50 வயதிலும் வெள்ளை முடி எட்டிப் பார்ப்பதற்கு வாய்ப்பே கிடையாது. இரண்டே வாரத்தில், இரண்டு மடங்கு முடி வளர, தேங்காய் எண்ணெயில் இதை போட்டு தலையில் தடவுங்க போதும்.

hair1
- Advertisement -

நரை முடி வருவதை தள்ளிப் போடுவதற்கும், முடி உதிர்வை இரண்டே வாரத்தில் கட்டுப்படுத்துவதற்கும், முடி வளர்ச்சியை இரண்டு வாரத்தில் அதிகரிக்கவும், ஒரு எளிமையான அழகு குறிப்பு தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம். இந்த எளிமையான குறிப்பை பின்பற்றி வந்தால், உங்களுடைய தலைமுடியில் இருக்கக்கூடிய பெரும்பாலான பிரச்சனைகளுக்கு கூடிய விரைவில் தீர்வு கிடைத்துவிடும். அழகான அடர்த்தியான கருமையான தலைமுடி உங்களுக்கு ரொம்ப பிடிக்குமா இந்த பதிவு உங்களுக்காக.

கருமையான முடி வளர மருதாணி எண்ணெய்:
மருதாணியின் குண நலன்களை பற்றி பெரும்பாலும் நாம் எல்லோருக்கும் தெரியும். முடி வளர்ச்சியை தூண்டக்கூடியது, முடி உதிர்வை கட்டுப்படுத்தக்கூடியது. அதேசமயம் முடியை கருப்பாக்கக்கூடிய தன்மை இந்த மருதாணி இலைகளுக்கு உண்டு. சுத்தமான மருதாணி இலைகள் ஒரு கைப்பிடி அளவு நமக்கு தேவை. செடியில் இருந்து பறித்துக் கொள்ளுங்கள். அதை சுத்தமான தண்ணீரில் போட்டு கழுவி தண்ணீரை வடிய வைத்து, ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு தண்ணீர் ஊற்றாமல் கொரகொரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும். உங்களுடைய வீட்டில் அம்மி சிறிய உரல் இருந்தால் கூட அதில் போட்டு இடித்துக் கொள்ளலாம். அது நம்முடைய விருப்பம் தான்.

- Advertisement -

அடுப்பில் ஒரு இரும்பு கடாய் வைத்து, அதில் 250ml சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெயை ஊற்றி அதில் இடித்து வைத்திருக்கும் மருதாணி இலைகளை போட வேண்டும். அடுப்பு சிம்மில் தான் இருக்க வேண்டும். இந்த எண்ணெய் அப்படியே கொதித்து சிடசிடப்பு அடங்கும் வரை எண்ணெயை சூடு செய்யுங்கள். எண்ணெய் ஓரளவுக்கு கொதித்து வரும்போது இதில் 1 ஸ்பூன் ஓமம் சேர்க்கலாம். ஓமம் சேர்த்தால் இந்த எண்ணெயை தேய்க்கும் போது நமக்கு தலைபாரம் சளி பிரச்சனை வராமல் இருக்கும். அதே சமயம் தலையில் இருக்கக்கூடிய இன்பெக்ஷனை தடுக்கும் சக்தியும் ஓமத்திற்கு உண்டு.

ஈரத்தன்மையோடு எண்ணெயில் போட்ட மருதாணி இலைகளின் சிடசிடப்பு அடங்கி வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு, அதை நன்றாக ஆற வைத்து ஒரு வெள்ளை துணியில் ஊற்றி, வடிகட்டி பிழிந்து எடுத்தால் நமக்கு தேவையான மருதாணி எண்ணெய் கிடைத்துவிடும். இதை ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி ஸ்டோர் செய்தால் ஆறு மாதம் வரை கெட்டுப் போகாது.

- Advertisement -

வெயில் காலத்தில் இந்த எண்ணெயை அப்படியே எடுத்து தலையில் மசாஜ் செய்து கொள்ளலாம். தினமும் இந்த எண்ணெயை தலைக்கு தேய்க்கலாம். முடியாதவர்கள் வாரத்தில் இரண்டு அல்லது மூன்று நாட்கள் இந்த எண்ணெயை தலையில் தேய்த்து மசாஜ் செய்து இரண்டு அல்லது மூன்று மணி நேரம் கழித்து தலைக்கு குளிக்கலாம் அது உங்களுடைய விருப்பம் தான்.

இதையும் படிக்கலாமே: என்னதான் முகத்தை கழுவினாலும் 1 மணி நேரத்திற்குள் எண்ணெய் வழிகிறதா? அப்படின்னா நீங்க இத ட்ரை பண்ணி பாருங்க இனி உங்க முகத்தில் கொஞ்சம் கூட எண்ணெயே வழியாது!

குளிர்காலமாக இருக்கும் சமயத்தில் இந்த எண்ணெயை தனியாக ஒரு கிண்ணத்தில் தேவையான அளவு ஊற்றி அதை லேசாக சூடு செய்து அதன் பின்பு வெதுவெதுப்பாக எண்ணெயை தலையில் தேய்த்துக் கொள்ளலாம். இப்படி தொடர்ந்து செய்து வர இரண்டே வாரத்தில் முடி வளர்ச்சியில் நல்ல வித்தியாசத்தை காண முடியும். தொடர்ந்து இந்த எண்ணெயை தடவி வந்தால் சீக்கிரத்தில் நரைமுடி வராது. வந்த நரை முடியும் ஒரு சில மாதத்தில் கருப்பாக மாறத் தொடங்கும். உங்களுக்கு இந்த குறிப்பு பிடிச்சிருந்தா முயற்சி செய்து பாருங்கள்.

- Advertisement -