திருமண நாள், பிறந்த நாள் போன்ற விழாக்களின் பொழுது இந்த தானம் செய்தால் சுகபோக வாழ்வு கிட்டுமாம்! என்ன காரணம் தெரியுமா?

sukran-silver-ring
- Advertisement -

நம் ஒவ்வொருவருடைய வாழ்க்கையில் மிக முக்கியமான நாட்கள் பிறந்தநாள் மற்றும் திருமண நாள் ஆகும். ஒவ்வொரு பிறந்த நாளும் நமக்கு அவ்வருடத்திய மிகவும் விசேஷமான நாளாக அமையும். அதே போல தான் திருமண நாள் என்பதும் மிகவும் விசேஷமான இனிய நாளாக அமைந்து இருக்கும். அப்படியான நாட்களில் இந்த தானம் செய்யும் பொழுது சுக்கிரனுடைய அருள் பரிபூரணமாக கிடைக்கும் அதனால் உண்டாகக்கூடிய பலன்கள் ஏராளம் என்று கூறலாம். அப்படி நாம் என்ன தானம் செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

sukran

உங்களுடைய திருமண நாள் மற்றும் பிறந்தநாள் விழாக்களின் பொழுது நீங்கள் செய்ய வேண்டிய மிக முக்கியமான தானங்களில் ஒன்றாக ஜோதிடம் இந்த தானத்தை குறிப்பிட்டு கூறுகிறது. அதற்கு மிக முக்கிய காரணம் சுக்கிர பகவான் தான். நம் ஜாதகத்தில் இருக்கும் சுக்கிரனின் அம்சம் சுக போக வாழ்வை குறிக்கிறது. ஒருவர் எல்லா நலன்களும், வளங்களும் பெற்று சுகபோகமாக வாழ்கிறார்கள் என்றால் அதற்கு காரண கர்த்தாவாக இருப்பவர் சுக்கிரன் ஆவார்.

- Advertisement -

சுக்கிரனின் அருள் நமக்கு இருந்தால் தான் நம்மால் சுகபோகமான வசதியான வாழ்க்கையை அனுபவிக்க முடியும். சுக்ரனுக்கு உகந்த உலோகம் வெள்ளி மற்றும் கண்ணாடி ஆகும். கண்ணாடி பொருட்களை வீடு முழுவதும் அலங்கரித்து வைத்திருப்பவர்களுக்கு மென்மேலும் வசதி வாய்ப்புகள் பெருகுவதை பார்த்து இருப்பீர்கள். கண்ணாடி மாளிகையில் அமர்ந்திருப்பவர்கள் வசதி வாய்ப்புகளோடு இருப்பதற்கு அவர்களுக்கு சுக்கிரனின் அருள் கிடைப்பது தான் காரணமாக இருக்கும்.

silver-things

அந்த வகையில் நம்முடைய வாழ்வின் முக்கிய நாட்களாக இருக்கும் பிறந்த நாள் மற்றும் திருமண நாள் அன்று வெள்ளியால் ஆன பொருட்களை தானம் செய்தால் சுக்கிரனுடைய அருள் கிடைத்து சுகபோக வாழ்வு கிட்டும் என்பது ஐதீகம். உங்களுடைய பிறந்த நாளின் பொழுது பரிசுப் பொருளாக உங்களுக்கு தான் அனைவரும் எதையாவது கொடுப்பார்கள். ஆனால் நீங்கள் செய்யும் இந்த தானம் உங்களுக்கு கொடுக்க கூடிய நன்மைகள் ஏராளம் என்று சொல்லலாம்.

- Advertisement -

வெள்ளியாலான மோதிரம், வெள்ளியாலான பூஜை பொருட்கள், பண்ட, பாத்திரங்கள் என்று எதுவாக இருந்தாலும் பரவாயில்லை ஆனால் வெள்ளியில் ஒரு பொருளை நீங்கள் வரியவர்களுக்கு தானம் செய்தால் நிச்சயம் சுக்கிரனுடைய அருட்கண் பார்வை உங்கள் மீது படும். உங்களுக்குக் கீழ் பணிபுரிபவர்கள், தொழிலாளர்கள், வேலைக்காரர்கள் என்று யாராவது இருந்தால் அவர்களுக்கு இந்த தானத்தை நீங்கள் வழங்கலாம், அப்படி அல்லாதவர்கள் உங்களுக்கு தெரிந்த நண்பர்கள், வசதி வாய்ப்பு இன்றி இருப்பவர்களுக்கு தானம் செய்தால் உங்களுடைய வசதி வாய்ப்புகளும், அவருடைய வாழ்க்கையும் மேம்படும்.

silver-ring

வெள்ளியை தானம் கொடுப்பவருக்கும், வாங்குபவருக்கும் சமமான பலன்களை தான் கொடுக்கும். எனவே கொடுத்த உங்களுக்கு மட்டுமல்லாமல் அதை வாங்குபவர்களுக்கும் அது நலம் பயக்கும் என்பதால் நாம் மனமார இதனை தானம் செய்யலாம். இந்த தானத்தை இரத்த, பந்த சொந்த உறவுகளுக்கு கொடுக்கக் கூடாது, வசதி வாய்ப்புகள் பெருகி இருப்பவர்களுக்கு கொடுக்கக் கூடாது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். ஒரு சிறிய வெள்ளி கம்மல், மூக்குத்தி போன்ற பொருட்களை வாங்கி கொடுத்தால் கூட போதும், அதன் விலை என்னவோ குறைவு தான் ஆனால் பலன் என்னவாக நிச்சயம் நிறைவாக இருக்கும்.

- Advertisement -