நீங்க கொள்ளை கொள்ளும் பேரழகு பெட்டகமாக மிளிர, கஸ்தூரி மஞ்சளை இந்தப் பொருளுடன் சேர்த்து பேக் போடுங்க. அப்புறம் உங்க அழகை நீங்களே ரசிப்பீங்க.

kasthuri manjal face beauty
- Advertisement -

மஞ்சளில் ஆன்டிபயாட்டிக் அதிகம் உள்ளது என்று அனைவரும் அறிந்ததே. அதிலும் காட்டு மஞ்சள் என்று சொல்லப்படும் இந்த கஸ்தூரி மஞ்சள் மேனி அழகை மெருகூட்டி காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. அந்தக் காலத்தில் எல்லாம் முகம் அழகிற்கான சாதனம் என்றால் அது மஞ்சள் மட்டுமே. இந்த கஸ்தூரி மஞ்சளை வைத்து தான் இப்போது இந்த அழகு குறிப்பு பதிவு முக அழகை எப்படி கூட்டுவது என்பதை பற்றி தெரிந்து கொள்ள போகிறோம்.

இன்றைய காலக்கட்டத்தில் மஞ்சளை யாரும் பயன்படுத்துவது இல்லை. ஏனென்றால் மஞ்சளில் இருக்கும் அழகு சம்பந்தப்பட்ட விஷயங்கள் பெரும்பாலும் யாருக்கும் தெரியவில்லை. மஞ்சள் பூசினால் முகம் கருத்து விடும் அல்லது முகம் மஞ்சளாக திட்டு திட்டாக தெரியும் என்பது போன்ற பொதுவான கருத்துக்கள் நிலவுகிறது.

- Advertisement -

மஞ்சள் சேர்த்தால் முகம் கருக்கும் என்பது உண்மை தான். மஞ்சள் மட்டும் தனியாக சேர்த்தால் அப்படி ஆகுவதற்கான வாய்ப்பு அதிகம். மஞ்சளுடன் நாம் வேறு பொருட்களை சேர்த்து பேக்காக போடும் போது இது போன்று நடக்க வாய்ப்பில்லை. அதே நேரத்தில் மஞ்சள்பூசும் பொழுது மட்டும் வெயில் படாமல் இருந்தால் போதும்.

இரவில் படுக்கும் பொழுது இந்த பேக்கை போட்டு அதன் பிறகு உறங்கி விட்டால் மறுநாள் நீங்கள் வெளியில் சென்றால் கூட எந்த பாதிப்பும் ஏற்படாது. மஞ்சள் பயன்படுத்துவதால் எந்த வித சரும பாதிப்பும் ஏற்படாது என்ற கருத்தோடு பதிவுக்குள் சென்று மஞ்சளில் அழகு குறிப்பு தெரிந்து கொள்வோம் .

- Advertisement -

கஸ்தூரி மஞ்சள் ஃபேஸ் பேக் தயாரிக்க தேவையானவை:
கஸ்தூரி மஞ்சள் -1/2 டீஸ்பூன், கடலை மாவு -1 டீஸ்பூன், பயத்த மாவு -1 டீஸ்பூன், இவையெல்லாம் கலக்க காய்ச்சாத பால்.

ஒரு பவுலில் இந்த பொருட்களை எல்லாம் சேர்த்து நன்றாக குழைத்து பேஸ்ட் பதத்திற்கு தயாராக்கி வைத்துக் கொள்ளுங்கள். எந்த ஒரு பேக்கையும் நாம் பயன்படுத்தும் முன் முகத்தை சுத்தம் செய்ய வேண்டும். இந்த பேக்கை போடுவதற்கு முன்பு கொஞ்சம் ரோஸ் வாட்டரில் காட்டனை நனைத்து முகம் கழுத்து போன்றவற்றில் எல்லாம் ஒற்றி எடுத்த பிறகு மீண்டும் ஒரு முறை காட்டன் வைத்து முகத்தை துடைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அதன் பிறகு நீங்கள் தயார் செய்த இந்த பேக்கை முகத்திற்கு போட்டு 15 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு சாதாரண தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விடுங்கள் போதும்.

இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வரும் போது உங்கள் முகத்தில் இருக்கும் கருமை நிறம் முற்றிலுமாக மறைவதோடு, முகப்பருகளும் வராததோடு, முகப்பரு வந்த தழும்புகளும் மறைந்து விடும். முக வறட்சித் தன்மையை நீங்கி சருமப் பிரச்சனைகள் அனைத்தையும் தீர்க்கும் ஒரு அற்புத தீர்வு தான் இந்த இயற்கையான கஸ்தூரி மஞ்சள் ஃபேஸ் பேக்.

இதையும் படிக்கலாமே: நரைமுடி இளநரை இரண்டும் முற்றிலுமாக மறைய இதை பயன்படுத்துங்கள் போதும். இந்தப் பொருளை வைத்துக் கூட நரை முடியை சரி பண்ணலாமா என்று நீங்கள் யோசித்து இருக்கவே மாட்டீர்கள்.

முக அழகிற்காக கெமிக்கல் கலந்த பொருட்களை பயன்படுத்தி அதன் மூலம் மேலும் பல பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொள்ளாமல் இது போன்ற இயற்கை நமக்கு அளித்த கொடைகளை வைத்து எளிமையான முறையில் முக அழகை எந்தவித பாதிப்பும் இல்லாமல் பெறலாம்.

- Advertisement -