தங்கம் சேர பெருமாள் வழிபாடு

perumal gold
- Advertisement -

இந்த உலகத்தில் எந்த அளவிற்கு பணத்துக்கு முக்கியத்துவம் தருகிறோமோ அதே அளவிற்கு விலை உயர்ந்த பொருட்களுக்கும் முக்கியத்துவம் தருகிறோம். அப்படி விலை உயர்ந்த பொருட்களில் ஒன்றாக கருதப்படுவது தான் தங்கம். ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் தங்கத்தின் மீது இருக்கக்கூடிய மோகம் என்பது சற்றும் குறைந்தது அல்ல. பலரும் தங்களுடைய ஆசைக்காகவும் விருப்பத்திற்காகவும் தங்க நகைகளை வாங்கி போட்டு அனுபவித்துக் கொண்டு இருப்பார்கள்.

இன்னும் சிலரோ தங்களின் பெண் பிள்ளைகளுக்காக சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காக சிறுக சிறுக சேர்த்து வைப்பார்கள். இப்படி எந்த வகையான எண்ணமாக இருந்தாலும் தங்கத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்பது பொதுவான காரணமாகவே திகழ்கிறது. அப்படிப்பட்ட தங்கத்தை சேர்ப்பதற்கு உரிய எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

தங்கத்தை நாம் சொர்ணம் என்றும் கூறுவோம். தங்கத்தால் ஏற்பட்ட தோஷத்தை ஸ்வர்ண தோஷம் என்று கூறுவோம். ஒருவருக்கு ஸ்வர்ண தோஷம் இருந்தால் அவருக்கு தங்கம் என்பது சேராது. அதையும் மீறி தங்கம் வாங்கினாலும் அந்த தங்கம் அவர்களிடம் தங்காமல் வெளியே சென்று விடும். இப்படி இருப்பவர்களும் சரி, தங்கத்தை வாங்க வேண்டும் என்று கையில் பணம் வைத்திருந்தாலும் அந்த தங்கத்தை வாங்க முடியாமல் பணம் ஏதாவது ஒரு ரூபத்தில் செலவானாலும் சரி, தங்கத்தை வாங்க வேண்டும் என்ற ஆசை இருந்தாலும் அதை வாங்குவதற்குரிய பணம் இல்லாமல் கஷ்டப்படுபவர்களாக இருந்தாலும் சரி, இந்த எளிமையான வழிபாட்டு முறையை செய்தால் அவர்கள் வாழ்க்கையிலும் தங்கத்தை சேர்க்க ஆரம்பிக்கலாம்.

இந்த வழிபாட்டிற்கு புதன்கிழமை அல்லது வியாழக்கிழமை இந்த இரண்டு கிழமைகளில் ஏதாவது ஒரு கிழமையை தேர்வு செய்து கொள்ளுங்கள். முடிந்த அளவிற்கு வியாழக்கிழமை என்பது மிகவும் சிறப்பாக இருக்கும். வியாழக்கிழமை அன்று அருகில் இருக்கக்கூடிய பெருமாள் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அவ்வாறு செல்லும் பொழுது பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் சில பொருட்களை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும்.

- Advertisement -

அந்த பொருட்கள் பெருமாளுக்கு துளசி மாலையும், தாமரைப்பூவும் மகாலட்சுமிக்கு மல்லிகை பூ மாலை, தாமரைப்பூ இவற்றை வாங்க வேண்டும். பிறகு வெற்றிலை பாக்கு வாழைப்பழம் தேங்காய் என்று அர்ச்சனைக்கும், அதே சமயம் நெய்வேத்தியமாக கற்கண்டு உலர் திராட்சை இவற்றையும் வாங்குவதோடு மட்டுமல்லாமல் மிகவும் முக்கியமான ஒரு பொருளாக சுத்தமான சந்தனத்தை வாங்கிக் கொண்டு செல்ல வேண்டும். முடிந்த அளவிற்கு சந்தன மரக்கட்டையை வாங்கி இளைத்து எடுத்துக்கொண்டு செல்வது என்பது மிகவும் சிறப்பு.

இவை அனைத்தையும் எடுத்துக்கொண்டு பெருமாள் ஆலயத்திற்கு சென்று பெருமாளுக்கும் மகாலட்சுமி தாயாருக்கும் அனைத்தையும் சமர்ப்பித்து விட்டு அச்சகரிடம் இந்த சந்தனத்தை தெய்வத்தின் திருவடியில் வைத்து திரும்பவும் தர வேண்டும் என்று கேட்டுக்கொள்ள வேண்டும். இப்படி மகாலட்சுமி தாயாரின் பாதத்திலும் பெருமாளின் பாதத்திலும் சந்தனத்தை வைத்து அவர்கள் தருவார்கள். இந்த சந்தனத்தை அப்படியே எடுத்துக் கொண்டு வீட்டிற்கு வரவேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று காலை சுக்கிர ஹோரையில் வெள்ளியால் ஆன ஏதாவது ஒரு சின்ன கிண்ணம் அல்லது குங்குமச்சிமில் இப்படி ஏதாவது ஒன்று இருக்கும் அல்லவா? அதை எடுத்து அதற்குள் இந்த சந்தனத்தை வைத்து சுத்தமான பன்னீரை ஊற்றி குளைத்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த சந்தனத்தை தினமும் நாம் நெற்றியில் வைக்க வேண்டும். இப்படி வைக்கும் பொழுது என்னிடம் இருக்கக்கூடிய ஸ்வர்ண தோஷம் அனைத்தும் நீங்க வேண்டும்.

தங்கம் சேர வேண்டும் என்று மனதார வேண்டிக் கொள்ள வேண்டும். பிறகு “ஓம் ஸ்வர்ணலட்சுமியே போற்றி” என்னும் மந்திரத்தை 16 முறை உச்சரிக்க வேண்டும். இப்படி தினமும் நாம் செய்து வர வேண்டும். அன்றாடம் நாம் பூஜை செய்யும் பொழுது இதையும் தொடர்ச்சியாக நாம் வைத்துக் கொள்ளும்பொழுது கண்டிப்பான முறையில் சுவர்ணலட்சுமியின் அருளால் நமக்கு தங்கம் சேர்வதற்குரிய வழிகள் பிறக்கும். சொர்ண தோஷமும் முற்றிலும் நீங்கும். தங்கத்தை வாங்க இருக்கக்கூடிய தடைகளும் விலகும்.

இதையும் படிக்கலாமே: நினைத்தது நடக்க கேட்டது கிடைக்க விரலி மஞ்சள் பரிகாரம்

மிகவும் எளிமையான இந்த சந்தன பரிகாரத்தை நாமும் நம் இல்லங்களில் நம்பிக்கையுடன் செய்து தங்கத்தை தாராளமாக சேர்த்துக் கொள்வோம்.

- Advertisement -