நரைமுடி வராமல் தடுக்க நல்லெண்ணெயில் இந்த 1 பொருளை சேர்த்து பாருங்க! கருகருன்னு உங்க முடியும் வயதான தோற்றத்தில் இருந்து விரைவில் மாறனுமா?

narai-mudi-karuvepilai-oil
- Advertisement -

சிலருக்கு இளம் வயதிலேயே முடி எல்லாம் நரைத்து வயதான தோற்றத்துடன் இருப்பார்கள். இவர்களுக்கு ஏன் இப்படி நிகழ்கிறது? இளம் வயதில் நரைப்பதை தான் நரைமுடி என்கிறோம். வயதாக ஆக எல்லோருக்கும் முடி நரைக்க தான் செய்யும். ஆனால் ஒன்றிரண்டு முடி நரைத்து பின்பு ஒவ்வொன்றாக எல்லாம் முடியும் நரைக்க ஆரம்பிக்கும். இப்படி இளம் வயதிலேயே நரைக்கும் நரை முடி வராமல் தடுக்கவும், வந்த நரை முடியை போக செய்யவும் என்ன செய்ய வேண்டும்? என்பதைத் தான் இந்த அழகு குறிப்பு மூலம் தொடர்ந்து தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

இளம் வயதிலேயே சிலருக்கு நரைமுடி அதிகமாக இருக்கும். தலைமுடியில் ஆங்காங்கே தான் கருப்பு முடியை பார்க்கும் அளவிற்கு கூட இருக்கும். இப்படி வருவதற்கு காரணம் நம் உடலில் இருக்கக் கூடிய மெலனின் என்னும் நிறமி செயல்படாமல் இருந்தாலும் அல்லது குறைவதாலும் இவ்வாறு ஏற்படுகிறது. மெலனின் தான் தலை முடியின் நிறத்தை தீர்மானிக்கிறது.

- Advertisement -

நரை முடி முதலில் வராமல் தடுப்பதற்கு தேங்காய் எண்ணெயை காட்டிலும் நல்லெண்ணெய் பயன்படுத்துவது நல்லது. சிறிதளவு நல்லெண்ணையில் கொஞ்சம் கருவேப்பிலையை போட்டு கொதிக்க விடுங்கள். கருவேப்பிலையின் சாறு எண்ணெயில் இறங்கியதும் அடுப்பை அணைத்து அப்படியே குளிர விட்டு விடுங்கள்.

எண்ணெய் நன்கு குளிர்ந்து வந்ததும் அதை வடிகட்டி ஒரு பாட்டிலில் சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்த எண்ணெயை நீங்கள் வாரம் இரண்டு முறை தலைக்கு மசாஜ் செய்து ஒரு மணி நேரம் ஊற விட்டுவிட்டு பின்பு தலைக்கு குளித்து வாருங்கள். இதனால் உடலில் இருக்கும் உஷ்ணம் தணியும். மேலும் தலைமுடி நன்கு நீண்டு கருகருவென கருமையாக வளரும். இதனால் நரைமுடி வராமல் தடுக்கப்படும்.

- Advertisement -

நரைமுடி ஏற்கனவே வந்தவர்கள் அதை எளிமையாக மறைய செய்ய அம்மோனிய நிறைந்துள்ள செயற்கை நிறமிகளை பூசுவதால் பல்வேறு பக்க விளைவுகளை சந்திக்க வேண்டி இருக்கும். எப்பொழுதும் இயற்கையை விடுத்து செயற்கையை நாடுவதால் விரைவான பலன் கிடைக்குமே தவிர அதனால் வரக்கூடிய பிரச்சினைகளை நீங்கள் சந்தித்து தான் ஆக வேண்டும்.

நரை முடி எளிமையாக மறைவதற்கு இயற்கையாக இருக்கக்கூடிய ஒரு அற்புதமான பொருள் மருதாணி. இந்த மருதாணி பொடியை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து கலந்து தலை முழுவதும் நன்கு தடவி ஊற விட்டு விடுங்கள். ஒரு பத்து நிமிடம் நன்கு ஊறியதும் தலைமுடியை சீயக்காய் போட்டு நன்கு அலசுங்கள்.

- Advertisement -

மருதாணியுடன் தேங்காய் எண்ணெய் சேரும் பொழுது இயற்கையாகவே தலைமுடிக்கு நல்ல ஒரு நிறம் கிடைக்கும். மேலும் இது பாதுகாப்பானதும் கூட! அதன் பிறகு நீங்கள் ரசாயனங்கள் கலந்த ஷாம்பு எதையும் பயன்படுத்தாமல் இயற்கையாக சீயக்காயை வீட்டில் அரைத்து வைத்து அதை பயன்படுத்தினால் ரொம்ப சீக்கிரமாகவே இளநரை மறைய ஆரம்பிக்கும்.

இதையும் படிக்கலாமே:
முழங்காலை தாண்டி முடி இருக்கவங்களை பார்த்து நமக்கு மட்டும் இப்படி முடி இல்லையேன்னு பீல் பண்றீங்களா? அப்படின்னா இத யூஸ் பண்ணி பாருங்க. அப்புறம் நமக்கா இவ்வளவு முடி நீங்களே ஆச்சரியப்படுவீங்க.

வெள்ளை முடி இருப்பவர்களுக்கு நல்ல கரு கருவென அடர்த்தியான முடியும், ஆரோக்கியமான முடியும் கிடைக்கும். கருங் கூந்தல் கிடைக்க, நரைமுடி மறைய இவற்றை கையாண்டாலே போதும். மேலும் நரை முடி வராமல் தடுக்க தினமும் 2 டீஸ்பூன் கருவேப்பிலை பொடியையும் நீங்கள் உணவில் தொடர்ந்து சேர்த்து வாருங்கள். அல்லது கருவேப்பிலை துவையல், கருவேப்பிலை சட்னி என்று கருவேப்பிலை சார்ந்த பொருட்களை சாப்பிடும் பொழுது இயற்கையாகவே கூந்தல் கருமை பெறுகிறது.

- Advertisement -