்.

- Advertisement -

இதை தொடர்ந்து 5 நாட்கள் செய்து வந்தால் போதும் உங்கள் முகத்தில் உள்ள கருத்திட்டுகள் கருமை நிறம் வெய்யிலினால் பாதிப்படைந்த சருமம் எல்லாம் மாறி முகம் பளிச் சென்று பிரகாசமாக மின்னும்.

இதையும் படிக்கலாமே: சொரசொரனு கரடு முரடா இருக்கிற உங்க முகம் 2 வாரத்தில் சாஃப்டாக மாற 2 முறை இப்படி மட்டும் செய்யுங்க போதும்!

அடிக்கடி பார்லர் சென்று அழகு படுத்தி கொள்வது நம் முகத்திற்கு அத்தனை நல்லது அல்ல. இது போன்ற எளிமையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே, நம்மை அழகு படுத்தி கொள்ளும் போது முகம் அழகாவதுடன், பணமும் மிச்சம் ஆகும்.

- Advertisement -