நம்ம முகத்தில் சின்ன கரும் புள்ளிகள் கூட இல்லாமல், செக்க செவேர்ன்னு அழகாக இருந்தா எப்படி இருக்கும்? இப்படி நீங்க யோசிச்சா உடனே இதை யூஸ் பண்ண ஆரம்பிச்சிடுங்க.

- Advertisement -

முகத்தில் ஒரு சின்ன கரும் புள்ளிகள் கூட இல்லாமல் சருமம் பளிச் சென்று இருக்க வேண்டும் என்று தான் அனைவரும் நினைப்பார்கள். அதிலும் இன்றைய இளம் தலைமுறைக்கு இந்த முகம் சார்ந்த பிரச்சினைகள் அதிகமாகவே வருகிறது. அதற்கு அவர்களின் உணவு வழக்கமும் அவர்கள் பயன்படுத்தும் கெமிக்கல் நிறைந்த பொருட்களும் முக்கியமான காரணம். இப்படி கெமிக்கல் கலந்த பொருட்கள் பயன்படுத்தாமல், இயற்கையான முறையில் தயாரிக்கும் இந்த ஃபேஸ் பேக்கை பயன் படுத்தினால் போதும் மாசு மருவின்றி அழகிய முக தோற்றத்தை பெறலாம். அது எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த அழகு குறிப்பு பதிவில் தெரிந்து கொள்ளலாம் வாங்க.

இந்த பொடி தயாரிக்க நீங்கள் முதலில் பன்னீர் ரோஜா இதழ்களை வாங்கி நன்றாக நிழலில் உலர்த்தி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பொடி கடைகளிலும் கிடைக்கும் ஆனாலும் நாம் வாங்கி நேரடியாக காய வைத்து அரைத்து பயன்படுத்தும் போது இதன் பலன் அதிகமாக கிடைக்கும்.

- Advertisement -

காய வைத்த இந்த பன்னீர் ரோஜாக்களை மிக்ஸியில் போட்டு பவுடராக்கி ஒரு பாக்ஸில் போட்டு வைத்துக் கொள்ளுங்கள். இப்படி காய வைத்து ஸ்டார் செய்து கொண்டால், அதிக நாட்கள் இந்த பவுடரை பயன்படுத்தலாம்.

இந்த பன்னீர் ரோஜா பொடி ஒரு ஸ்பூன், முல்தானி மட்டி ஒரு ஸ்பூன், முகம் அதிக அளவு வறட்சியுடன் இருப்பவர்கள் தயிர் அல்லது காய்ச்சாத பால் சேர்த்து கலந்து கொள்ளலாம் . எண்ணெய் பசை அதிகம் உள்ளவர்கள் இதற்கு பதிலாக ரோஸ் வாட்டரையும் கலந்து கொள்ளலாம். உங்கள் முகத்தின் தன்மைக்கு ஏற்ற வாறு கலந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை கலந்து உங்கள் முகத்தில் தேய்த்து இருபது நிமிடம் வரை அப்படியே விட்டு, அதன் பிறகு முகத்தை அலம்பி விடுங்கள். இதை தினமும் பயன்படுத்தி வரும் போது முகத்தில் எந்த ஒரு சின்ன கரும்புள்ளி கூட இல்லாமல் மறையும். இது முகப்பரு வராமல் காப்பதுடன், முகம் நல்ல ரோஸ் நிறத்திற்கு மாறி விடும். அது மட்டும் இன்றி இளம் வயதிலே தோன்றும்  முகச் சுருக்கத்தை கூட இந்த பொடியை தொடர்ந்து பயன்படுத்தும் போது வராமல் தடுத்து விடலாம்.

இதையும் படிக்கலாமே: 1/2 ஸ்பூன் மஞ்சளுடன் இதை சேர்த்து முகத்தில் மட்டும் பூசி பாருங்கள், முகம் தங்கம் போல தகதகன்னு ஜொலிக்கும்!

இவ்வளவு எளிமையாக அதே நேரத்தில் செலவும் கம்மியாக இந்த பொடியை நாமே வீட்டில் தயார் செய்து தினமும் பயன்படுத்தி வந்தால் முகம் தொடர்பான எந்த பிரச்சனையும் வராது. இதற்காக கெமிக்கல் கலந்த பொருட்களை முகத்திற்கு போட்டு சருமம் பாதிப்பதோடு பணத்தையும் விரயமாக்காமல் இந்த முறையை தொடர்ந்து பயன்படுத்தி பாருங்கள்.

- Advertisement -