நல்ல வேலை, உயர் பதவி கிடைக்க முருகர் வழிபாடு

murugan valipadu
- Advertisement -

“உத்தியோகம் புருஷ லட்சணம்” என்று கூறுவார்கள். இன்று ஆண்களுக்கு இணையாக பெண்களும் வேலைக்கு செல்ல ஆரம்பித்து விட்டார்கள். ஒருவருடைய அந்தஸ்தை நிர்ணயிக்கக்கூடிய ஒரு விஷயமாக கருதுவது வேலை தான். என்ன வேலை செய்கிறார்கள் என்பதை பொறுத்துதான் அவர்கள் எவ்வளவு சம்பாதிப்பார்கள் என்றும் அவர்களுடைய அந்தஸ்தையும் மரியாதையும் நிர்ணயிக்கக்கூடிய ஒன்றாகவும் திகழ்கிறது.

அவரை மட்டுமல்லாமல் அவருடைய குடும்பத்திற்கே இது ஒரு மிகப்பெரிய அந்தஸ்து சம்பந்தப்பட்ட விஷயமாகவே கருதப்படுகிறது. அப்படி நம்முடைய மதிப்பையும் மரியாதையையும் உயர்த்தக்கூடிய அளவிற்கு நல்ல வேலை கிடைக்கவும் அந்த வேலையில் நம்முடைய திறமைக்கேற்ற பதவி உயர்வு கிடைக்கவும் முருகப்பெருமானை வழிபடும் முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்க போகிறோம்.

- Advertisement -

பொதுவாக வேலை தொடர்பான விஷயங்கள் என்றதும் நம் நினைவிற்கு வருபவர் சூரிய பகவான். அதிலும் குறிப்பாக அரசாங்க வேலை என்று பார்க்கும் பொழுது கண்டிப்பாக முறையில் சூரிய பகவானின் அருள் பரிபூரணமாக வேண்டும் என்று கூறப்படுகிறது. எந்த வேலையாக இருந்தாலும் சூரிய பகவானின் அருள் இருந்தால்தான் அந்த வேலையில் நமக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும். இதற்காக நாம் சூரிய பகவானை வழிபட வேண்டும் என்றாலும் முருகப்பெருமானை எந்த முறையில் வழிபட்டால் சூரிய பகவானின் அருளையும் நம்மால் பரிபூரணமாக பெற்று வேலை தொடர்பான அனைத்து விஷயங்களும் நல்லவிதமாக நடக்கும் என்று பார்ப்போம்.

சூரிய பகவானின் அருளை பெற வேண்டும் என்ற காரணத்தினால் முருகப்பெருமானை ஞாயிற்றுக்கிழமையில் நாம் வழிபட வேண்டும். ஞாயிற்றுக்கிழமை அன்று காலையில் சூரிய ஹோரையான ஆறு மணியிலிருந்து ஏழு மணிக்குள் அருகில் இருக்கக்கூடிய முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். பழங்காலத்து ஆலயமாக இருந்தால் மிகவும் நல்லதாக இருக்கும்.

- Advertisement -

அவ்வாறு செல்லும் பொழுது முருகன் மட்டும் இருப்பார் என்றால் முருகனுக்கு மட்டும் மாலை வாங்கிக் கொள்ள வேண்டும். வள்ளி தெய்வானையுடன் சேர்ந்து இருக்கும் முருகன் கோவிலாக இருக்கும் பட்சத்தில் மூவருக்கும் மாலை வாங்கிக் கொள்ள வேண்டும். இதோடு விநாயகப் பெருமானுக்கு அருகம்புள்ளையும் வாங்கிக் கொள்ளுங்கள். முதலில் விநாயகப் பெருமானுக்கு அருகம்புல்லை வைத்து மனதார வேண்டி விட்டு பிறகு முருகன் சன்னதிக்கு வந்து அவருக்கு வாங்கிய மாலையை அணிவித்து அவரை மனதார வழிபட வேண்டும்.

பிறகு ஏற்கனவே முருகனுக்கு சாற்றி இருந்த மாலையை அர்ச்சகர் இடம் கூறி வாங்கிக் கொள்ள வேண்டும். வாங்கிய இந்த மாலையை நம்முடைய கையில் வைத்துக்கொண்டு முருகப்பெருமானை மூன்று முறை வலம் வர வேண்டும். பிறகு முருகப் பெருமானுக்கு முன்பாக இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து வேலை தொடர்பான வேண்டுதலை மனதார வைக்க வேண்டும். பிறகு எங்கும் செல்லாமல் வீட்டிற்கு நேராக வந்து விட வேண்டும்.

- Advertisement -

இந்த மாலையை நம் வீட்டு நிலை வாசலில் கட்டி விட வேண்டும். தினமும் வீட்டில் பூஜை செய்யும் பொழுது இந்த மாலைக்கும் நாம் ஊதுபத்தி சாம்பிராணி காட்ட வேண்டும். இதே போல் தொடர்ந்து 9 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமை தோறும் இந்த வழிபாட்டை நாம் மேற்கொள்ள வேண்டும். ஒன்பது வாரமும் முருகனின் கழுத்தில் இருக்கும் மாலையை வாங்கி வந்து வீட்டு நிலை வாசலில் வைக்க வேண்டும். பழைய மாலையை கால்படாத இடத்திலோ அல்லது ஓடுகின்ற நீரிலோ போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: தங்கம் சேர பெருமாள் வழிபாடு

மிகவும் எளிமையான இந்த முருக வழிபாட்டை நம்பிக்கையுடன் செய்பவர்களுக்கு கண்டிப்பான முறையில் நல்ல வேலையும், வேலையில் உயர் பதவியும் கிடைக்கும்.

- Advertisement -