வீட்டில் தங்க நகை கிடு கிடுவென சேர இந்த தண்ணீரை வீடு முழுவதும் தெளித்து விட்டால் போதும். தங்கத்தை வாங்கி குவிக்கும் யோகத்தை தரக் கூடிய அற்புத பரிகாரம்.

perumal gold water
- Advertisement -

தங்கம் வாங்க வேண்டும் அதை சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இல்லாதவர் யாரும் இல்லை. ஒரு சிலருக்கு என்ன தான் போராடினாலும் தங்கம் வாங்கும் யோகமே இருக்காது. அதே நேரத்தில் வாங்கிய நகையை அணியும் யோகமும் இருக்காது. தங்கம் வாங்கவும், வாங்கிய நகை அடமானம் செல்லாமல் இருப்பதற்கும் இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

வீட்டில் தங்க நகை சேர பரிகாரம்:
இந்த பரிகாரம் செய்வதற்கு ஒரு சிறிய கிண்ணத்தில் சுத்தமான தண்ணீர் எடுத்துக் கொள்ளுங்கள். அதில் கொஞ்சம் பன்னீரை கலந்த கொள்ளுங்கள். மேலும் அதில் நல்ல வாசனை மிக்க மல்லி, பிச்சி போன்ற மலர்களை சேர்த்த பின் ஐந்து நாணயங்களை அதில் சேர்த்து கொள்ளுங்கள்.

- Advertisement -

இப்போது இவையெல்லாம் கலந்த இந்த தண்ணீர் கிண்ணத்தை கையில் வைத்துக் கொண்டு கிழக்கு பார்த்தவாறு அமர்ந்து கொள்ளுங்கள். ஓம் சுதர்சனாய நமக என்ற இந்த மந்திரத்தை 16 முறை ஜெபித்துக் கொள்ளுங்கள். இந்த பூஜையை உங்கள் வீட்டு பூஜை அறையிலும் செய்யலாம், வரவேற்பு அறையிலும் செய்யலாம். இப்படி பூஜை செய்த பிறகு இந்த தண்ணீரை கையில் எடுத்து கொண்டு இங்கு இருக்கும் கெட்டவை அனைத்தும் நீங்கி நல்லது தேடி வர வேண்டும் என்று சொல்லி வீடு முழுவதும் இதை தெளித்து விடுங்கள். அதே போல் நீங்கள் பணம் வைத்து எடுக்கும் இடம், பீரோ போன்றவற்றின் மீதும் இந்த தண்ணீரை தெளித்து விடுங்கள்.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்ய செய்ய உங்களிடம் இருக்கும் தோஷங்கள் அனைத்தும் நீங்கி தங்கம் உங்களை தேடி வர இது வழி செய்யும். இந்த தண்ணீரை தெளித்த பிறகு இதில் இருக்கும் அந்த சில்லறை நாணயத்தை நீங்கள் பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடுங்கள். இது பணவரவையும் அதிகப்படுத்தி கொடுக்கும்.

- Advertisement -

இதை செய்வதோடு வீட்டில் மகாலட்சுமி தாயாருக்கு தினமும் இரண்டு நெய் தீபம் தவறாமல் ஏற்றி அவர்களையும் வழிபட்டு வாருங்கள். நிச்சயம் தங்கம் தானாக உங்களைத் தேடி வரும் யோகம் கிடைக்கும். நீங்கள் தங்கம் வாங்க எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கும் இந்த பரிகாரம் கை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே: பெண்களின் பிரச்சனை எல்லாம் தீர ஒரே ஒரு விரலி மஞ்சள் இருந்தால் போதும். தெய்வ அனுகிரகத்தோடு இதை கொண்டே எதையும் தவிடுபொடி ஆக்கலாம்.

இந்த பரிகாரத்தில் முக்கியமானது நாம் தங்கம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எடுக்கும் அத்தனை முயற்சிகளும் தடை இல்லாமல் அதற்கான பலன்களை தருவது. நம்பிக்கையுடனும்,முயற்சியுடனும் இந்த எளிய பரிகாரத்தையும் சேர்த்து தங்கம் வாங்கும் யோகத்தை பெற்றுக் கொள்ளலாம்.

- Advertisement -