இன்று இரவுக்குள் இந்த 1 பொருளை வாங்கி பூஜை அறையில் வைத்து விட்டால் போதும். ராம நவமையான இன்று, அந்த ராமரின் பரிபூரணமான ஆசீர்வாதம் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கும்.

pattbishegam
- Advertisement -

விஷ்ணு பகவான், ராம அவதாரம் எடுத்த தினம் தான், ராம நவமியாக கொண்டாடப்படுகிறது. இது நம்மில் பல பேருக்கு தெரிந்திருக்கும். அந்த சிறப்பு வாய்ந்த நன்னாள் இன்றுதான். இன்றைய தினம் ராமநவமியில், நீங்கள் விரதம் இருந்தாலும் சரி, விரதம் இல்லை என்றாலும் சரி, அந்த விஷ்ணு பகவானின், ஆசிர்வாதத்தை முழுமையாக பெற வேண்டும் அல்லவா. இந்த பரிபூரணமான ஆசீர்வாதம் கிடைத்தால், நம்முடைய குடும்பம் செல்வ செழிப்போடு இருக்கும். கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு இருக்காது. வீடு சுபிட்சம் பெறும். அப்பேற்பட்ட ராம அவதார ராமர் சீதையைப் போல கணவன் மனைவி வாழ வேண்டும் என்று நினைக்காத நெஞ்சங்களே இல்லை. இந்த ராம நவமி நாளில் நம் குடும்பம் சுபிட்சம் பெற நாம் செய்ய வேண்டிய முக்கியமான 2 விஷயங்கள் என்னென்ன. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

pattbishegam1

ராம நவமி அன்று வாங்க வேண்டிய பொருள்:
நாமக்கட்டி, இது பல பேருக்கு தெரிந்திருக்கும். பல பேருக்கு தெரிந்திருக்காது. அந்த காலத்தில் பெரும்பாலும் எல்லோர் வீட்டிலும் புழக்கத்தில் இருந்த ஒரு பொருள். நாமம் போட இந்த நாமக்கட்டியை பயன்படுத்துவோம். இது ராமருக்கு பெருமாளுக்கு உகந்த, ஆன்மீகம் சம்பந்தப்பட்ட ஒரு பொருள். பத்து ரூபாய் கூட செலவு செய்ய வேண்டாம். மளிகை கடைகளில் கேட்டால் இந்த நாமக்கட்டி கிடைக்கும்.

- Advertisement -

ஜோடியாக 2 நாமக்கட்டிகளை வாங்கி வந்து உங்கள் வீட்டு பூஜை அறையில் வைத்து, ராமரை நினைத்து விளக்கு ஏற்றி மனதார பிரார்த்தனை செய்தாலே உங்கள் குடும்பத்திற்கு இந்த ராமபிரானின் ஆசிர்வாதம் பரிபூரணமாக கிடைத்துவிடும். இன்று மாலை ஆறு மணிக்கு இதை செய்தாலும் போதும். நீங்கள் விரதம் இருந்து ராமன் நவமியில் ராமரை வழிபட்ட பலனை பெறலாம். (பூஜை முடிந்த பின்பு, நாளை இந்த நாமக்கட்டியை எடுத்து பூஜை அறையிலேயே எங்கேயாவது வைத்துக் கொள்ளுங்கள். நாமும் போட பயன்படுத்தலாம். அப்படி இல்லை என்றால் உடம்பில் உஷ்ணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வந்துவிட்டது, கட்டி வந்துவிட்டது என்றால் அதன் மேலே இந்த நாமக்கட்டியை தண்ணீரில் இழைத்து போடலாம்.)

namakatti

எங்களுடைய குடும்பத்தில் சதா சண்டை சச்சரவு. கணவன் மனைவி ஒன்றாக இருந்த நாளே கிடையாது. குடும்பத்தில் ஒற்றுமை இல்லை. என்னதான் செய்வது என்று கஷ்டப்படுபவர்களுக்கு இன்றைய நாள் ஒரு வரப் பிரசாதம். யாரும் தவற விடாதீங்க. ராமரின் பட்டாபிஷேக திருவுருவப்படம் எங்கு கேட்டாலும் கிடைக்கும். சிறிய சைஸில் இருந்தால் கூட போதும். அதை வாங்கி இன்று உங்களுடைய வீட்டில் பூஜை அறையிலோ அல்லது வீட்டில் வரவேற் அறையிலோ எல்லோர் கண்களுக்கும் தென்படும்படி வைத்து விடுங்கள். இதை செய்தால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். இன்று இந்த படத்தை வாங்கி வீட்டிற்கு கொண்டு வருபவர்களுடைய குடும்பத் தலைவனும் குடும்பத் தலைவியும் அந்த ராமர் சீதையைப் போல ஒருவர் மீது ஒருவர் அன்பு குறையாமல் இருப்பார்கள்.

- Advertisement -

இது தவிர உங்களுக்கு தெரிந்த குடும்பம், சொந்த பந்தங்களாக இருக்கலாம். நண்பர்களாக இருக்கலாம். அவர்களுடைய வீட்டில் கணவன் மனைவியும் ஒற்றுமையாக இல்லை. அவர்களுடைய குடும்பத்தில் எப்போதும் பிரச்சனை தான் என்ன செய்வது. உங்கள் கையால் இந்த ராமரின் பட்டாபிஷேக படத்தை வாங்கிக் கொண்டு போய் அவர்களுக்கு, இன்றைக்கு பரிசு கொடுங்கள். அது உங்கள் குடும்பத்திற்கும் பல கோடி புண்ணியத்தை தரும். இந்த பரிசை பெறுபவர்களுடைய குடும்பம் சுபிட்சம் பெறும்.

இதையும் படிக்கலாமே: சாதம் வடிக்கும் போது இதை மட்டும் செய்தால், உங்கள் குடும்பம் பல தலைமுறைக்கு ஆரோக்கியமாகவும் செல்வ செழிப்போடும் இருக்கும்.

இவை அனைத்துமே எளிமையாக சொல்லப்பட்டுள்ள பரிகாரங்கள் தான். உங்களுக்கு நம்பிக்கை இருந்தால் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரங்களை எல்லாம் இன்று பின்பற்றி பலன் பெறலாம். இன்று இந்த பரிகாரத்தை செய்ய முடியாது என்பவர்கள் வரக்கூடிய அடுத்தடுத்த நாட்களில் கூட செய்யலாம் தவறு ஒன்றும் கிடையாது.

- Advertisement -