நான்காம் பிறை பார்த்தால் என்ன பிரச்சனை வரும்?

pillaiyar1
- Advertisement -

அமாவாசை முடிந்து மூன்றாம் பிறை நிலவை பார்த்தால் நல்லது என்று எல்லோரும் சொல்லுவார்கள். ஆனால் அமாவாசை முடிந்து நான்காவது நாள் பிறை நிலவை பார்த்து விட்டால் நமக்கு கஷ்டம் வரும் என்பது பொதுவாக நம்முடைய பெரியோர்கள் சொல்லக்கூடிய கருத்து. அது ஏன் தெரியுமா. இப்படி நான்காம் பிறையை பார்ப்பதன் மூலம் நமக்கு என்ன பாதிப்பும் வரும் என்பது உங்களுக்கு தெரியுமா.

சரி தப்பி தவறி கண்களில் நான்காவது பிறை நிலா தெரிந்து விட்டது. நம் வாழ்க்கையில் வரக்கூடிய பிரச்சினைகள் இருந்து விடுபட என்ன பரிகாரம் செய்வது ஆன்மீகம் சார்ந்த இத்தனை தகவல்களையும் சுருக்கமாக இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

- Advertisement -

நான்காம் பிறை ஏன் பார்க்கக் கூடாது

ஒரு முறை சந்திர பகவான், விநாயகரின் உருவத்தை பார்த்து ஏளனமாக சிரித்ததாகவும், அதற்காக கோபப்பட்ட விநாயகப் பெருமான் சந்திர பகவானின் பிரகாசமான ஒளி சுத்தமாக மங்கி போக வேண்டும் என்று சாபம் கொடுத்ததாகவும், புராணங்களில் ஒரு கதை உண்டு. பிறகு இரவு நேரத்தில் சந்திரனின் ஒளி இல்லாத காரணத்தால் பூமியில் நிறைய இயற்கையான மாற்றங்கள் ஏற்பட்டு ஸ்தம்பித்தது.

அதன் பிறகு இந்திர பகவானிடம் சென்று நிறைய பஞ்சாயத்துக்கு பிறகு, சந்திர பகவானுக்கு சாப விமோசனம் கிடைத்தது. இதனால் தான் சந்திர பகவான் தேய்பிறை சமயத்தில் தேய்ந்து கொண்டே வந்து இருண்ட நிலையில் இருப்பதாகவும், பிறகு வளர்பிறை சமயத்தில் வளர்ந்து பிரகாசமாக ஜொலிப்பதாகவும் நமக்கு புராண கதைகள் சொல்லப்பட்டுள்ளது. இது ஒரு பெரிய கதை முழுசாக சொன்னால் இந்த பதிவு போதாது.

- Advertisement -

அந்த விநாயகப் பெருமான் சந்திர பகவானுக்கு சாபம் கொடுத்த நாள் தான் இந்த நான்காம் பிறை. அதாவது அமாவாசை முடிந்து நான்காவது நாள் சதுர்த்தி திதி வரும். அன்றைய நாளில் விநாயகப் பெருமானின் சாபம் பெற்ற சந்திரன் தான், ஆகாயத்தில் ஜொலிப்பதாக நமக்கு சொல்லப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில் நீங்கள் நான்காம் பிறை அன்று சந்திர பகவானை பார்த்தால் வாழ்க்கையில் பிரச்சனை வரும் என்றும் சொல்லி வைக்கப்பட்டுள்ளது.

எப்படிப்பட்ட பிரச்சனைகள் வரும். சில பேர் ஞாபக மறதி வரும் என்று சொல்லுவார்கள் கேள்விப்பட்டிருப்போம் அல்லவா. அதே போல தான், நமக்கு தேவை இல்லாத குடும்ப பிரச்சனைகள், மனக்குழப்பம் வரும். சில தருணங்களில் தெளிவான முடிவை எடுக்க முடியாத சந்தர்ப்பத்தில் சிக்கிக் கொள்வது, முயற்சிகளில் காரிய தடை ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் நம்மை பின்தொடரும் என்று சொல்லப்பட்டுள்ளது. இப்படி எல்லாம் பிரச்சனைகள் வருவதற்கு காரணம் அந்த விநாயகப் பெருமானின் ஆசீர்வாதம் நமக்கு முழுசாக கிடைக்காததினால் தான்.

- Advertisement -

சரி நான்காம் பிறையை பார்த்தால் கஷ்டம் வரும் என்று நமக்கு தெரியும். வேண்டுமென்றே நாம் நான்காம் பிறையை பார்க்கப் போவது இல்லை. எதர்ச்சியாக கண்ணில் பட்டு விட்டால் என்ன செய்வது. இல்லை இதற்கு முன்பாக நான் நான்காம் பிறையை பார்த்திருக்கின்றேன் இதனால் எனக்கு குடும்பத்தில் கஷ்டம் இருக்கிறது என்பவர்கள் என்ன செய்வது. அதற்கும் ஒரு பரிகாரம் உள்ளது.

இந்த நான்காம் பிறை அன்று விநாயகரை மனதார நினைத்து வழிபாடு செய்யுங்கள். விநாயகரை நினைத்து ‘ஓம் கம் கணபதயே நமோ நமஹ’ என்ற மந்திரத்தை 11 முறை சொல்லுங்கள். ‘ஓம் த்ரி புஷ்ப மாலின்யை ரக்ஷிப்பாய் ரக்ஷிப்பாய்’ என்ற இந்த மந்திரத்தை நான்காம் பிறையை நீங்கள் எதர்ச்சியாக பார்த்துவிட்டால் அந்த சமயத்தில் சொல்லிவிடுங்கள்.

இதையும் படிக்கலாமே: செல்வத்தை அள்ளித் தரும் குபேர பூஜை

உங்களுக்கு தோஷம் விலகும் என்பது நம்பிக்கை. சின்ன சின்ன விஷயங்கள்தான் புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. இதை நாம் பின்பற்றினால் நம்முடைய வாழ்க்கையிலும் நன்மை நடக்கும் என்ற தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -