நகை அடமானம் போகாமல் இருக்க

- Advertisement -

இன்றைய காலக்கட்டத்தில் ஒரு குண்டுமணி தங்கத்தை சேர்ப்பதே பெரிய பாடாக இருக்கிறது. அதையும் மீறி நாம் எப்படியோ பாடுபட்டு வாங்கி சேர்த்து விட்டோம் என்றால் அந்த நகையை நாம் நிம்மதியாக அணைந்து கொள்ளவும் பத்திரமாக வைத்து அழகு பார்க்கவும் முடியவதில்லை. இன்னும் சிலராலும் நகையை வாங்கவே முடியவில்லை. இதற்கு காரணம் நகை மீது ஏற்படும் திருஷ்டியும் தோஷமும் தான்.

நாம் பாடுபட்டு நகை வாங்கி வெளியில் அணிந்து சென்றால் போதும் மறுபடியும் அந்த நகையை நாம் அணியவே முடியாத அளவிற்கு திருஷ்டி ஆகி விடும். அதன் பிறகு நகையை வீட்டில் கொண்டு வந்து வைப்பதற்குள் ஒன்று நகைக்கு ஏதாவது ஆகிவிடும் அல்லது ஏதோ ஒரு சூழ்நிலைக்கு அடமானம் சென்று விடும். இது பெரும்பாலான அனுபவிக்கும் ஒன்று தான். இது நகை மீது ஏற்படும் திருஷ்டி.

- Advertisement -

நகையே வாங்க முடியாமல் திணறுவதற்கு காரணம் சொர்ண தோஷமாக தான் இருக்கும். ஒன்று நகையே வாங்க முடியாது அல்லது வாங்கிய நகையை நாம் நல்ல முறையில் பயன்படுத்த முடியாது. இவை இரண்டையும் சரி செய்யக் கூடிய ஒரு எளிமையான பரிகாரத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

தங்க நகை அடமானம் போகாமல் இருக்க

இந்த பரிகாரத்தை நீங்கள் பூஜை அறை அல்லது வரவேற்பறை எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். ஆனால் குளித்து விட்டு சுத்தமாக செய்யுங்கள். இதற்கு ஒரு சிறிய தாம்பாள தட்டை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் மண் அகல் வைத்து மஹாலக்ஷ்மி தாயாரை மனதார வேண்டி கொண்டு தீபம் ஏற்றி விடுங்கள். அதன் அருகில் சாம்பிராணி தூபமும் தயார் செய்து போட்டு வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து ஒரு சிறிய கிண்ணத்தில் காய்ச்சாத பசும்பால் ஒரு கப், அதே அளவு பன்னீர் அதே அளவு இளநீர் இவை மூன்றையும் ஒன்றாக கலந்து வைத்து விடுங்கள். இப்போது இந்த கலவையில் உங்களுடைய நகைகளை போட்டு மூன்று முறை முட்டி எடுக்க வேண்டும். அப்போது மனதார இந்த நகை மேலும் பெருக வேண்டும் என்றும் நகை அடமானம் செல்லக் கூடாது என்று பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள்.

அதன் பிறகு நல்ல சுத்தமான தண்ணீரில் கழுவி விட்டு சாம்பிராணி தூபம் போட்டு அதில் இந்த நகைகளை காட்டுங்கள். அதே போல் எரிந்து கொண்டிருக்கும் தீபத்தின் ஒளியிலும் இந்த நகையை காட்டுங்கள். இப்படி நெருப்பில் காட்டும் போது பத்திரமாக செய்யுங்கள. நகையை நெருப்பில் போட்டு விடாதீர்கள். இந்த முறையில் சுத்தம் செய்த நகையானது ஒரு போதும் உங்களை விட்டு போகாது என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: பிடித்த வேலை கிடைக்க பரிகாரம்

பெரும்பாலும் நமக்கு ஏற்படும் இது போன்ற பிரச்சனைகள் அனைத்தும் நகைக்கு ஏற்படும் தோஷம் அல்லது கண் திருஷ்டியை காரணமாக இருக்கும். அவை இரண்டையும் இந்த முறையில் சரி செய்து கொள்ளலாம். இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் நம்பிக்கையுடன் செய்து மேலும் மேலும் நகைகளை பெருக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -