இருண்டு போன வாழ்க்கையை வெளிச்சத்துக்கு கொண்டு வர முருகன் வழிபாடு.

murugan4
- Advertisement -

ஒருவருக்கு இருண்டு போன சூனியமான வாழ்க்கையானது எப்போது வரும். கணவன் மனைவி பிரிந்திருக்கும் போது, பண கஷ்டம் வரும்போது, கடன் சுமை அதிகமாக இருக்கும் போது, நோய்வாய்ப்படும் போது, நம்முடைய குடும்ப உறுப்பினர்கள் கஷ்டப்படும் போது, இப்படி குடும்ப பிரச்சனைகள் இருக்கும்போது, வாழ்க்கையில் இருள் சூழ்ந்த நிலை காணப்படும்.

இருள் சூழ்ந்த நிலையை விளக்குவதற்கு ஒளி தரும் விளக்கு வழிபாடு தான் நமக்கு கை கொடுக்கும். அந்த விளக்கு வழிபாட்டை பற்றி தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம். குறிப்பாக முருகப் பெருமானுக்கு ஏற்றக்கூடிய விளக்கு வழிபாடு இது. இந்த விளக்கை எந்த நேரத்தில் ஏற்றனும். எப்ப ஏற்றனும். எப்படி ஏற்றனும். ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

இருள் நிறைந்த வாழ்க்கை வெளிச்சத்துக்கு வர முருகன் வழிபாடு

இந்த வழிபாட்டை எல்லா கோவில்களிலும் செய்ய முடியாது. பள்ளியறை பூஜை முருகப்பெருமானுக்கு நடக்கும் அல்லவா அந்த கோவில்களில் தான் செய்ய வேண்டும். அப்படி ஒரு கோவிலை உங்கள் வீட்டுக்கு பக்கத்தில் எங்கு இருக்கிறது என்பதை முதலில் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பெரும்பாலும் சின்ன சின்ன கோவில்களில் பள்ளியறை பூஜை செய்ய மாட்டாங்க.

அதை நீங்கள் குருக்கள் இடம் கேட்டாலே தெரியும். பள்ளியறை பூஜை செய்யக்கூடிய பிரபல்யமான ஒரு முருகன் கோவிலில் செவ்வாய்க்கிழமை தோறும் இரவு 8:20 மணிக்கு இந்த விளக்கை முருகப் பெருமான் கோவிலில் ஏற்ற வேண்டும். இரண்டு மண் அகல் விளக்கில், நல்லெண்ணெய் ஊற்றனும்.

- Advertisement -

பஞ்சு திரியையும் தாமரை தண்டு திரியையும் ஒன்றாக சேர்த்து திரித்து போட்டு, விளக்கு ஏற்றிவிட்டு நேராக முருகனை பார்க்க போகணும். கையில் செவ்வரளி பூவும், மல்லி பூவும் இருக்க வேண்டும். இந்த இரண்டு பூக்களையும் முருகப்பெருமானுக்கு கொடுத்திடுங்க. அவங்க அதை முருகப்பெருமானுக்கு போட்டுடுவாங்க.

எட்டு முப்பது மணிக்கு மேல் பள்ளி அறை பூஜை செய்து நடை சாத்தப்படும். அந்த பள்ளியறை பூஜையில் நீங்கள் கலந்துக்கணும். உங்களுடைய பிரச்சனையை முருகப்பெருமானிடம் சொல்லி வேண்டிக் கொள்ளுங்கள். இந்த பூஜையில் கலந்து கொண்டால் கணவன் மனைவி பிரச்சினை தீரும். ஆரோக்கியம் சம்பந்தப்பட்ட பிரச்சனை தரும். கடன் சுமை குறையும்.

- Advertisement -

குடும்பத்தில் செல்வ செழிப்பு அதிகரிக்கும். உங்களுடைய இருள் நிறைந்த வாழ்க்கை வெளிச்சத்துக்கு வரும். இது நிதர்சனமான உண்மை. எத்தனை செவ்வாய்க்கிழமைகள் இப்படி செய்வது. கணக்கு வச்சுக்கோங்க. குறைந்தபட்சம் 11 செவ்வாய்க்கிழமை ஆவது இந்த வழிபாட்டை மேற்கொள்வது நன்மையை தரும்.

இன்னொரு விஷயத்தையும் முதலில் நினைவில் வைத்துக் கொள்ளனும். முருகனை கும்பிடும்போது சில கஷ்டங்கள் நமக்கு வரும். அதை எல்லாம் தாங்கிக் கொண்டு மீண்டும் மீண்டும் முருகன் பாதங்களைச் சரணடையும்போது நம்ம கர்ம வினைகளை எல்லாம் அவர் சீக்கிரம் கழித்து நமக்கு நன்மையை கொடுத்து விடுவார்.

இதையும் படிக்கலாமே: இழந்த பொன் பொருள் பணம் எல்லாவற்றையும் மீட்டு தரும் பெருமாள் வழிபாடு

முருகனைக் கும்பிட்டால் கஷ்டம் வருது என்று அவர் வழிபாட்டை மட்டும் யாரும் கைவிடாதீர்கள். என்றைக்கோ வரக்கூடிய பெரிய கஷ்டத்தை, இன்றைக்கே வர வைத்து சின்ன கஷ்டமாக அதை மாற்றி, உங்களுடைய கர்ம வினைகளை சீக்கிரம் குறைத்து உங்களுக்கான நல்ல வாழ்க்கையை கொடுக்கக் கூடிய தெய்வம் முருகப்பெருமான் என்ற தகவலோடு இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -