குல தெய்வத்திற்கு இப்படி பொங்கல் வைத்து வேண்டிக் கொண்டால், திருமணமாகாத பெண்ணுக்கு கூடிய சீக்கிரத்திலேயே நல்ல மாப்பிள்ளை கிடைக்கும்.

mangalyam
- Advertisement -

அழகும் அறிவும் திறமையும் எல்லாம் சேர்ந்து இருக்கும் பெண்ணுக்கு கூட இன்றைய சூழ்நிலையில் நல்ல மாப்பிள்ளை கிடைப்பது என்பது அரிதான விஷயம் ஆகிவிட்டது. உங்களுடைய வீட்டில் திருமணமாகாத பெண்கள் இருந்தால், உங்கள் வீட்டு குல தெய்வத்திற்கு இந்த முறைப்படி இந்த அரிசியில் பொங்கல் வைத்து பூஜை செய்து, அதன்பின்பு வரன் தேடும் வேலையை தொடங்குங்கள். உங்களுக்கு ஏற்ற படி உங்கள் பெண்ணை நன்றாக பார்த்துக் கொள்ளும், நல்ல வரன் கூடிய சீக்கிரத்திலேயே, உங்கள் வீடு தேடி வரும். திருமணமாகாத பெண்களுக்கும் கூடிய விரைவில் திருமணம் நடக்க வேண்டும் என்று அந்த அம்பாளை மனதார வேண்டிக்கொண்டு இந்த பதிவினை தொடங்குவோம்.

mangalyam

அந்த காலத்தில் எல்லாம் ஒரு பெண்ணுக்கு மாப்பிள்ளை பார்க்க தொடங்குவதற்கு முன்பு அந்தப் பெண்ணினுடைய ஜாதகத்தை வெளியில் எடுப்பதற்கு முன்பு, அதாவது சொந்தக்காரர்களிடம் வரன் பார்க்க ஜாதகத்தை கொடுப்பதற்கு முன்பு, அந்த ஜாதகத்தை கொண்டு போய் குலதெய்வ கோவிலில் குலதெய்வத்தின் பாதத்தில் வைத்து பொங்கல் வைத்து பூஜை செய்து அதன் பின்புதான் வரன் பார்க்க தொடங்குவார்கள். இது பெரும்பாலும் நம்மில் நிறைய பேருக்கு தெரிந்திருக்கும்.

- Advertisement -

இப்படி அவர்கள் குலதெய்வக் கோவிலுக்குப் போய் ஜாதகத்தை வைத்து வழிபாடு செய்யும் போது, அந்த குலதெய்வத்திற்கு அவர்கள் ‘சீரக சம்பா’ அரிசியை வைத்து பொங்கல் வைக்கும் வழக்கத்தைக் கொண்டுள்ளார்கள்.

arisi

இந்த சீரக சம்பா அரிசிக்குள் அப்படி என்ன மகத்துவம் மறைந்திருக்கிறது என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா. சீரக சம்பா அரசியலில் பொங்கல் வைத்து விட்டு, அதன் பின்பு நாம் எந்த காரியத்தை தொடங்கினாலும் அந்த காரியம் சீராக முடியும் என்பது நம்முடைய முன்னோர்களின் நம்பிக்கை. சீரக சம்பா அரிசியில் குல தெய்வத்திற்கு பொங்கல் வைத்து, வேண்டிக் கொண்டால் அந்த வேண்டுதல் நிறைவேறும் என்பதும் அவர்களுடைய நம்பிக்கையாக இருந்து வந்தது. இந்த சீரக சம்பா அரிசியில் பொங்கல் வைக்க வேண்டும் என்று ஆன்மீகரீதியாக நம்முடைய முன்னோர்கள் சொன்னதற்கு பின்னால், வேறு ஒரு காரணமும் மறைந்துள்ளது.

- Advertisement -

சீரக சம்பா அரிசியைத் தொடர்ந்து சாப்பிட்டு வரும் பெண்களுக்கு அழகு கூடும் என்பதும் அறிவியல் ரீதியான உண்மை. அதாவது சீரக சம்பா அரிசியை சாப்பிட்டுவந்தால் தோல் பளபளப்பாக மாறும். பார்ப்பதற்கு பெண்கள் பொலிவாக இருப்பார்கள் பெண்களின் பொலிவு கூட வேண்டும் என்பதற்காக திருமணத்திற்காக வரன் தேட ஆரம்பிக்கும் போதே, அந்த பெண்ணுக்கு தினமும் சாப்பாடு, சீரக சம்பா அரிசியில் தான் கொடுக்கப்படும். அதன் துவக்கமாக தான் குலதெய்வ கோவிலில் சீரக சம்பா அரிசியில் பொங்கல் வைக்கும் பழக்கம் நம் முன்னோர்களால் கொண்டுவரப்பட்டுள்ளது.

pongal

பெண்கள் பார்ப்பதற்கு அழகாக இருந்தால், வரக்கூடிய மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் அந்த பெண்ணை கட்டிக் கொள்ளவேண்டும் என்பதற்காகவே நகை பணம் வரதட்சணை இவைகளில் அதிகமாக கவனத்தை செலுத்த மாட்டார்கள். அந்த பெண்ணைக் கட்டிக் கொள்ள வேண்டும் என்பதிலேயே குறிக்கோளாக இருப்பார்கள். (அந்தக் காலத்தில் ஒரு பெண்ணுக்கு கல்யாணம் செய்து வைப்பது என்பது அவ்வளவு சுலபமான விஷயம் இல்லை என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றே)

pongal1

சரி, விஷயத்திற்கு வருவோம். உங்களுடைய வீட்டில் இருக்கும் கன்னிப் பெண்களுக்கு சீக்கிரமே நல்ல வரன் அமைய வேண்டுமா. உங்கள் குலதெய்வக் கோவிலுக்கு செல்லுங்கள் சீரக சம்பா அரிசியில் பொங்கல் வைத்து அந்தப் பொங்கலை உங்கள் குல தெய்வத்திற்கு படைத்து, நிவேதனமாக வைத்த பொங்கலை திருமணமாகாத பெண்ணுக்கு சாப்பிடக் கொடுங்கள். அதன் பண்பு வரன் தேடும் பணியைத் தொடங்குங்கள்.

mangalyam1

நம்முடைய முன்னோர்களின் வாக்கு என்றைக்கும் பொய்த்தது கிடையாது. நிச்சயமாக குலதெய்வத்தின் அருளால் திருமணமாகாத உங்கள் வீட்டு பெண்ணுக்கு சீக்கிரமே நல்ல மாப்பிள்ளை கிடைக்கும். உங்கள் வீட்டு பெண்ணுக்கு கூடிய சீக்கிரத்திலேயே நல்ல வரன் அமைய வேண்டும் என்று அந்த குல தெய்வத்திடம் பிரார்த்தனை செய்து கொண்டு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -