இந்த விளக்கை ஒரு முறை ஏற்றினால் போதும். அஷ்டலட்சுமிகளும் வந்து நம் வீட்டில் ஐக்கியமாகி விடுவார்கள்.

- Advertisement -

நம்முடைய வாழ்க்கையை வளமாகவும், சந்தோஷமாகவும், செல்வ செழிப்போடும் வாழ வேண்டும் என்றால், ஒரு லட்சுமியின் ஆசீர்வாதம் மட்டும் கிடைத்தால் போதாது. அந்த அஷ்டலஷ்மிகளின் ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டும். எட்டு லட்சுமி களின் ஆசீர்வாதத்தை ஒட்டுமொத்தமாக பெறுவது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. இந்த அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதத்தை அப்படியே பெறுவதற்கு உண்டான ஆன்மீகம் சொல்லும் ஒரு எளிய வழிபாட்டு முறையைத்தான் இன்று நாம் பார்க்க போகின்றோம். வருடத்தில் ஒருமுறை இந்த வழிபாட்டை செய்தாலும், உங்கள் குடும்பத்திற்கு அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதம் எப்போதும் கிடைக்கும். வாங்க அந்த எளிமையான வழிபாடு என்ன என்பதை இந்த பதிவை படித்து தெரிந்து கொள்வோம்.

அஷ்ட லட்சுமிகளின் ஆசீர்வாதத்தை பெற்று தரும் தீப வழிபாடு:
முதலில் எந்த வழிபாடாக இருந்தாலும் அந்த வழிபாட்டில் தடைகள் வரக்கூடாது என்பதற்காக விநாயகரை வழிபாடு செய்வோம். ஒரு வெற்றிலையின் மேல் மஞ்சள் பிள்ளையாரை பிடித்து வைத்து, அவருடைய தலையில் ஒரு அருகம்புல்லை சொருகி வையுங்கள். அதன் பிறகு இந்த அஷ்டலஷ்மி வழிபாட்டை செய்ய தொடங்கலாம்.

- Advertisement -

அஷ்ட லட்சுமிகளுக்கும் விளக்கு தனித் தனியாக, ஒவ்வொரு விளக்குகள் ஏற்ற வேண்டும். சின்ன சைஸில் மண் அகல் விளக்குகள் கிடைக்கிறது அல்லவா. அதை எட்டு என்ற கணக்கில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அந்த எட்டு விளக்கிலும் நெய் ஊற்றி மஞ்சள் திரி போட்டு தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அதன் பிறகு ஒரு தாம்பூல தட்டுக்கு மேலே பச்சரிசியை பரப்பிக் கொள்ளவும். பச்சரிசிக்கு மேலே இந்த தீபங்களை அடுக்கி வைத்து ஏற்றவும்.

அதன் பிறகு அஷ்டலட்சுமிகளின் ஒவ்வொரு பெயராக சொல்லி போற்றி மந்திரத்தை சொல்ல வேண்டும். ஓம் ஆதிலட்சுமி போற்றி, ஓம் தான்யலட்சுமி போற்றி, ஓம் வீரலட்சுமி போற்றி, ஓம் கஜலட்சுமி போற்றி, ஓம் சந்தான லட்சுமி போற்றி, ஓம் விஜயலட்சுமி போற்றி, ஓம் வித்யா லட்சுமி போற்றி, ஓம் தனலட்சுமி போற்றி, என்ற அஷ்ட லட்சுமிகளின் பெரைச் சொல்லி இப்படி இந்த மந்திரத்தை உச்சரிக்க வேண்டும்.

- Advertisement -

பசும்பாலில் நெய் முந்திரிப்பருப்பு திராட்சை ஏலக்காய் போட்ட வாசம் நிறைந்த பாயசம் நிவேதனமாக வைத்து அஷ்டலஷ்மிகளையும் போற்றி மந்திரம் சொல்லி வீட்டிற்குள் அழைத்து, கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜை செய்யுங்கள். இறுதியாக மனதார உங்களுடைய பிரார்த்தனையை அஷ்டலட்சுமிகளிடம் வையுங்கள். வீட்டில் இருக்கக் கூடிய குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் இந்த பூஜையை நம்பிக்கையோடு செய்ய வேண்டும் அதாவது பூஜையில் வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் அமர்ந்து கலந்து கொள்ள வேண்டும்.

மன மகிழ்ச்சியோடு இந்த பூஜையை ஒரு வீட்டில் வருடத்திற்கு ஒருமுறை செய்தால் கூட அந்த வீட்டிற்கு அஷ்டலட்சுமிகளின் ஆசீர்வாதமும் கிடைக்கும். பூஜை நிறைவடைந்த பிறகு பாயசத்தை வீட்டில் இருப்பவர்கள் அனைவரும் சாப்பிடலாம். மறுநாள் விளக்குக்கு கீழே வைத்திருக்கும் பச்சரிசியை எடுத்து நாம் எப்போதும் போல சமைப்பதற்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே: பெண்களுக்கு அடிக்கடி வரும் முன் கோபத்தை குறைக்க, இந்த 1 பொருளை வாயில் போட்டுக் கொண்டாலே போதும். நீங்கள் சாந்த சொரூபிணி ஆகி விடுவீர்கள்.

அஷ்டலட்சுமிகளையும் வீட்டிற்குள் அழைக்கும் பூஜை இதுதான். இதை மனநிறைவோடு செய்தாலே வீட்டில் பல பிரச்சனைகள் தீரும். நம்பிக்கை உள்ளவர்கள் இந்த வழிபாட்டை மேற்கொண்டு பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -