இந்த இலையில் நீங்கள் வாங்க நினைக்கும் தங்கத்தை எழுதி வைத்து விட்டால், நிச்சயம் அந்த நகை உங்களை வந்து அடைந்தே தீரும் என்பதில் சந்தேகமே இல்லை.

- Advertisement -

தங்க நகை அதிகமாக வாங்கி சேர்க்க வேண்டும் என்று நினைக்காத பெண்களை கிடையாது. எவ்வளவு நகை இருந்தாலும் இன்னும் வேண்டும் என்று ஆசைப்படுவது பெண்களுக்கு இயற்கையாகவே அமைந்த குணம். இன்றைய காலக்கட்டத்தில் ஆண்கள் கூட நகைகள் வாங்குவது அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இந்த நகை வாங்கும் ஆர்வம் இருப்பவர்கள் மேலும் மேலும் சேர்க்க வழி தூண்டுகிறது. சாதாரணமான நடுத்தர வர்க்கத்தை சேர்ந்தவர்களுக்கும் இந்த ஆசைகள் இருக்கத் தானே செய்யும்.

அந்த வகையில் நகைகளை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என நினைக்கும் யாராக இருந்தாலும் இந்த ஒரு எளிய பரிகாரத்தை செய்யும் போது நகை மேலும் மேலும் வாங்குவதற்கான யோகங்கள் வந்து சேரும் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

தங்கம் அதிகம் சேர செய்ய வேண்டிய பரிகாரம்
தங்க நகை அதிகமாக சேர வேண்டும் என்றால் முதலில் அதற்கான முதலீடுகளை நாம் சரியாக செய்ய வேண்டும். சிறுக சிறுக பணம் சேர்த்து நகை வாங்க வேண்டும் என்றாலும், முடிவு செய்த படியே நாம் எடுக்க வேண்டும். அப்போது தான் நகை சேரும். ஒரு முறை நகை வாங்க வேண்டும் என்று நினைத்து சேர்த்து பணத்தில் நகை வாங்காமல் வேறு செலவு செய்யும்போது மறுபடியும் நகை சேர்வதற்கான வாய்ப்பு நமக்கு அமையாது என்று சொல்லப்படுகிறது. இந்த விஷயத்தை கவனத்தில் கொண்டு நகை சேர்வதற்கான இந்த பரிகாரத்தையும் பார்க்கலாம் வாங்க.

முதலில் நீங்கள் நகை வாங்கியவுடன் அதை அப்படியே அணிவதோ அல்லது அப்படியே பூஜை அறையில் வைப்பது கூடாது. சிறிய பொண்டுமணி தங்கமாக இருந்தாலும் கூட வாங்கி வந்த பிறகு அதை சுத்தமான பன்னீரில் நகையை கழுவ வேண்டும். அதன் பிறகு நல்ல சுத்தமான துணியால் நகையை துடைத்து விட வேண்டும். அதன் பிறகு தான் நகையை பூஜை அறையில் நாம் வைக்க வேண்டும்.

- Advertisement -

அப்படி நாம் வைக்கும் இந்த நகையை பூஜை அறையில் பெருமாள் படத்திற்கு முன்பாக வைத்து அகல்விளக்கில் நெய் ஊற்றி திரி போட்டு தீபம் ஏற்றிய பிறகு இந்த நகைகளை வாங்குவதற்கான யோகத்தை தந்ததற்கு நன்றி என்றும் மேலும் மேலும் நகை வாங்குவதற்கான யோகம் எனக்கு கிடைக்க வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ளுங்கள்.

அதன் பிறகு ஒரு சிகப்பு நிற வெல்வெட் துணியில் நீங்கள் வாங்கிய நகையை வைத்து விடுங்கள். அது ஒரு சின்ன நகையாக இருந்தாலும் பரவாயில்லை அதிலே வைத்து விடுங்கள். அத்துடன் ஒரு பட்டை , பச்சைக் கற்பூரம், ஏலக்காய், கிராம்பு இவை அனைத்தையும் வைத்த பிறகு ஒரு பிரியாணி இலையை எடுத்து அதில் இதன் பிறகு நீங்கள் வாங்க நினைக்கும் நகையை அதில் எழுத வேண்டும்.

- Advertisement -

அதாவது நீங்கள் இப்போது ஒரு கம்மல் வாங்கி இருக்கிறீர்கள் அடுத்தது வளையல் வாங்க வேண்டும் என்றால் அடுத்து நான் இத்தனை பவுனில் வளையல் வாங்க ஆசைப்படுகிறேன் என்று எழுதி அந்த பிரியாணி இலையும் இந்த நகை துணியுடன் பீரோவில் வைத்து விடுங்கள். எந்த ஒரு ஆசையும் தேவையும் இந்த பிரியாணி இலையில் எழுதி வைக்கும் போது அதற்கான பலன் பல மடங்கு நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த விளக்கை ஒரு முறை ஏற்றினால் போதும். அஷ்டலட்சுமிகளும் வந்து நம் வீட்டில் ஐக்கியமாகி விடுவார்கள்.

இதன் பிறகு நீங்கள் நகை சேர்த்த எடுக்கும் ஒவ்வொரு முயற்சியும் நிச்சயம் உங்களுக்கு கை கொடுக்கும். நீங்கள் நகை வாங்க வேண்டும் என நினைத்து சேமிக்க ஆரம்பித்தால் நிச்சயமாக அதற்கான வழியும் கிடைக்கும். நகை அதிகமாக சேர்வதற்கான வாய்ப்பு உங்களை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது.

- Advertisement -