கணவன் மனைவி பிரச்சினை தீர விளக்கு ஏற்றும் முறை

sivan8
- Advertisement -

ஒரு குடும்பம் நிம்மதியாக வாழ வேண்டும் என்றால், அந்த வீட்டில் இருக்கும் கணவன் மனைவி அன்யூன்யமாக இருக்க வேண்டும். எலியும் பூனையுமாக எப்போதும் சண்டை போட்டுக் கொண்டிருக்கும் தம்பதியர்கள் வாழும் குடும்பத்தில், நிம்மதி நிச்சயமாக நிலைத்திருக்காது. ஐந்து நிமிடங்கள் சண்டை போட்டுவிட்டு, அடுத்த நிமிடமே இருவரும் பேசிக் கொள்வது என்பது வேறு.

ஆனால் தினம் தினம் மனதிற்கு வேதனை தரும் சண்டைகளை போட்டு, தினம் தினம் இரண்டு பேர் மனது நோகும் படி வார்த்தைகளை பேசி ரணமாக ஒரு வாழ்க்கையை வாழ்வது அவ்வளவு சுலபமல்ல. உங்களுடைய வீட்டிலும் இதே போல பிரச்சினை இருக்கிறதா. வாழவும் முடியாமல், பிரியவும் முடியாமல் ஒரே வீட்டில் சங்கடத்தோடு வாழ்பவர்களாக நீங்கள் இருந்தால், இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

- Advertisement -

நிச்சயம் கணவன் மனைவிக்குள் இனிமையான உறவு உண்டாவாகும். இருவரும் பிரிந்து விட்டோம் வேறு வேறு வீட்டில் பிரிந்து வாழ்கின்றோம் என்றாலும், மனதார இந்த வழிபாட்டை மேற்கொண்டால் நிச்சயம் பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர்வீர்கள்.

கணவன் மனைவி ஒன்று சேர காமேஸ்வரன் காமேஸ்வரி வழிபாடு

காமேஸ்வரன் காமேஸ்வரி என்றால் அந்த ஈசனும் பார்வதியும் தான். இந்த இரண்டு பேரை மனதில் நினைத்துக் கொண்டு, வீட்டில் இந்த விளக்கை ஏற்றி வைத்து பிரார்த்தனை செய்து கொண்டால், கணவன் மனைவி இருவரும் அந்த சிவனும் பார்வதியும் போல ஒற்றுமையாக வாழ்வீர்கள். ஒரு மண் அகல் விளக்கு எடுத்துக்கோங்க. இந்த பரிகாரத்திற்காக புதிய அகல் விளக்கு வாங்கிக் கொள்ளலாம்.

- Advertisement -

வாங்கிய விளக்கை தண்ணீரில் போட்டு ஊற வைத்து எடுத்து, காய வைத்து, மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து, தயார் செய்து கொள்ளுங்கள். அந்த மண் அகல் விளக்கில் முதலில் பசும்பால் ஊற்ற வேண்டும். பாக்கெட் பால் பயன்படுத்தக்கூடாது. 2 ஸ்பூன் பசும்பால் ஊற்றி, அதற்குப் பிறகு அதில் நல்லெண்ணையை ஊற்றி, பஞ்சு திரி போட்டு, விளக்கு ஏற்றி பூஜையறையில் வையுங்கள். ஒரு தட்டுக்கு மேலே இந்த விளக்கை ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள்.

இந்த விளக்குக்கு பக்கத்தில் ஒரு வாசம் நிறைந்த பூ இருக்கணும். மல்லி, முல்லை இப்படி ஏதாவது ஒரு பூவை வச்சிருங்க. ஒரு டம்ளரில் சுத்தமான பசும்பாலில் தேன் ஊற்றி கலந்து நிவேதனம் வைக்கணும். இந்த அகல் விளக்குக்கு முன்பாக அமர்ந்து சிவன் பார்வதியை மனதார நினைத்துக் கொண்டு, எங்கள் இருவருக்கும் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள், பிரச்சனைகள், கருத்து வேறுபாடுகள் எல்லாம் சரியாக வேண்டும் என்று, பிரார்த்தனை வைக்கணும்.

- Advertisement -

ஒரு ஐந்து நிமிடங்கள் மனதார நம்பிக்கையுடன் இந்த வேண்டுதலை செய்து விடுங்கள். பிரார்த்தனையை முடித்துவிட்டு கற்பூர ஆராத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். இந்த பூஜையை கணவனும், செய்யலாம் மனைவியும் செய்யலாம். யாருக்கு பிரிந்த உறவுடன் சேர வேண்டும் என்ற எண்ணம் இருக்குதோ அவங்க செய்யுங்கள். இரண்டு பேரும் வீட்டிலேயே இருக்கிறீர்கள் என்றால் நிவேதியமாக வைத்த பாலை கணவன் மனைவி இரண்டு பேரும் பாதி பாதியாக குடித்து விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: கடன் தீர சித்தர்கள் சொன்ன பரிகாரம்

பிரிந்து இருக்கிறீர்கள் என்றால் யார் பூஜையை மேற்கொள்கிறீர்களோ அவர்கள் அந்த பிரசாதத்தை சாப்பிட்டுக் கொள்ளுங்கள். குடும்ப ஒற்றுமையாக இருக்க வேண்டும், கணவன் மனைவி பிரிய கூடாது என்று நினைப்பவர்கள் மேல் சொன்ன வழிபாட்டை தொடர்ந்து 48 நாட்கள் செய்து முடித்தால் கணவன் மனைவிக்குள் ஒற்றுமை வந்துவிடும். சண்டை சச்சரவுகள் எல்லாம் ஓடிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த வழிபாட்டை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -