என்னடா தலையெழுத்து இது. ஒரு வேலை கூட நிரந்தரமாக கிடைக்கவில்லையே, என்று கஷ்டப்படுபவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். நிச்சயம் ஏதாவது ஒரு வழியில் நல்லது நடக்கும்.

job
- Advertisement -

இன்றைய சூழ்நிலையில் நிறைய பேர் வேலை இல்லாமல் கஷ்டப்பட்டு வருகிறார்கள். சில பேர் தகுதிக்கு தகுந்த வேலை கிடைக்காமல், கிடைத்த வேலையை செய்து கஷ்டப்பட்டு வருகிறார்கள். ஆண்களாக இருந்தாலும் சரி பெண்களாக இருந்தாலும் சரி, திருமணமாகி வீட்டில் இருந்து வேலை செய்ய வேண்டும் என்று நினைக்கும் பெண்களாக இருந்தாலும் சரி, இந்த பரிகாரத்தை செய்து பலனடையலாம். நிறைய பேருக்கு ஜாதக கட்டத்தில் பிரச்சினை இருக்கும்‌. வேலை கிடைப்பதில் ஏதாவது தோஷங்கள் தடைகள் இருக்கும். அப்படிப்பட்டவர்கள் இந்த பரிகாரத்தை செய்தாலும் அந்த தோஷங்களில் இருந்து விடுபடுவதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

pambu-puthu

இந்த பரிகாரத்தை நாம் வியாழக்கிழமை அன்று செய்ய வேண்டும். சூரிய உதயத்திற்கு முன்பு செய்ய வேண்டும். பரிகாரத்தை படித்துவிட்டு இது ரொம்ப கஷ்டம் என்று முயற்சி செய்யாமல் விட்டுவிடாதீர்கள். கொஞ்சம் போல முயற்சி செய்தீர்கள் என்றால் இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிடலாம். நிச்சயமாக உங்களுக்கு மனதுக்கு பிடித்த கை நிறைய சம்பளத்தோடு வேலை கிடைப்பதற்கு நிறையவே வாய்ப்புகள் உள்ளது.

- Advertisement -

உங்களுடைய வீட்டின் அருகிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு இடத்திலோ புத்துகோவில் இருக்கிறதா என்று பார்த்து வைத்துக் கொள்ளுங்கள். புத்துகோவில் தான் கட்டாயமாக இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். சில இடங்களில் கிராமப்புறங்களில் சாலையின் ஓரங்களில் கூட புத்து வைத்து வழிபாடு செய்யும் வழக்கம் இருக்கும். அதுபோன்ற இடத்தில் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம்.

Govt job

வியாழக்கிழமை அன்று சூரிய உதயத்திற்கு முன்பே சுத்தபத்தமாக எழுந்து குளித்துவிட வேண்டும். இந்த புத்துகோவில் இருக்கும் இடத்திற்கு சென்று விடவேண்டும். புத்துகோவிலை மூன்று முறை வலம் வந்து மனதார உங்களுக்கு நல்ல வேலை கிடைக்க வேண்டும் என்று, உங்களுக்கு தகுந்த வேலையாக கிடைக்க வேண்டும் என்று வேண்டிக் கொண்டு, அந்த புத்திலிருந்து ஒரு சிட்டிகை மண்ணை தொட்டு உங்களுடைய உச்சன் தலையில் வைத்துக் கொள்ள வேண்டும். இதுதான் பரிகாரம்.

- Advertisement -

இதை நம்பிக்கையோடு மூன்று வாரங்கள் செய்யுங்கள். அதன் பின்பு நீங்கள் வேலை தேடும் முயற்சியை ஆரம்பியுங்கள். நிச்சயமாக உங்களுடைய மனதிற்குப் பிடித்த வேலை கிடைக்கும். நிறைய பெண்கள் வீட்டில் இருந்தபடியே வேலை செய்ய வேண்டும் என்று நினைப்பார்கள். ஆனால் அவர்களுக்கு தகுந்தபடி வேலை கிடைப்பது கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

money4

அப்படி சிரமம் உள்ள பெண்கள் இந்த வழிபாட்டினை செய்தால் கூட அவர்களுக்குத் தகுந்த வேலை கூடிய சீக்கிரத்தில் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. வேலை கிடைக்காமல் இக்கட்டான சூழ்நிலையில் தவித்து வருவார்கள் அல்லவா அவர்கள் எல்லாம் இந்த பரிகாரத்தை கொஞ்சம் சிரமப் பட்டாவது செய்து முடித்து விடுங்கள். உங்களுடைய ஜாதகத்தில் இருக்கும் தோஷங்கள் விலகி நிச்சயமாக நல்ல வேலை உங்களை தேடி வரும் என்ற நம்பிக்கையுடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -