இந்த பூஜையில் கலந்து கொண்டால் திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமையும்.

palliyarai poojai
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக அமைய வேண்டும் என்றால் அவருடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான் அவருடைய வாழ்க்கை முழுமையாக சந்தோஷத்தில் இருக்கும். அப்படி சந்தோஷமான திருமண வாழ்க்கை அமைவதற்கு சிவன் கோவில்களில் அன்றாடம் நடக்கக்கூடிய எந்த பூஜையை தரிசிக்க வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக திருமணம் தொடர்பாக ஏற்படக்கூடிய பிரச்சனைகள் என்று பார்க்கும் பொழுது திருமணம் நடைபெறாமல் தள்ளிப் போவது அல்லது நல்ல கணவனோ மனைவியோ அமையாமல் இருப்பது, குடும்பத்தில் எதற்கெடுத்தாலும் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் ஏற்பட்டு நிம்மதி இல்லாத சூழ்நிலை ஏற்படுவது, குழந்தை பாக்கியம் இல்லாமல் இருப்பது இவைதான் முதன்மையான பிரச்சினைகளாக கூறப்படுகிறது.

- Advertisement -

இந்த பிரச்சனைகள் அனைத்தையும் தீர்ப்பதற்கு நமக்கு அருள் புரிய கூடியவர்கள் தான் சிவபெருமானும் பார்வதி அம்மனும். அனைத்து சிவாலயங்களிலும் பள்ளியறை என்ற ஒரு அறை இருக்கும். அந்த அறையில் பார்வதி தேவி மட்டும் இருப்பார்கள். இரவு அனைத்து பூஜைகளும் முடிந்த பிறகு சிவபெருமானை பல்லாக்கில் சுமந்து கொண்டு பள்ளியறைக்கு சென்று அங்கு பூஜைகள் செய்து அம்பாளுடன் சேர்த்து வைப்பார்கள். இவ்வாறு நடக்கக்கூடிய இந்த நிகழ்வைதான் பள்ளியறை பூஜை என்று கூறுகிறோம்.

இந்த பள்ளியறை பூஜையில் கணவனும் மனைவியும் கலந்து கொள்ளும் பொழுது அவர்களின் மண வாழ்க்கையில் இருந்து வந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும் என்று சொல்லப்படுகிறது. நல்லவரன் அமைய வேண்டும் என்று எதிர்பார்த்து இருக்கும் நபர்களும் இந்த பள்ளியறை பூஜையில் கலந்து கொள்ளலாம். அவ்வாறு கலந்து கொள்ளும் பொழுது அந்த பள்ளியறை பூஜைக்கு தேவையான பொருட்களை தானமாக வழங்க வேண்டும். அது மட்டுமல்லாமல் பூஜை முடிந்த பிறகு அங்கு இறைவனுக்கு நெய்வேத்தியம் செய்யப்பட்ட பாலை பிரசாதமாக வழங்குவார்கள்.

- Advertisement -

அந்த பாலை தொடர்ந்து அருந்தி வருவதன் மூலம் திருமண வாழ்க்கையில் இருக்கக்கூடிய பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். குழந்தை பேரு இல்லாமல் இருக்கும் தம்பதிகள் ஒன்றாக இணைந்து இந்த பள்ளியறை பூஜையை பார்த்து தரிசனம் செய்வதன் மூலம் விரைவிலேயே குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்றும் கூறப்படுகிறது.

தங்கள் வாழ்க்கையை நல்ல விதமாக அமைத்துக் கொள்வதற்கு தேவையான அனைத்தும் தங்கள் கைக்கு வந்து சேரும் என்றும் கூறப்படுகிறது. முறையாக அனுதினமும் நடக்கக்கூடிய இந்த பள்ளியறை பூஜையை எவர் ஒருவர் தரிசிக்கிறாரோ அவருடைய வாழ்க்கையில் எண்ணில் அடங்காத நன்மைகளை அவரால் பெற முடியும் என்பது தான் நிதர்சனமான உண்மை.

இதையும் படிக்கலாமே: இந்த பரிகாரத்தை செய்தால் நம்முடைய கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி செல்வ செழிப்பு ஏற்படும்.

நரகமாக இருக்கும் வாழ்க்கையை சொர்க்கமாக மாற்றுவதற்கு ஒரு முறையாவது சிவன் கோவிலில் நடக்கக்கூடிய இந்த பள்ளியறை பூஜையை தரிசிக்க வேண்டும்.

- Advertisement -