நல்லதை நடக்க விடாமல் முன் ஜென்ம வினை வந்து முட்டுக்கட்டையாக நிற்கிறதா? கர்ம வினையை போக்கும் மிக சுலபமான பரிகாரம்.

sivan-vilakku
- Advertisement -

சில பேருக்கு வாழ்க்கையில் ஒரு நல்லதும் நடக்காது. நடப்பது எல்லாமே கெட்டதாகத்தான் இருக்கும். முட்டி மோதி உருண்டு பிரண்டு எழுந்தாலும் ஜெயிப்பதற்கு உண்டான எல்லா அறிகுறிகளும் தெரிந்தாலும் இறுதியில் தோற்கப் போவது இவர்களாகத்தான் இருப்பார்கள். போராடி போராடி இறுதியில் வாழ்க்கையை வெறுத்தவர்களுக்கு இந்த பரிகாரம் நல்லதொரு பலனை கொடுக்கும். பொதுவாகவே வாழ்க்கையில் தொடர் கஷ்டங்கள் வருகிறது என்றால் அது அவர்களுடைய கர்மவினையால் இருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளது.

ஜாதகத்தைக் கொண்டு போய் ஜோசியரிடம் காண்பித்தால் கண்டுபிடித்து விடலாம். இது கர்ம வினையால் வந்த பிரச்சனையா, முன் ஜென்ம பாவம், சாபமா என்று. இது எல்லாவற்றிலிருந்து முழுமையாக தப்பித்து விட முடியுமா என்று கேட்டால் அது நிச்சயம் சந்தேகத்திற்குரிய கேள்விதான். நம்முடைய தலை விதியை மாற்றுவதற்கு நிச்சயம் யாராலும் முடியாது. ஆனால் விதியின் பயனால் நமக்கு வரக்கக்கூடிய கஷ்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சக்தியை நாம் பெறுவதற்கு இந்த பரிகாரங்கள் வழிவகுக்கும்.

- Advertisement -

அப்படி ஒரு பரிகாரம் தான் இது.  சிவபெருமானை நினைத்து செய்யக்கூடிய பரிகாரம். எவன் ஒருவன் அனுதினமும் சிவாயநம மந்திரத்தை உச்சரித்து, சிவபெருமானை நினைத்துக் கொண்டே இருக்கின்றானோ அவனுக்கு கர்ம வினையால் உண்டாக்கப்படும் கஷ்டங்கள் குறையும் என்பது உண்மை. இதை புரிந்து தினமும் சிவ வழிபாடு செய்பவர்கள் வாழ்வில் முக்தி நிலையை பெறலாம்.

முத்திநிலை என்பது வாழ்ந்து முடித்த பின்னால் வருவது. வாழும் போது வரக்கூடிய கஷ்டங்களை எப்படி தவிர்ப்பது. சிறிய அளவில் ஒரு லிங்கத்தை வாங்கி வீட்டில் பூஜையறையில் வைத்து விடுங்கள். தொடர்ந்து தினமும் 48 நாட்கள் இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்து வழிபாடு செய்ய வேண்டும். பால் அபிஷேகம் செய்து விட்டு வெறும் தண்ணீரை ஊற்றி அபிஷேகம் செய்துவிட்டு அந்த லிங்கத்திற்கு மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து வில்வ இலைகளைப் போட்டு, உங்களால் முடிந்த பிரசாதத்தை வைத்து ஒரு விளக்கு ஏற்றி வைத்து விட்டால் போதும். (ஒரு வாழைப்பழம் அல்லது இரண்டு கற்கண்டு ஏதாவது வைத்தாலே போதும்.)

- Advertisement -

48 நாட்களும் இதை கடை பிடியுங்கள். 48 நாட்கள் இந்த பூஜையை முடித்துவிட்டு இந்த லிங்கத்தை யாரேனும் ஒருவருக்கு தானமாக கொடுக்க வேண்டும். தினமும் சிவன் வழிபாடு செய்பவர்களாக பார்த்து தானம் கொடுக்க வேண்டும். இந்த லிங்கத்தை நீங்கள் தானம் கொடுத்தால் தானத்தை பெறுபவர் இந்த லிங்கத்திற்கு தினமும் சிவ பூஜை செய்துவர வேண்டும்.

அப்படிப்பட்ட ஒரு நபரை தேடி கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு சிரமமான விஷயம் கிடையாது. சிவனடியார்களில் நிறைய பேர் வீட்டில், சிவ லிங்கத்தை வைத்து வழிபாடு செய்பவர்கள் உள்ளார்கள். அவர்கள் யாருக்கேனும் ஒருவருக்கு உங்கள் கையால் நீங்கள் பூஜை செய்த லிங்கத்தை தானம் கொடுத்தால் உங்கள் கர்ம வினைகள் குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. லிங்கம் என்றால் லிங்கத்தோடு சேர்த்து நந்தி தேவரையும் வைத்து தான் பூஜை செய்து தானம் கொடுக்க வேண்டும் என்ற இந்த ஒரு தகவலோடு இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -