பணக்கஷ்டத்திலிருந்து உங்கள் குடும்பத்தை காப்பாற்ற பரிகாரம்.

vasthu
- Advertisement -

வீட்டிற்குள் பணம் வராமல் தடை பட்டு நிற்க நிறைய காரணங்கள் இருக்கும். ஆனால் அந்த காரணங்கள் உருவாக, நாமே ஒரு காரணமாக இருந்து விடக்கூடாது. அந்த வரிசையில் நீங்கள் செய்யும் இந்த ஒரு சிறு தவறு உங்கள் வீட்டில் பண தடையை ஏற்படுத்தும். உங்க வீட்டு வடக்கு திசையில் இந்த பொருட்கள் இருக்குதா போய் பாருங்க.

அப்போ நிச்சயம் உங்கள் வீட்டில் பண கஷ்டம் இருக்கும். வீட்டு வாசல் வரை வந்த பணம், வீட்டுக்குள் வராமல் போயிருக்கும். வீட்டில் வடக்கு திசையில் வைக்க கூடாத பொருட்கள் என்னென்ன ஆன்மீகம் சார்ந்த பதிவை தொடர்ந்து படித்து தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

பணம் தரும் வடக்கு திசை வாஸ்து குறிப்புகள்

நான்கு திசைகளும், எட்டுத்திக்குகளும் இருந்தாலும் இந்த வடக்கு திசை காசு கொடுக்கும் கடவுள் வாழும் திசை என்று சொல்லப்பட்டுள்ளது. அதிலும் குறிப்பாக கிழக்கு பகுதியும், வடக்கு பகுதியும் சேரும் இடத்தை வடகிழக்கு பகுதி என்று நாம் சொல்லுவோம். அதாவது வட கிழக்கு மூலை. இந்த வடக்கு திசையிலும் இந்த வடகிழக்கு சார்ந்த திசையிலும், எக்காரணத்தைக் கொண்டும் வேண்டாத குப்பைகளை குவித்து வைத்திருக்கக் கூடாது.

குப்பை தொட்டி, துடைப்பம், செருப்பு, வீட்டில் தேவையில்லாத பொருட்களை எல்லாம் மூட்டை கட்டி வடக்கு திசையில் போடாதீங்க. வடக்கு திசை வாசமாக இருக்கணும். அந்த இடத்தில் வளரக்கூடிய விஷயங்களை வைக்கணும். உதாரணத்திற்கு பணம் தரும் மணி பிளான்ட், துளசி செடி, மருதாணி செடி, அல்லது வீட்டிற்குள் வைக்கக்கூடிய நேர்மறை ஆற்றலை கொடுக்கக் கூடிய எந்த செடியாக இருந்தாலும், இந்த வடக்கு திசையில் வையுங்கள்.

- Advertisement -

குழந்தைகள் படிக்கக்கூடிய இடமாகவும் இந்த வழக்கு திசை இருக்கலாம். மாறாக கழிவரையோ படுக்கையரையோ குப்பை கூலங்கள் சேர்க்கும் பகுதியாகவோ ஒரு வீட்டில் வடக்கு திசையில் இருந்தால் அந்த வீட்டில் பணக்கஷ்டம் இருக்கும். உங்களுக்கு வரவேண்டிய மகாலட்சுமி கூட வீட்டிற்குள் வராது என்று சொல்லப்பட்டுள்ளது.

உங்க வீட்டு வடக்கு திசையை இன்னைக்கு போய் பாக்குறீங்க. குப்பை கூலமாக இருந்தால் அதை இன்னைக்கு சரி செய்து, அங்கு அழகான நேர்மறை ஆற்றலை கொடுக்கும் பொருட்களை வையுங்க. முடிந்தால் தினமும் ஒரு ஊதுவத்தையே கொளுத்தி அந்த வடக்கு திசையில் வையுங்க. உங்கள் வாழ்க்கை வளமாகவும், நலமாகவும் முன்னேற்றத்தில் செல்லும். வாஸ்து என்பது ஒரு வீட்டிற்கு ஆணிவேர் போல.

இதையும் படிக்கலாமே: ஜனவரி, மாத ஏகாதேசி வழிபாடு

சில பேருக்கு நேரம் சரியில்லை என்றால், இந்த வாஸ்துவினால் பிரச்சனை வரும். சில பேருக்கு நேரம் நன்றாக இருந்தால் வாஸ்துவும் பிரச்சனை கொடுக்காது கிரக தோஷங்களும் பிரச்சனை கொடுக்காது. ஆகவே நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரங்களை பின்பற்றி பலன் பெறலாம் என்ற தகவலுடன் இன்றைய ஆன்மிகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -