குண்டும் குழியுமா இருக்க உங்க முகம் நல்லா பளப்பளன்னு பாலிஷ் பண்ண மாதிரி மாறனும்னா, சமையலறையில் இருக்கும் இந்த பொருள் போதும். பியூட்டி பார்லர் போய் காசு செலவு பண்ண கூட இந்த ரிசல்ட் கிடைக்காது.

open-pores
- Advertisement -

முகம் நல்ல நிறமாக மாற நாம் என்ன தான் அழகு சாதனங்களை பயன்படுத்தி இருந்தாலும், இந்த முகப்பரு, தழும்புகள் போன்றவை வந்து விட்டால் அந்த இடத்தில் பள்ளம் விழுந்து அசிங்கமாகி விடும். இதை சரி செய்வதும் கொஞ்சம் சிரமமாகவே இருக்கும். பார்லர் சென்று நீங்கள் முகத்தை அழகு செய்து கொண்டால் கூட அந்த தழும்பை தற்காலிகமாக மறைப்பார்களே தவிர முற்றிலுமாக நீங்கி விட முடியாது.

இப்போது இந்த அழகு குறிப்பு பதிவில் நாம் வீட்டில் அன்றாடம் பயன்படுத்தும் ஒரு சில பொருட்களை வைத்து முகத்தில் உள்ள கரும்புள்ளி, முகப்பரு, முகப்பரு தழும்பு போன்றவை எல்லாம் நீங்கி முக சுருக்கம் இல்லாமல் பளிச்சென்று அழகாய் மாற ஒரு பேக்கை எப்படி செய்வது என்று தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

முகத்தில் உள்ள பள்ளங்கள் தோல் சுருக்கம் நீங்க பேஸ் பேக்:
இந்த பேஸ் பேக்கை தயாரிக்க முதலில் பாதி வாழைப்பழத்தின் தோலை எடுத்து சின்னதாக நறுக்கி மிக்ஸி ஜாரில் சேர்த்துக் கொள்ளுங்கள். அத்துடன் 10 கறிவேப்பிலை, 2 ஸ்பூன் தக்காளி சாறு, 1 டேபிள் ஸ்பூன் அதிகம் புளிக்காத தயிர் இவை எல்லாம் சேர்த்து கொஞ்சமாக தண்ணீரும் ஊற்றி நல்ல பேஸ்ட் பதத்திற்கு அரைத்துக் கொள்ளுங்கள்.

அரைத்த இந்த பேஸ்ட்டை ஒரு பவுலில் மாற்றிய பிறகு 2 ஸ்பூன் முல்தானி மெட்டி பவுடரையும் சேர்த்து ஒரு முறை நன்றாக கலந்து கொள்ளுங்கள். தினமும் இரவு உறங்க செல்வதற்கு முன்பாக உங்கள் முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவிய பிறகு இந்த பேக்கை முகத்தில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து சுத்தம் செய்த பின் உறங்க செல்லாம்.

- Advertisement -

இதில் சேர்த்து இருக்கும் அனைத்து பொருட்களுமே நம் முகத்தை உள்ள அழுக்குகளை நீக்கி முகப்பரு, முகப்பரு வந்த தழும்புகள் அனைத்தையும் நிரந்தரமாக மறைய செய்து முகம் எப்போதும் இளமையுடன் இருக்க உதவி செய்யும். தோல் சுருக்கங்கள் நீங்கி முகம் இறுக ஆரம்பித்தாலே முகத்தில் தோன்றும் இது போன்ற பிரச்சனைகள் எல்லாம் மறைய தொடங்கி விடும்.

இதையும் படிக்கலாமே: தினமும் ஒரு சொட்டு மட்டும் இதை தடவுங்க ஒரே வாரத்துல உங்க கண்ண சுத்தி இருந்தா கருவளையெல்லாம் காணாம போயிடும். அப்புறம் பாருங்க உங்க கண்ணு காந்தம் போல எல்லாரையும் கவர ஆரம்பிச்சிரும்.

இந்த பேக்கை தொடர்ந்து இரண்டு வாரம் வரை முகத்தில் போட்டு வந்தால் மேற்கூறிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி முகம் நல்ல பளபளப்புடன் ஜொலிக்க ஆரம்பிக்கும். இது போன்று பிரச்சனை உங்களுக்கும் இருந்தால் இந்த ஒரு எளிய முறையை பின்பற்றி உங்களின் முக அழகை தக்க வைத்து கொள்ளலாம்.

- Advertisement -