இழந்த பொன் பொருள் பணம் எல்லாவற்றையும் மீட்டு தரும் பெருமாள் வழிபாடு

perumal
- Advertisement -

பணக்கஷ்டத்தை தீர்க்கக்கூடிய கடவுள் பெருமாள். இது நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த பெருமாள் வழிபாட்டில் ஒரு சூட்சமம் இருக்கிறது. இந்த முறைப்படி பெருமாளை தொடர்ந்து 27 வாரங்கள் வழிபாடு செய்து வந்தீர்கள் என்றால், உங்களுக்கு இருக்கும் பணக்கஷ்டம் நிச்சயம் தீரும். வாரா கடன் வசூல் ஆகும்.

நம்பி கொடுத்து ஏமாந்த பணம் திரும்பவும் உங்கள் கைக்கு வரும். அடமானத்தில் வைத்த நகையை எல்லாம் மீட்டெடுக்கலாம். வியாபாரத்தில் நொடிந்து போனவர்கள் கூட நல்ல முன்னேற்றத்தை அடையலாம். வாழ்க்கையில் இருக்கும் நிதி நிலைமையை சீர் செய்யும் பெருமாள் வழிபாட்டை எப்படி செய்வது. ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

பணக்கஷ்டத்தை தீர்க்கும் பெருமாள் வழிபாடு

சனிக்கிழமையில் இந்த வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். வீட்டின் அருகில் இருக்கும் எந்த பெருமாள் கோவில் வேண்டும் என்றாலும் நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். அந்த பெருமாள் கோவிலுக்கு சென்று பெருமாளுக்கு முன்பாக இரண்டு மண் அகல் விளக்குகளில் கட்டாயம் நெய் ஊற்றி விளக்கு ஏற்ற வேண்டும். நல்லெண்ணெய் ஊற்றி இந்த தீபம் ஏற்ற வேண்டாம்.

பணக்கஷ்டத்திற்கு தீர்வு காண நெய் தீபம் தான் ஏற்றனும். பஞ்சு தரி போட்டு, விளக்கு ஏற்றி வைத்து பெருமாள் முன்பாக அமர்ந்து, மனமுருகி வழிபாடு செய்து கொள்ளுங்கள். பணக்கஷ்டம் தீர வேண்டும் என்று பெருமாளுக்கு துளசி வாங்கிக் கொண்டு போய் கொடுங்கள். மகாலட்சுமி தாயாருக்கு வாசனை நிறைந்த தாழம்பூ குங்குமம் வாங்கிக் கொண்டு போய் கொடுக்கலாம்.

- Advertisement -

27 சனிக்கிழமை தொடர்ந்து பெருமாளுக்கு இந்த தீபம் ஏற்றி, உங்கள் ஒரு கோரிக்கையை மட்டும் பெருமாள் பாதங்களில் வைத்து பாருங்கள். 27 ஆவது வாரம் சனிக்கிழமை முடிவதற்குள் உங்களுக்கு இருக்கும் அந்த பண பிரச்சனையை பெருமாள் எந்த ரூபத்திலாவது சரி செய்து கொடுப்பார். இது நிதர்சனமான உண்மை. நம்பிக்கை உள்ளவர்கள் பரிகாரத்தை முயற்சி செய்து பாருங்கள்.

இதையும் படிக்கலாமே: எதிர்மறை ஆற்றல்களை விலக்கும் பாதாம் பருப்பு.

பெண்கள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் போது, இடையே மாதவிலக்கு நாட்கள் வரும். அப்போதும் இந்த வழிபாட்டை நிறுத்தக்கூடாது. வீட்டில் இருக்கும் மற்றவர்கள் யாராவது ஒருவரை கோவிலுக்கு சென்று அந்த வாரத்துக்கு விளக்கு போட சொல்லுங்க. நிச்சயம் நல்லது நடக்கும். பெருமாளை வழிபாடு செய்பவர்களுக்கு இது ஒரு உன்னதமான வழிபாட்டு முறை. நம்பிக்கை உள்ளவர்கள் மேற்கொண்டு பலன் பெறலாம்.

- Advertisement -