தங்க நிறத்தில் மாறும் அதிசய நந்தி – ஆண்டிற்கு ஒருமுறை நடக்கும் அதிசயம்

nandhi
- Advertisement -

மன்னர்கள் காலத்தில் கட்டப்பட்ட பல கோவில்களில் பலவிதமான அதிசயங்களும் விஞ்ஞானிகளால் அறியமுடியாத பல அற்புதங்களும் நிகழ்ந்துகொண்டு தான் இருக்கின்றன. அந்த வகையில் ஆண்டிற்கு ஒரு முறை மட்டுமே பொன் நிற வண்ணத்தில் மின்னும் அதிசய நந்தி சிலை இருக்கும் கோவிலை பற்றி இந்த பதிவில் பார்ப்போம் வாருங்கள்.

nandhi

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் தாலுகாவில் அமைந்துள்ளது அருள்மிகு ரிஷபேஸ்வரர் கோவில். கிட்டத்தட்ட 250 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த கோவிலில் ஒரு அற்புதமான நந்தி சிலை உள்ளது. மாதந்தோறும் வரும் அம்மாவாசை மற்றும் பௌர்ணமி தினத்தில் இங்குள்ள நந்தீஸ்வரருக்கு விஷேஷ பூஜைகள் நடைபெறுவது வழக்கம்.

- Advertisement -

சில ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த கோவிலில் ஒளிந்திருந்த அற்புதமான ரகசியத்தை யாரும் அறியவில்லை. ஆனால் கடந்த 2012 ஆம் ஆண்டு பங்குனி மாதம், 3ம் தேதி எப்போதும் போல நந்தீஸ்வரருக்கு பிரதோஷ பூஜை நடைபெற்றது. அப்போது திடீரென நந்தியின் சில தங்க நிறத்தில் மின்ன ஆரமித்தது.

nandhi

ஏன் இந்த மாற்றம் என்று கூர்ந்து கவனிக்கையில், வழக்கத்திற்கு மாறாக சூரிய ஒளியானது கோவிலின் ராஜகோபுரத்தை கடந்து நந்தி சிலையின் மீது விழுந்தது. அதனாலேயே நந்தீஸ்வரர் பொன் நிறமாக மின்னுகிறார் என்பது தெரிந்தது. ஆனால் இந்த நிகழ்வு சிறிது நேரம் மட்டுமே நீடித்தது.

- Advertisement -

nandhi

இதையும் படிக்கலாமே:
எந்த தேதியில் பிறந்தவர்களுக்கு எந்த தொழில் சிறந்தது தெரியுமா ?

இந்த அதிசய நிகழ்வை கண்டு அங்கு கூடி இருந்த பக்தர்கள் அனைவரும் பக்தி பரவசம் அடைந்தனர். அதன் பிறகு வருடா வருடம் பங்குனி மாதம், 3ம் தேதி மட்டும் சூரிய ஒளிக்கதிர்கள் நந்தி சிலையின் மீது பட்டு சிறிது நேரம் நந்தியின் சிலை பொன்னிறமாக மின்னுகிறது. இந்த நிகழ்வானது பெரும்பாலும் மாலை வேலையில் மட்டுமே நிகழ்கிறது. இந்த அதிசயத்தை காண வருடா வருடம் பக்தர்கள் அங்கு திரண்டு நந்தியின் அருளை பெறுகின்றனர்.

- Advertisement -