பர்ஸில் இந்த 1 பொருளை எடுத்துச் சென்றால், நாலு பேர் மதிக்கும் அளவுக்கு கை நிறைய சம்பளத்தோடு நல்ல வேலை கிடைக்கும்.

amman1
- Advertisement -

நாலு பேர் மதிக்கும் அளவுக்கு, நல்ல வேலையில் நல்ல பதவியில் அமர்ந்து, கை நிறைய சம்பளம் வாங்கினாலே ஊர் உலகத்தில் மரியாதை இல்லை. இதில் ஒருவனுக்கு வேலையே இல்லை என்றால் அவனுடைய நிலைமை என்ன? பரம்பரை பரம்பரையாக கோடீஸ்வரராக இருப்பவர்களுக்கும், பாட்டன் பூட்டன் சம்பாதித்த சொத்தை அனுபவிப்பவர்களுக்கும் தான் இந்த காலத்தில் மரியாதை. கஷ்டப்பட்டு உழைத்து 1000 ரூபாய் சம்பாதிப்பவனுக்கு அந்த மரியாதை நிச்சயம் கிடைப்பது கிடையாது. இப்படிப்பட்ட உலகத்தில் வாழ்வது என்பது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். ஆனால் அடுத்தவர்களை பற்றி நீங்கள் கவலைப்படாதீர்கள். நேர்மையாக உழைத்து உங்களால் முடிந்ததை சம்பாதியுங்கள். சம்பாதித்த பணத்திற்குள் செலவுகளை கட்டுப்படுத்த பாருங்கள். நிச்சயமாக நிம்மதியான வாழ்க்கை உங்களுக்கு கிடைக்கும். நல்ல வேலை கிடைக்காமல் நல்ல சம்பளம் கிடைக்காமல், விரும்பிய வேலைக்கு செல்ல முடியாமல் விரும்பிய பதவியை அடைய முடியாதவர்கள் பின் சொல்லக்கூடிய இந்த ஆன்மீக குறிப்புகளை பின்பற்றி பார்க்கலாம். நிச்சயமாக கூடிய சீக்கிரத்தில் நல்ல விடிவு காலம் பிறக்கும்.

pillaiyar1

நல்ல வேலை கிடைக்க எளிமையான 3 பரிகாரங்கள்:
எந்த ஒரு விஷயத்தில் தடை இருக்கிறது என்றாலும் அதை சரி செய்வதற்கு முதலில் நாம் செய்ய வேண்டிய வழிபாடு விநாயகர் வழிபாடு. வாரம் தொடங்கக்கூடிய திங்கட்கிழமை விநாயகர் கோவிலுக்கு சென்று இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு, விளக்கு ஏற்றி வைத்துவிட்டு தோப்புக்கரணம் போட்டு வேண்டிக் கொள்ளுங்கள். விநாயகருக்கு அருகம்புல் வாங்கி கொடுத்து தடைகள் தகர்க்கப்பட வேண்டும் என்று பிரார்த்தனை செய்து கொண்டு முயற்சியில் ஈடுபடுங்கள். நிச்சயமாக நல்ல வேலை கிடைக்கும். விநாயகரின் ஆசிர்வாதம் கிடைத்துவிட்டால் அடுத்து வாழ்வில் எந்த தடையும் இருக்காது.

- Advertisement -

சிவப்பு என்றாலே அனைவரும் டேஞ்சர் என்று சொல்லுவார்கள். ஆனால் உங்களுடைய பர்ஸில் சிவப்பு நிறத்தில் சிறிய அளவில் ஒரு துணியை எடுத்துக் கொண்டு செல்லுங்கள். புதிய ஜாக்கெட் பிட்டிலிருந்து இரண்டு இன்ச் அளவுக்கு, சிவப்பு துணியை வெட்டி எடுத்துக் கொண்டால் கூட போதும். அந்த சின்ன துணியை, அம்பாளை நினைத்து பர்ஸில் வைத்துக் கொண்டு சென்றால் நிச்சயம் நல்ல வேலை கிடைக்கும். புதியதாக வேலை தேடுபவர்கள் இன்டர்வியூக்கு செல்லும் போது இதை முயற்சி செய்து பார்க்கலாம்.

red-kerchief

ஒருவருடைய கையெழுத்து தான் அவர்களுடைய தலையெழுத்தை மாற்றும் என்று சொல்லுவார்கள். அதே போல உங்களுடைய கையெழுத்து எப்படி இருக்கிறது என்று பாருங்கள். அதாவது சிக்னேச்சர். கையெழுத்தை போட்டுவிட்டு சில பேர் இறுதியில் முற்றுப்புள்ளி வைப்பார்கள். அப்படி முற்றுப்புள்ளி வைத்து கையெழுத்து போட்டால் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றம் தடைபட்டுக் கொண்டே தான் இருக்கும்.

- Advertisement -

ஒவ்வொரு முறை கையெழுத்து போட்டு முற்றுப்புள்ளி வைக்கும் போது உங்களுடைய வாழ்க்கை முழுவதுமாக முடிந்து, பிறகு ஆரம்பிப்பது போலத்தான் இருக்குமே தவிர, வாழ்க்கையில் முன்னேற்றம் சீராக அமையாது. கையெழுத்தின் இறுதியில் முற்றுப்புள்ளி வைக்கும் பழக்கம் உங்களிடம் இருந்தால் அதை கொஞ்சம் மாற்றிப் பாருங்கள். நிச்சயமாக வாழ்வில் சீரான முன்னேற்றம் இருக்கும்.

இதையும் படிக்கலாமே: வீட்டிற்குள் நுழைந்தாலே சண்டை வருகிறதா? அப்படியானால் வீட்டில் இந்த ஒரு விளக்கை மட்டும் தவறாமல் ஏற்றினால் போதும். போர்க்களமாக இருக்கும் இல்லம் கூட அமைதி பூங்காவாக மாறி விடும்.

எப்போதெல்லாம் பசுவை பார்க்கக் கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பசு மாட்டிற்கு உங்கள் கையால் மஞ்சள் வாழைப்பழம் வாங்கி கொடுங்கள். மஞ்சள் வாழைப்பழம், மஞ்சள் நிறம் குருவின் அம்சம் உடையது. குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று சொல்லுவார்கள். கோமாதா லட்சுமி கடாட்சம். ஆக இவை இரண்டும் சேரும் போது வாழ்வில் நன்மை நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -