2 ஸ்பூன் மைசூர் பருப்பு போதும். மேக்கப் போடாமலேயே 10 நிமிடத்தில் நீங்கள் அழகாக மாறிவிடுவீர்கள்.

face1
- Advertisement -

அழகான தோற்றம், நிலையாக இருக்க வேண்டும் என்றால் மேக்கப் போடாமலேயே நம் அழகு கூட வேண்டும். அப்போது தான் அழகு என்பது நம்முடன் நிலையாக இருக்கும். தேவையற்ற செயற்கையான பொருட்களை முகத்தில் போட்டுக் கொண்டு அழகு என்று சொல்லிக் கொண்டிருப்பதில் எந்த ஒரு பிரயோஜனமும் இல்லை. நீங்கள் கருப்பாக இருந்தாலும், மாநிறமாக இருந்தாலும், வெள்ளையாக இருந்தாலும், உங்களுடைய முகத்தில் ஒரு பொலிவு ஏற்பட இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பாருங்க. உங்க வீட்ல இருக்கக்கூடிய பொருட்களை வைத்தே எந்த பக்கவிளைவுகளும் ஏற்படாத ஒரு டிப்ஸ் உங்களுக்காக.

முதலில் 2 டேபிள்ஸ்பூன் மைசூர் பருப்பை எடுத்து தண்ணீரில் கழுவி விட்டு, அதன் பின்பு நல்ல தண்ணீரை ஊற்றி இரண்டிலிருந்து மூன்று மணி நேரம் நன்றாக ஊற வைத்துக் கொள்ள வேண்டும். இந்த பருப்பை ஊறிய தண்ணீரோடு எடுத்து மிக்ஸி ஜாரில் ஊற்றி நன்றாக முடிந்தவரை நைசாக அரைத்துக் கொள்ளுங்கள். இந்த விழுதை இப்போது நாம் வடிகட்டி கொள்ள வேண்டும். ஒரு வெள்ளைத் துணியில் ஊற்றி வடிகட்டி கொண்டால் மைசூர் பருப்பில் இருந்து மைசூர் பருப்பு சாறு மட்டும் நமக்கு கிடைக்கும்.

- Advertisement -

இப்போது இந்த சாறில் நாம் உலர்ந்த ரோஜா இதழ் பொடியை கலந்து கொள்ள வேண்டும். நாட்டு மருந்துக் கடைகளில் இது கிடைக்கும். இதோடு தேவைப்பட்டால் 1 ஸ்பூன் அளவு அலோ வேரா ஜெல் சேர்த்து நன்றாக கலந்து இந்த பேஸ்ட்டை முகம் முழுவதும் அப்ளை செய்து கொள்ள வேண்டும்‌. 20 நிமிடங்கள் கழித்து முகத்தை நன்றாக நனைத்து கொண்டு ஸ்கரப் செய்து குளிர்ந்த தண்ணீரில் முகத்தை கழுவி விட்டால் போதும். உங்களுடைய முகம் பளபளப்பாக மாறும்.

முகத்தில் இருக்கும் இறந்த செல்கள் அனைத்தும் நீங்கும் போது உங்களுடைய முகம் தானாகவே மேக்கப் போட்டது போல பொலிவை பெறும் என்பது குறிப்பிடத்தக்கது. மைசூர் பருப்பை அரைத்து எடுக்க கூடிய தண்ணீர் மிக மிக முக்கியம். அதை வைத்துதான் இந்த டிப்ஸ் ட்ரை பண்ண வேண்டும்.

- Advertisement -

ஆனால் அந்த தண்ணீரோடு சேர்ப்பதற்கு உலர்ந்த ரோஜா இதழ் பொடி சேர்க்கலாம். உலர்ந்த ஆவாரம் பூவின் பொடி சேர்க்கலாம். செம்பருத்திப் பூவின் பொடியை சேர்க்கலாம். அப்படி இதில் எதுவுமே கிடைக்கவில்லை என்றால் கோதுமை மாவு சேர்த்து கூட இந்த பேக்கை நீங்கள் ரெடி பண்ணி உங்களுடைய முகத்தில் அப்ளை செய்து கொள்ளலாம். ஆனால் கட்டாயம் மைசூர் பருப்பு என்று சொல்லப்படும் சிவப்பு துவரம்பருப்பை கட்டாயம் பயன்படுத்த வேண்டும்.

வாரத்தில் 2 லிருந்து 3 நாட்கள் இந்த பேக்கை உங்களுடைய முகத்திற்கு பயன்படுத்திக் கொள்ளலாம். எந்த ஒரு பக்க விளைவுகளும் ஏற்படாது. நீங்கள் நம்ப மாட்டீர்கள். உங்களுடைய பொலிவிழந்த முகம் பத்தே நிமிடத்தில் உடனடியாக பொலிவாக மாறி இருக்கும். ட்ரை பண்ணி பாருங்க. உங்களுக்கு இன்ட்ரஸ்ட் இருந்தா மட்டும்.

- Advertisement -