முருகனிடம் வேண்டுதல் வைக்கும் முறை

murugar2
- Advertisement -

கந்தா என்று கூப்பிட்டால் கண நொடியில் ஓடி வருவான் அப்பன் முருகன். அந்த முருக பெருமானை வழிபாடு செய்யும்போது எப்படி வேண்டுதல் வைக்கணும். முருகப்பெருமானிடம் எதை வரமாக கேட்கணும். எல்லாரும் தான் முருகன் கோவிலுக்கு போறோம். எல்லாரும் தான் முருகப்பெருமானை வழிபாடு செய்கின்றோம். எல்லோரும் தங்களுடைய குறைகளை சொல்லி முருகரிடம் பேசுகின்றோம்.

ஆனால் அந்த முருகப்பெருமான் யாரிடம் பேசுவார் தெரியுமா. உங்களுக்கு, முருகப்பெருமானை வழிபாடு செய்யக்கூடிய ஒரு சூட்சமமான முறையைத்தான் இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

முருகனிடம் வேண்டுதல் வைப்பது எப்படி?

முருகன் கோவிலுக்கு சென்று வழிபாடு செய்து, வேண்டுதல் வைத்தால் செல்வம் கிடைக்கும். கடன் சுமை குறையும். கல்யாணம் ஆகும். குழந்தை பிறக்கும். உங்களுக்கு என்ன கஷ்டம் இருக்கோ அதை போய் முருகனிடம் இன்று சொன்னீங்கன்னா, அந்த கஷ்டத்தை அவன் கட்டாயம் தீர்த்து வைப்பான். எவ்வளவு பணம், சொத்து, நகை, தேவை என்றாலும் நீங்கள் கேட்டால், அவன் கொடுத்துக் கொண்டே இருப்பான்.

ஆனால் அந்த ‘முருகப்பெருமானே வேண்டும்’ என்ற வரத்தை என்றாவது முருகனைப் பார்த்து கேட்டு இருக்கீங்களா. இதை மட்டும் வரமாக கேட்டால், நீங்க முருகனை தேடி, கோவிலுக்கு சென்று, அவனை பார்த்து வழிபாடு செய்த காலம் மாறி, முருகப்பெருமானே உங்களைத் தேடி வந்து உங்களை பார்க்க கூடிய காலம் வந்துவிடும்.

- Advertisement -

முருகன் கோவிலுக்கு சென்று பொன் வேண்டும், பொருள் வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்ற வேண்டுதலை வைப்பதற்கு பதிலாக, முருகா நீ மட்டும் தான் எனக்கு வேணும், முருகா உன்னுடைய வேல் மட்டும் தான் எனக்கு துணையாய் இருக்கணும். நீ மட்டும் என்கூட இருந்திரு போதும். அப்படின்னு கேட்டு பாருங்க.

பொன் பொருள் புகழ் பதவி இதோடு சேர்த்து அந்த முருகப்பெருமானின் தரிசனத்தையும் நீங்கள் பெறலாம். ஆனால் கோவிலுக்கு போன உடனே நாம யாரும் இதை நினைப்பதே கிடையாது. ‘முருகா நீ வேணும்னு’ கேளுங்கள். முருகனையே சொந்தமாக்கி உங்க கூட வச்சுக்கோங்க. பிறகு கஷ்டங்கள் எல்லாம் நம்மை கண்டு தூர சென்று விடும்.

- Advertisement -

இந்த உலகத்தில் வேறு எதுவுமே தேவையில்லடா. அப்பனே ‘முருகா நீ மட்டும் என் கூட வந்திடு, நீ மட்டும் இருந்தால் போதும்’ என்று முருகனின் பாதங்களைப் பற்றிக் கொள்பவர்களுக்கு கேட்ட வரம் கேட்காத வரம், எல்லாமே கிடைக்குங்க. முருகனே உங்க கூட வந்த பிறகு வரங்கள் கிடைத்தால் என்ன கிடைக்காவிட்டால் என்ன.

இதையும் படிக்கலாமே: கணவன் மனைவி பிரச்சினை தீர விளக்கு ஏற்றும் முறை

தொடர்ந்து 48 நாள் முருகன் கோவிலுக்கு சென்று மேல் சொன்ன முறையில் முருகனை வழிபாடு செய்துதான் பாருங்களேன். வாழ்வில் என்ன அதிசயம் நடக்கிறது என்று. முருகனை வழிபாடு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் இந்த பதிவை சமர்ப்பணம் செய்து, ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -