அழகு நிலையம் போகாமலே நீங்க அழகு தேவதையா ஜொலிக்க வேண்டுமா? இதோ இந்த பேக் போட்டாலே போதும். நீங்க அழகு நிலையம் போனதில்லை என்று சொன்னா யாரும் நம்பவே மாட்டாங்க. அவ்வளவு அழகா மாறிடுவீங்க

bath power
- Advertisement -

பெண்கள் அழகாக வேண்டும் என்று நினைத்த உடனே ஞாபகத்திற்கு வருவது அழகு நிலையம் தான். அங்கு சென்று வந்தால் தான் நம் அழகை மேலும் மெருகூட்டி காட்ட முடியும் என்ற எண்ணம் என்று பெரும்பாலானோர் மனதில் பதிந்து விட்டது. ஆனால் முகத்தை அழகாக வேண்டுமென்றால் அவ்வளவு செலவு செய்து கெமிக்கல் கலந்த கிரீம்களை தேய்த்து தான் முகத்தை நிறமாக்க வேண்டும் என்ற எந்த அவசியமும் இல்லை. நாம் வீட்டில் இருந்தபடியே இயற்கையான முறையிலே நம்முடைய முகத்தை அழகாக கொள்ள முடியும். அது எப்படி என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் இப்பொழுது தெரிந்து கொள்ளலாம்.

இப்போதைய காலக்கட்டத்தில் ஆண்கள், பெண்கள், சிறுவர் முதல் பெரியவர் என அனைவருமே அழகு நிலையம் செல்கிறார்கள். ஏனென்றால் இன்றைய சூழ்நிலை அப்படி. வெளியில் இருக்கும் தூசி சரியான முறையில் உணவு இல்லாதது போன்ற காரணங்களால் நல்ல நிறமாக இருப்பவர்கள் கூட முகம் பொலி விழுந்து கருமை படிந்து காணப்படுகிறார்கள். இதற்காக நாம் வெளியில் எங்கும் செல்லாமல் இருக்க முடியாது. ஆனால் வீட்டில் இருந்தபடியே சின்ன சின்ன குறிப்புகளின் மூலம் நம்முடைய அழகை தக்க வைத்துக் கொள்வதுடன், மேலும் மெருகூட்டிக் கொள்ளவும் முடியும். அதை தான் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

முகம் வெள்ளையாக மாற இயற்கையான வழி:
இந்த பொடி தயாரிப்பதற்கு நமக்கு தேவையானவை ரோஜா இதழ் பொடி. இது கடைகளில் கிடைக்கும் அப்படி கிடைக்கவில்லை என்றால் பன்னீர் ரோஜா பூவை வாங்கி காம்பு நீக்கி சுத்தம் செய்து வீட்டு நிழலில் காய வைத்து அதை பவுடராக்கி வைத்துக் கொள்ளுங்கள். கடைகளில் வாங்குவதை விட இது மிகவும் சிறந்தது.

அதே போல முல்தானிமெட்டி பவுடரையும் வாங்கிக் கொள்ளுங்கள். பச்சைப் பயிறு காய வைத்து அரைத்து பவுடராக்கி எடுத்துக் கொள்ளுங்கள். அது இல்லாத பட்சத்தில் கடலை மாவையும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

இந்த மூன்றையும் சம அளவு எடுத்து ஒரு பாட்டிலில் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். தினமும் குளிப்பதற்கு முன்பு முகத்திற்கு இந்த பவுடரை குழைத்து உங்கள் முகத்தில் தேய்த்து ஸ்கிரப் செய்து குளித்து விடுங்கள். முகம் கழுவும் போதெல்லாம் சோப்பிற்கு பதிலாக இதையே பயன்படுத்தி வாருங்கள். இதை பயன்படுத்தும் போது முகத்திற்கு சோப்பு போட கூடாது.

இதைத் தொடர்ந்து போடும் போது உங்கள் முகத்தில் உள்ள இறந்த செல்கள் எல்லாம் வெளியேறி முகத்தில் புதிய செல்கள் உருவாக்கி முகம் வெள்ளையாக மாறுவதுடன், முகத்தில் தேங்கி இருக்கும் அழுக்குகள் அனைத்தும் வெளியேறி விடும். இந்தப் பொடியை பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் பயன்படுத்தலாம் சிறிய குழந்தைகளுக்கு பயன்படுத்தும் போது முல்தானி மெட்டியை மட்டும் தவிர்த்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: முடிவில்லாமல் தொடரும் முடி பிரச்சனைக்கு கூட முற்றுப்புள்ளி வைக்க, இந்த 3 பொருள் போதும். கத்தை கத்தையா முடி வளர்க்க ஆசைப்படுபவர்களுக்கு சூப்பர் டிப்ஸ்.

இது மிக மிக எளிமையான ஒரு வழிமுறை தான். இதை தொடர்ந்து செய்து வரும் பொழுது முகம் எப்பொழுதும் பிரகாசமாக பொலிவுடன் நீங்கள் அழகு நிலையம் சென்று வந்தது விடவும், அழகாகவே இருப்பீர்கள். இயற்கையான முறையில் இது போன்ற அழகு குறிப்புகளை பயன்படுத்தி முகத்திற்கு எந்த வித பாதிப்பும் இல்லாத அழகை பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -