வெறும் ஐந்து நிமிடம் மட்டும் இந்த பேக் உங்க முகத்தில் இருந்தா போதும், முகம் பளிங்கு போல பிரகாசமாக மாறி, உங்களையே ஆச்சரியப்படுத்தும். ட்ரை பண்ணி பாருங்க.

- Advertisement -

முகம் அழகாகவும் அதே நேரத்தில் நல்ல பளப் பளப்பாகவும் பார்க்கும் போதே பொலிவுடன் இருந்தால் தான் அந்த முகம் அழகான முகம் என்று அர்த்தம். வெறும் வெள்ளையாக இருப்பது மட்டும் முழு அழகு கிடையாது. அந்த முகத்தில் கட்டாயம் ஒரு பொலிவு இருக்க வேண்டும். அதற்கு நாம் பழங்காலம் தொட்டு பயன்படுத்தி வரும் இந்த பொருளை வைத்து இப்போது சுலபமான ஃபேஸ் பேக் எப்படி தயார் செய்வது என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த ஃபேஸ் பேக்கு நாம் பயன்படுத்தும் அந்த பொருளானது மஞ்சள் தான். மஞ்சள் பற்றி சொல்ல வேண்டிய அவசியமே இல்லை அந்த காலம் தொட்டு மஞ்சள் என்பது அழகுக்காக பயன்படுத்தப்படும் ஒரு பொருளாக மட்டும் இல்லாமல் சருமத்தை பாதுகாக்கவும் பயன்படுகிறது. அந்தக் காலத்தில் எல்லாம் அழகிற்கு என தனியாக எந்த செலவு செய்தது கிடையாது. அவர்களின் அதிக பட்ச அழகு சாதனமே மஞ்சள் தான்.

- Advertisement -

இப்போது இந்த மஞ்சள் உடன் நாம் சேர்க்கும் இன்னொரு பொருள் உருளைக்கிழங்கு. உருளைக்கிழங்கும் நிறத்தை கூட்டி தரக்கூடிய பொருள் . இதில் இருக்கும் ஸ்டார்ச் சத்தானது முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், கண்களின் கீழே இருக்கும் கருவளையம், முகத்தில் வெளியிலினால் தோன்றும் கருத்திட்டுகள் போன்றவைகளை நீக்கி முகத்தை வெள்ளையாக பயன்படும். இந்த இரண்டையும் பொருளுடன் நாம் சேர்க்கும் இன்னொரு முக்கியமாக பொருள் பால் இதுவும் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்கி முகத்தை பளிச்சியென்று வைக்க உதவும்.

உருளைக்கிழங்கு ஃபேஸ் பேக் தயாரிக்கும் முறை
முதலில் ஒரு உருளைக்கிழங்கை எடுத்து தோல் நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளுங்கள். இதை ஒரு துருவலில் நன்றாக துருவி அதன் பிறகு அதன் உள்ள சாரை மட்டும் தனியாக வடிகட்டி எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு ஒரு மீடியம் சைஸ் உருளைக்கிழங்கு இருந்தால் போதும். இந்த உருளைக்கிழங்கு சாறு ஒரு ஸ்பூன்,மஞ்சள் அரை ஸ்பூன் இத்துடன் அரை டீஸ்பூன் காய்ச்சாத பால் இவை மூன்றையும் நன்றாக கலந்து கொள்ளுங்கள். இதற்கு பயன்படுத்தும் மஞ்சள் நல்ல தரமான மஞ்சளாக பயன்படுத்தினால் ரிசல்ட் இன்னும் சீக்கிரத்தில் கிடைக்கும்.

- Advertisement -

இதை உங்கள் முகத்தில் தேய்த்து ஐந்து நிமிடம் அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு நல்ல சுத்தமான தண்ணீர் கொண்டு முகத்தை அலம்பி விட்டால் போதும். முகத்தில் எங்கு கரும்புள்ளிகள், கருந்துட்டுகள் இருந்தாலும் நீங்கி முகம் வெண்மையாக மாறி புதுப்பொலிவுடன் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: முன் நெற்றி முழுவதும் வேகமாக முடி வளர, வழுக்கை மறைய, இதை மட்டும் செய்தால் போதும். ஒரே மாதத்தில் முன்னேற்றியில் குட்டி குட்டியா நிறைய முடிகள் வளர்ந்து விடும்.

இதை வாரத்திற்கு மூன்று முறை பயன்படுத்தி வந்தால் போதும். இதை ஒவ்வொரு முறையும் பிரஷ்ஷாக தயார் செய்து தான் முகத்தில் தேய்க்க வேண்டும் முன்னமே தயார் செய்து ஃப்ரிட்ஜில் வைத்து பயன்படுத்தக் கூடாது.

- Advertisement -