வீட்டில் இருக்கும் தங்க நகைகள் அடகு கடைக்கு செல்லாமல் இருக்கவும், மகாலட்சுமியின் அருளை பரிபூரணமாக பெறுவதற்கும் இந்த முறையில் வழிபாடு செய்தாலே போதும். கெட்ட நேரங்கள் அனைத்தும் நல்ல நேரங்களாக மாறிவிடும்.

swarnalakshmi
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கையில் நல்ல நேரமும் கெட்ட நேரமும் மாறி மாறி தான் வந்து கொண்டே இருக்கும். நல்ல நேரத்தில் நாம் வாங்கிய பொருட்களை கெட்ட நேரத்தில் விற்கக்கூடிய சூழ்நிலை ஏற்படும். அதிலும் மிகவும் முக்கியமாக நாம் கூறுவது தங்க நகைகள் தான். எப்பேர்ப்பட்ட கெட்ட நேரமாக இருந்தாலும் தங்க நகைகள் நம்மை விட்டு செல்லாமல் இருப்பதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் கண்டிப்பான முறையில் தேவைப்படும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தங்க நகைகள் அடகு போகாமலும், அதே சமயம் விற்காமல் இருப்பதற்கு மகாலட்சுமி தாயாரின் அருளை எவ்வாறு பெற வேண்டும் என்று தான் பார்க்கப் போகிறோம்.

ஆபத்துக் காலங்களில் நமக்கு கை கொடுத்து உதவக்கூடியது நம்மிடம் இருக்கக்கூடிய தங்க நகைகள் தான். அவ்வாறு நாம் அடகு கடையில் வைக்கும் தங்க நகைகளை நாம் திருப்பி மீட்டு வர பல முயற்சிகளை செய்வோம். இருப்பினும் சில நேரங்களில் அந்த தங்க நகைகளை மீட்க முடியாமல் அதை ஏலம் விடுவதற்கு அல்லது விற்பதற்கு நேரிடும் பொழுது அதனால் மிகவும் மன வருத்தப்படுவோம். இந்த சூழ்நிலை ஏற்படாமல் இருப்பதற்கு மகாலட்சுமி தாயாரின் அருள் கண்டிப்பாக தேவை. அப்படி மகாலட்சுமி தாயாரின் அருளை பெறுவதற்கு நாம் பல வழிபாட்டு முறைகளையும் செய்வோம். இந்த பதிவில் மிகவும் எளிமையான வழிபாட்டு முறையை தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பூஜையை வியாழக்கிழமை அல்லது வெள்ளிக்கிழமை ஆரம்பித்தால் அதன் பலன் சற்று கூடுதலாக இருக்கும். சுத்தமான ஒரு பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சுத்தமான தண்ணீர் வைத்து அதனுடன் பன்னீர் சிறிதளவு சேர்க்க வேண்டும். பிறகு அதில் வாசனை மிகுந்த மலர்களான மல்லிகை, முல்லை, பிச்சி போன்ற பூக்களில் ஏதாவது ஒன்றை போட வேண்டும்.

பிறகு அதில் 5 நாணயங்களை போட வேண்டும். இந்த பாத்திரத்தை பூஜையறையில் வைத்து நாம் கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து “ஓம் சுதர்சனாய நமஹ” என்ற மந்திரத்தை 16 முறை உச்சரிக்க வேண்டும். இந்த மந்திரம் மகாவிஷ்ணுவின் கையில் இருக்கும் சுதர்சன சக்கரத்திற்குரிய மந்திரம் ஆகும்.
இந்தச் சக்கரம் காலச்சக்கரமாகவும் கருதப்படுகிறது. ஒருவருக்கு கெட்ட நேரம் ஏற்பட்டிருக்கும் நிலையில் இந்த மந்திரத்தை மனதார கூறி வழிபட்டால் கெட்ட நேரமும் நல்ல நேரமாக மாறிவிடும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

பிறகு மகாலட்சுமி தாயாருக்கு 2 நெய் தீபங்களை ஏற்றி மகாலட்சுமி தாயாரின் அம்சமான சுவர்ணலட்சுமி மனதார நினைத்து வழிபட வேண்டும். பிறகு அந்த தீர்த்தத்தை பணம், நகை வைக்கும் இடங்களில் தெளித்துவிட்டு வீடு முழுவதும் தெளிக்க வேண்டும். இந்த பரிகாரத்தை நாம் தொடர்ந்து செய்து கொண்டே வரலாம். வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ அல்லது தினந்தோறும் இந்த பரிகாரத்தை நாம் செய்யலாம். எந்த அளவுக்கு மனதார இந்த பரிகாரத்தை செய்து மந்திரத்தை உச்சரிக்கிறோமோ அந்த அளவுக்கு நமக்கு நன்மைகள் உண்டாகும் என்பது குறிப்பிடத்தக்கது

இதையும் படிக்கலாமே: எவ்வளவு பாடுபட்டாலும் சொந்த நிலத்தை விற்க முடியாமல் கஷ்டப்படுபவர்கள் அங்காரகனுக்கு இப்படி தீபம் ஏற்றி வழிபட்டால் விரைவிலேயே நிலம் விற்று விடும்.

இந்த எளிமையான பரிகாரத்தை நாம் மனதார செய்து நாம் கஷ்டப்பட்டு சம்பாதித்த பொருட்களை நம்முடன் தக்க வைத்துக் கொள்வோம்.

- Advertisement -