நாளும் கோளும் நமக்கு நன்மையை செய்ய பரிகாரம்

nagar
- Advertisement -

நாள் என்பது நட்சத்திரங்களை குறிப்பது. கோள்கள் என்பது நவகிரகங்களை குறிப்பது. இந்த நட்சத்திரங்களும் கோள்களும் வருடத்தின் 365 நாட்களும் ஒரே மாதிரி இருப்பது கிடையாது. ஒவ்வொரு நாட்களும் ஒவ்வொரு நட்சத்திரமும், ஒவ்வொரு கிரகங்களில் மாற்றங்களை நிகழ்த்துகிறது. இதன் அடிப்படையில் தான் நம்முடைய அன்றாட வாழ்க்கையில் நல்லது கெட்டது மாறி மாறி நடக்கிறது.

உங்களுக்கு நாளும் கோலும் எப்படி இருந்தாலும் சரி, உங்களுடைய நட்சத்திரம், உங்களுடைய ஜாதகத்தில் கிரகங்களும் எந்த சூழ்நிலையில் அமர்ந்திருந்தாலும் சரி, வாழ்க்கையில் உங்களுக்கு நல்லது மட்டுமே நடக்க வேண்டுமா, வாழ்க்கையில் வரும் பெரிய பிரச்சனைகளை சமாளிப்பதற்கு உண்டான தெம்பு கிடைக்க வேண்டுமா.

- Advertisement -

கெட்ட நேரத்திலும் அந்த கஷ்டத்தை கடந்து செல்லக்கூடிய நல்ல நேரத்தை பெற வேண்டுமா. இந்த ஒரு பொருளை பூஜை அறையில் இப்படி வைத்துப் பாருங்கள். உங்களுக்கு நாளும் கோளும் எந்த நாளிலும் நல்லதை மட்டுமே செய்யும். அந்த ஒரு பொருள் என்ன அதை எப்படி நம்முடைய வீட்டில் வைக்க வேண்டும் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

நாளும் கோளும் நல்லது செய்ய பரிகாரம்

இந்த பரிகாரத்திற்கு நமக்கு தேவையான பொருள் ஒரு வெண்கல சொம்பு. இந்த சொம்புக்கு ரொம்ப ரொம்ப அதீத சக்தி உண்டு. முடிந்தவரை வெண்கல சொம்பு வாங்கி இந்த பரிகாரத்தை செய்ய பாருங்கள். சிரமம் பார்க்காதீர்கள். ஒரு நாகர் சிலை கடைகளில் கேட்டாலே கிடைக்கும். நாட்டு மருந்து கடைகளில் ஐம்பொன், பித்தளை இப்படி உலோகங்களில் இந்த நாகர் சிலை சிறிய வடிவில் கிடைக்கும். வாங்கிக் கொள்ளலாம்.

- Advertisement -

உங்களுக்கு வசதி இருந்தால் வெள்ளியிலும் நாகர் சிலை வாங்கலாம். பிறகு நாட்டு மருந்து கடைகளில் வில்வ இலை பொடி கிடைக்கும். வாங்கிக் கொள்ளுங்கள். இந்த வெங்கல சொம்புக்கு உள்ளே முதலில் நாகர் சிலையை வைத்துவிட்டு, அது நிரம்பும் அளவுக்கு அதாவது அந்த நாகர் சிலை மூழ்கும் அளவுக்கு வில்வ இலை பொடியை கொட்டி இந்த சொம்பை அப்படியே வீட்டின் கிழக்குப் பக்கத்தில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்து விட வேண்டும்.

இதற்கு மேலே மூடி போட்டு மூடக்கூடாது. திறந்தபடி இருந்தால் தான் இந்த எனர்ஜி உங்கள் வீடு முழுவதும் நிரம்பி இருக்கும். வீட்டிற்கு நன்மை செய்யும்படி அமையும். ஆகவே ஒரு ஸ்லாபுக்கு மேல் யார் கண்ணுக்கும் தெரியாமல் கூட இதை நீங்கள் வைத்துக் கொள்ளலாம். அவ்வளவுதான் தினமும் இதற்கு பூஜை புனஸ்காரங்கள் கூட  செய்ய தேவை கிடையாது. ஆறு மாதத்திற்கு ஒரு முறை இந்த வில்வ பொடியை மட்டும் புதுசாக மாற்றிக் கொள்ளுங்கள் போதும்.

இதையும் படிக்கலாமே: பணக்கஷ்டத்திலிருந்து உங்கள் குடும்பத்தை காப்பாற்ற பரிகாரம்.

இந்த நாகர் சிலை, வில்வ இலை பொடியோடு சேர்ந்து உங்கள் வீட்டில் இருக்கும் போது நாள் நட்சத்திரங்களால் வரக்கூடிய கெடுதல் நவக்கிரகங்களால் வரக்கூடிய பாதிப்புகள் எல்லாம் உங்களை பாதிக்காமல் இருக்கும். எளிமையான பரிகாரம் தான் ஆன்மீகம் பரிகாரங்களில் சிறப்பான பரிகாரம் இது. மனிதப் பிறவியில் நாமக்கு வரும் துன்பத்திலிருந்து தப்பிக்க இதை செய்ய வேண்டும் என்ற எண்ணம் உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -