பணம் நகை சொத்து சேர பஞ்சமி தீபம்

panajami dheepam
- Advertisement -

திதிகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு தெய்வத்திற்கு உகந்ததாகவும் தெய்வ வழிபாட்டிற்கு உகந்ததாகவும் சொல்லப்படுகிறது. திதிகள் மொத்தம் 15. இது வளர்பிறை திதி தேய்பிறை என மாறி மாறி வரும். அந்த வகையில் பஞ்சமி திதி மிகவும் விசேஷமானது. பஞ்சமி திதி வழிபாடானது வாராகி அன்னைக்கு மிகவும் உகந்தது. இது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான்

அதே பஞ்சமி திதியில் நாம் செய்யப் போகும் இந்த தீப வழிபாடானது நமக்கு தேவையான பணம் நகை சொத்து போன்றவற்றை நமக்கு ஈட்டி தரும். அத்துடன் நாகதேவதை ராகு கேது போன்றோரின் அருளாசியும் நமக்கு தரும் என்பது பலரும் அறியாத ஒன்று. அதை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

பணம் நகை சொத்து சேர பஞ்சமி திதி வழிபாடு

இந்த வழிபாட்டை மாதம் தோறும் வரும் இரண்டு பஞ்சமி திதிகளிலும் செய்யலாம். இந்த வழிபாட்டை காலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்ய வேண்டும். அதை தவற விட்டால் மாலை 5.30 மணிக்கு மேல் இரவு 10 மணிக்குள்ளாக செய்துவிட வேண்டும். இடைப்பட்ட காலத்தில் இதை செய்யக் கூடாது.

இந்த வழிபாடு செய்ய பூஜை அறையில் தீபம் ஏற்றுவது சிறந்தது. பூஜை அறை இல்லாதவர்கள் பூஜை செய்வதற்கென வீட்டில் ஏதேனும் ஒரு இடம் ஒதுக்கி இருப்பீர்கள் அல்லவா அந்த இடத்திற்கு கீழே இந்த தீபத்தை ஏற்றுங்கள். இதற்கு முதலில் ஒரு பெரிய தாம்பாள தட்டை எடுத்து சுத்தம் செய்து அதற்கு மஞ்சள் குங்குமம் பொட்டிட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அடுத்து அந்த தாம்பாள தட்டு முழுவதுமாக மஞ்சளை கொட்டி பரப்பி விடுங்கள். அதன் மேல் ஐந்து அகல் விளக்கில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நல்லெண்ணெய் ஊற்றி இரட்டை திரி போட்டு தீபம் ஏற்ற தயாராக வைத்து விடுங்கள். இந்த விளக்கு ஒவ்வொன்றுக்கும் ஒரு பூவை வைத்து அலங்காரம் செய்து விடுங்கள். அடுத்து இந்த ஐந்து தீபத்தையும் ஏற்றி கற்பூர தீபாராதனை ஊதுபத்தி அனைத்தையும் இந்த விளக்கிற்கு காட்டுங்கள்.

அதன் பிறகு இந்த தீபத்தின் முன் அமர்ந்து உங்களுக்கு என்ன தேவையோ அதை மனதார கேட்டு பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். இந்த வழிபாடு மாதம் தோறும் வரும் இரண்டு பஞ்சமி திதியில் தொடர்ந்து செய்து வர வேண்டும். இதை செய்ய செய்ய பணம் நகை சொத்து எல்லாம் உங்களைத் தேடி வருவதற்கான யோகம் கிடைக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

இதையும் படிக்கலாமே: குலதெய்வம் வீட்டிற்கு வர தீபம்

அத்துடன் இந்த தீப வழிபாடானது பஞ்சமியின் செய்வதால் வாராகி அன்னை, நாக தேவதை, ராகு கேது போன்ற அனைவரின் ஆசீர்வாதத்தையும் பெற்று தரும் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தீப வழிப்பாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பணம் நகை சொத்து சுகத்துடன் சந்தோஷமாக வாழக் கூடிய பாக்கியத்தை பெறுங்கள்.

- Advertisement -