நடப்பதை முன் கூட்டியே அறியக்கூடிய சக்தி யாருக்கெல்லாம் இருக்கும் தெரியுமா? குலதெய்வம் உங்களுடன் இருப்பதை உணர்த்தும் அறிகுறிகள்!

kula-dheivam
- Advertisement -

நடப்பதை முன் கூட்டியே அறியக்கூடிய சக்தி ஒரு சிலருக்கு நிச்சயமாக இருக்கிறது. ஏதோ ஒரு ஆபத்து உங்களை வந்தடைய போகிறது என்றால், ஏதோ ஒரு சில அறிகுறிகள் மூலம் அதை முன்கூட்டியே சிலரால் அறிந்து கொள்ள முடியும். அது போல குலதெய்வம் நம் வீட்டில் நமக்கு துணையாக தான் இருக்கிறது என்பதை நாம் உணரக் கூடிய அறிகுறிகளும் நிச்சயம் அவ்வப்போது நமக்கு தோன்றிக் கொண்டே இருக்கும். இப்படியான விஷயங்களைப் பற்றிய அலசலை இப்பதிவின் மூலம் பார்ப்போம்.

நல்ல மனம் உடையவர்களுக்கு எப்போதும் நல்லதே நடக்கும் என்று கூறுவார்கள். எவ்வளவு தடைகள் வந்தாலும் இறுதியில் அவர்களுக்கு வெற்றியே கிடைக்கும். இதைத் தான் ‘தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், இறுதியில் தர்மமே வெல்லும்’ எனப்படுவது உண்டு. இது போல தர்மத்தின் வாழ்வில் நடக்கும் நபர்களுக்கு நடப்பதை முன் கூட்டியே அறியும் சக்தி இருக்குமாம். இவர்களுக்கு எவ்வளவு பெரிய ஆபத்துகள் வந்தாலும், அதை அறியும் முன் ஆற்றல் அவர்களிடம் இயல்பாகவே இருக்குமாம்.

- Advertisement -

இத்தகையவர்கள் எப்பொழுதும் பிறருக்கு துன்பம் இழைக்க மாட்டார்கள். வீட்டிற்கு வருபவர்களை இன்முகத்துடன் வரவேற்பார்கள். எங்கே வீட்டிற்கு உறவினர்கள் வந்து விடப் போகிறார்கள் என்று நினைப்பவர்கள் இவர்கள் அல்ல! குடும்பமும், உறவுகளும் முக்கியம் என்று நினைப்பவர்கள் கண்களுக்கு எமனையும் அறியும் சக்தி இருக்குமாம். கணவனே கண்கண்ட தெய்வம் என்று நினைக்கும் பதிவிரதை பெண்களுக்கும் வரவிருக்கும் ஆபத்தை முன் கூட்டியே அறியக்கூடிய சக்தி இருப்பதாக புராணங்கள் கூறுகிறது. அவர்களுக்கு வரப் போகும் ஆபத்து மட்டுமல்லாமல், அந்த குடும்பத்திற்கு ஏதாவது ஒரு பிரச்சினை வர போகிறது என்றாலும், அதை முன்கூட்டியே அவர்களுக்கு அறிகுறிகள் மூலம் உணர முடியுமாம்.

இல்லை என்று சொல்லும் மனப்பான்மை இல்லாதவர்களுக்கு இது போல வர இருக்கும் ஆபத்துகள் மட்டுமல்லாமல், குலதெய்வத்தையும் உணரும் சக்தி இருக்குமாம். இரக்க சுபாவம் உள்ளவர்கள், நல்ல மனம் படைத்தவர்கள், பிறர் துன்பம் கண்டு கண் கலங்குபவர்கள், யாருக்கும் துரோகம் செய்யாதவர்கள், தன் சுகங்களை தியாகம் செய்து இறைவனுக்காக தன்னை அர்ப்பணிப்பவர்கள், சித்தர்கள், ஞானிகள், ரிஷிகள் போன்றவர்களுக்கு இது போன்ற ஒரு சக்தி நிச்சயம் இருக்கும். பல சமயங்களில் அதை அவர்களால் உணர்ந்து கொள்ள முடியும். சில சமயங்களில் அது என்னவென்று புரியாமல் இருக்கும்.

- Advertisement -

குலதெய்வம் வீட்டில் இருந்தால் உங்களுக்கு சில அறிகுறிகளை மூலம் அதை உணரக்கூடிய சக்தி இருக்கும். மற்ற தெய்வங்களை காட்டிலும், உங்கள் குலத்தைக் காக்கும் குல தெய்வத்தை மனமுருகி வணங்கும் பொழுது, உங்கள் கண்களில் நிச்சயம் கண்ணீர் வரும். குலதெய்வ கோவிலுக்கு செல்லும் பொழுது உங்களுடைய சொந்த வீட்டிற்கு செல்லும் ஒரு உணர்வை ஏற்படுத்தும். நீங்கள் ஏதோ ஒரு விஷயத்தில் செய்ய இருக்கும் தவறை தடுத்து நிறுத்தக் கூடிய சக்தி குலதெய்வத்திற்கு உண்டு. பல சமயங்களில் நீங்கள் தடுமாற நினைக்கும் பொழுது குலதெய்வம் உங்களுக்கு காக்கும் அரணாக இருந்து வழி நடத்தி செல்லும்.

அது மட்டும் இல்லாமல் உயிருக்கு ஆபத்து என்கிற சூழ்நிலையிலும் கடைசி நேரத்தில் கூட நடப்பவை எல்லாம் நன்மையாக முடியக்கூடும் இந்த சமயங்களில் எல்லாம் குலதெய்வம் உங்களுடன் இருப்பதை நீங்கள் உணர்ந்து கொள்ளலாம். குலத்தைக் காக்கும் குலதெய்வத்தையும், உங்களுக்கு வரக்கூடிய ஆபத்தையும் நீங்கள் உணரக் கூடிய சக்தியை பெற ஆசையைத் துறந்து, பொறாமை என்னும் குணத்தை அழித்து குடும்பத்திற்காகவும், மற்றவர்களுக்காகவும், சமுதாயத்திற்காகவும், இறைவனுக்காகவும் உங்களை அர்ப்பணிக்க வேண்டும்.

- Advertisement -