1 கைப்பிடி முருங்கைக் கீரை இருந்தால் போதும் இனி ஒரு நோயும் உங்களை நெருங்கவே நெருங்காது தெரியுமா? முருங்கைக் கீரையை மட்டும் இப்படி செய்து சாப்பிடுங்க வெற்றி மேல் வெற்றி உங்களுக்கு தான் கிடைக்கும்!

murungai-keerai-lemon
- Advertisement -

முருங்கைக்கீரை என்பது ஏராளமான சத்துக்களை தன்னுள் அடக்கி உள்ளது. முருங்கைக் கீரை மட்டும் அல்லாமல் முருங்கை மரம் முழுவதுமே ஆரோக்கியத்தை அள்ளிக் கொடுக்கும் மகத்துவம் வாய்ந்த தன்மை உள்ளது. இதனால் தான் எல்லோருடைய வீடுகளிலும் பெரும்பாலும் இந்த மரம் சுலபமாக வளர்க்கப்பட்டு வந்தது, ஆனால் இன்று இவை குறைந்து வருவது கண்டு ஆச்சரியம் அளிக்கிறது. இத்தகைய முருங்கைக் கீரையில் இருக்கக்கூடிய நற்குணங்களை கண்டால் நாம் வியந்து போகப் போகிறோம். வாருங்கள் முருங்கைக்கீரையின் வியத்தகு பயன்களை இந்த ஆரோக்கியம் சார்ந்த பதிவின் மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.

மனித உடலுக்கு தேவையான அத்தனை சத்துக்களையும், குறிப்பாக இரும்பு சத்தை அதிகம் தன்னுள் கொண்டுள்ள இந்த முருங்கைக் கீரை, கீரை மட்டும் அல்லாமல் அதன் காம்பிலும் அத்தனை அமிர்தங்களையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. காலையில் எழுந்ததும் முதலில் வெறும் வயிற்றில் முருங்கை கீரை சாப்பிட்டால், ஏராளமான இரும்பு சத்து நமக்கு கிடைக்கிறது. இதன் மூலம் ரத்த அணுக்களின் அளவு அதிகரித்து, ரத்த ஓட்டம் சீராகிறது. இரத்த ஓட்டம் சீரானாலே பல பிரச்சனைகளில் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

- Advertisement -

தினமும் வெறும் வயிற்றில் முருங்கைக்கீரை சாப்பிடுபவர்களுக்கு முடி கொட்டும் பிரச்சனையே வராது, மேலும் அவர்களுக்கு ரத்த சோகை நோயும் நெருங்காது. ஒரு கைப்பிடி அளவிற்கு முருங்கைக் கீரையை எடுத்து நன்கு சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் அவற்றை ஒரு குக்கரில் சேர்த்து அதனுடன் 10 சின்ன வெங்காயத்தை தோலுரித்து சேர்த்துக் கொள்ளுங்கள்.

இதனுடன் அரை ஸ்பூன் சீரகம், அரை ஸ்பூன் மிளகு தட்டி போடுங்கள். பின் தேவையான அளவிற்கு உப்பு, ஒரு சிட்டிகை அளவிற்கு மஞ்சள் சேர்த்து குக்கரை மூடி மூன்றிலிருந்து, நான்கு விசில் விட்டு எடுங்கள். பின்னர் இதை அப்படியே ஒரு பவுலில் ஊற்றி லேசாக சூடு ஆறியதும் பருகி விடுங்கள். கீரைகளை உருவும் பொழுது மெல்லிய காம்புகளையும் விடாமல் சேர்க்க வேண்டும். காம்பிலும் அதிக சத்துக்கள் உள்ளன எனவே அதனை வீணாக்கக்கூடாது.

- Advertisement -

இந்த எளிமையான முருங்கைக்கீரை சூப்பை தினமும் வெறும் வயிற்றில் சாப்பிட்டு, பின்னர் சிறிது நேரம் கழித்து நீங்கள் ஆரஞ்சு ஜூஸ் அல்லது விட்டமின் சி நிறைந்துள்ள லெமன் ஜூஸ் போன்ற சிட்ரஸ் பழங்களை ஜூஸ் போட்டு குடிக்க வேண்டும். இப்படி செய்தால் உங்களுடைய உடலில் ரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். எப்பொழுதும் இரும்பு சத்துடன், விட்டமின் சி சேரும் பொழுது தான் அது அபரிமிதமான வேலையை செய்கிறது.

இதையும் படிக்கலாமே:
இதமான தூக்கம் வருவதற்கு, தூக்கமின்மை பிரச்சனையை எதிர்கொள்வதற்கு சாப்பிட வேண்டிய ஒரு பொருள் என்ன? இதை சாப்பிட்டால் உடனே நல்லா தூக்கம் வருமா என்ன?

மேலும் முருங்கைக் கீரையை அடிக்கடி பொரியல் செய்தும் சாப்பிடலாம். கடுகு, உளுந்து, வரமிளகாய் தாளித்து, சுத்தம் செய்துள்ள முருங்கைக் கீரையை சேர்த்து நன்கு வதக்கி, தேவையான அளவிற்கு உப்பு போட்டு மூடி வைத்து வேக வைத்தால் ஐந்து நிமிடத்தில் நன்கு வந்து விடும். அதன் பிறகு துருவிய தேங்காயை கொஞ்சம் அதிகமாக சேர்த்து நன்கு பிரட்டி விடுங்கள். அவ்வளவுதான், சூப்பரான முருங்கைக் கீரை பொரியல் ரெடி! வாரம் இரண்டு அல்லது மூன்று முறை இதை சாப்பிட்டு வர முடி கொட்டும் பிரச்சினை முற்றிலும் மறையும். மேலும் உடலில் ஏராளமான சத்துக்கள் கிடைத்து நோயில்லா வாழ்வும் நிலைக்கும்.

- Advertisement -