இனி நீங்க நரை முடியை மறைக்க தேவையே இல்லை இந்த ஒரு பொருள் உங்களிடம் இருந்தால் போதும் நரை முடி பிரச்சனை உங்கள் வாழ்நாளில் வரவே வராது.

- Advertisement -

இப்போதெல்லாம் வயதில் மூத்தவர் யார் இளையவர் யார் என்று கண்டுபிடிப்பதே பெரும் சிரமமாக உள்ளது. இதற்கு காரணம் இளம் வயதினர்களுக்கு கூட அதிகப்படியான வெள்ளை முடி வந்து விடுகிறது. இதனால் அவர்களுக்கு அதிக வயதான தோற்றம் ஏற்பட்டு விடுகிறது. இது வெறும் நரை முடி தானே என்று அப்படியே நாம் கடந்து விட முடியாது. இதனால் அவர்கள் பெரும் அளவு மன உளைச்சலுக்கு ஆளாக நேரிடும். இப்போது இந்த அழகு குறிப்பு பதிவில் இந்த நரைமுடி பிரச்சனைக்கு மிக மிக சுலபமான ஒரு தீர்வை தான் பார்க்க போகிறோம்.

இந்த நரை முடி தோன்றுவது ஒரு குறிப்பிட்ட வயதிற்கு மேல் வந்தால் அது இயற்கை தான். ஆனால் இளம் வயதிலேயே வருவது என்பது ஊட்டச்சத்தின் குறைபாடு காரணமாகவும் நம் உடலில் இருக்கும் மெலடின் என்ற சத்து குறைபாட்டின் காரணமாகவும் தான். இதற்கு இரும்பு சத்து அதிகம் உள்ள பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். முருங்கைக் கீரை, கருவேப்பிலை, பேரீச்சம் பழம், இப்படி இரும்பு சத்து அதிகம் உள்ள உணவுகளை நாம் அடிக்கடி எடுத்துக் கொள்ளும் போது இந்த பிரச்சனைகள் குறைந்து விடும்.

- Advertisement -

இப்போது இந்த நரைமுடி சரி செய்வதற்கான அந்த ஆயிலை தயார் செய்து கொள்ளலாம். இதற்கு சின்ன கண்ணாடி பவுலை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் அரை எலுமிச்சை பழத்தின் சாறை பிழிந்து விடுங்கள். அதன் பிறகு 2 டேபிள் ஸ்பூன் செக்கில் ஆட்டிய சுத்தமான தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள். அவ்வளவு தான் நரைமுடிக்கான எண்ணெய் தயார்.

இந்த எண்ணெய் முதலில் உங்கள் முடியில் வெள்ளை முடி இருக்கும் இடத்தில் தடவி விடுங்கள். அதன் பிறகு மீதம் இருக்கும் எண்ணெயை உங்கள் முடிவில் வேர்க்கால்களில் படும்படி தேய்த்து நன்றாக மசாஜ் செய்து விடுங்கள். இதன் மூலம் ஏற்கனவே வந்த முடி விரைவில் கருமையாகவும், இனி வரும் முடி நரைக்காமல் வளரவும் உதவி புரியும்.

- Advertisement -

இதை செய்த பிறகு ஒரு மணி நேரம் உங்கள் தலையில் இந்த ஆயில் அப்படியே இருக்கட்டும். அதன் பிறகு நீங்கள் தலை அலசி விடலாம். இந்த முறையை பயன்படுத்திய பிறகு ஷாம்பு சீயக்காய் போட்டு தான் குளிக்க வேண்டும் என்றஅவசியம் இல்லை. ஏனென்றால் இதில் நாம் வேறு எந்த ஒரு பொருளையும் சேர்க்கவில்லை அதனால் தலையில் வாடை வரும் என்ற பிரச்சனையே கிடையாது.

இதையும் படிக்கலாமே: 1 கப் வடித்த சாதம் இருந்தா போதும் இனி உங்க தலையில் இருந்து ஒரு முடி கூட கொட்டாது தெரியுமா?

இது மிக மிக எளிய ஒரு வழிமுறை தான் அனைவராலும் செய்யக் கூடிய ஒன்றும். இதற்கென தனியாக எந்த செலவும் செய்ய வேண்டியது கிடையாது. இதை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை தடவி வரும் போது உங்களின் நரைமுடி தொடர்பான அனைத்து பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வு கிடைக்கும்.

- Advertisement -