வாழ்வில் இருக்கும் தடைகளை நீக்க உதவும் நரசிம்மர் தீப வழிபாடு.

narashimmar deepam
- Advertisement -

இந்த உலகத்தில் பிறந்த அனைவருக்கும் ஏதாவது ஒரு தனித்திறமை என்ற ஒன்று இருக்கும். அந்த திறமையை உணர்ந்தவர்கள் அதை வளர்த்துக் கொண்டு தங்கள் வாழ்க்கையில் வெற்றியை அடைவார்கள். அந்த திறமையை அறியாதவர்களால் அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றியை அடைய முடியாது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் அவர்களுக்கு அவமானங்களும் அசிங்கங்களும் ஏற்படும். அப்படிப்பட்டவர்கள் நரசிம்மரை தீபம் ஏற்றி எப்படி வழிபட்டால் அவர்களுடைய வாழ்க்கையில் வெற்றிகளை குவிக்க முடியும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

ஒன்பது வகையான நரசிம்மர்கள் இருக்கிறார்கள். அதிலும் மிகவும் குறிப்பாக அனைவரும் அறிந்த நரசிம்மர் என்றால் மூன்று வகைகளில் சொல்லலாம். உக்கர நரசிம்மர், யோக நரசிம்மர், லட்சுமி நரசிம்மர். இவரை தான் பொதுவாக பலரும் அறிந்திருப்பார்கள். இந்த நரசிம்மரில் ஒவ்வொரு நரசிமருக்கும் ஒவ்வொரு குணாதிசியங்கள் இருக்கிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்ததுதான்.

- Advertisement -

நரசிம்மரை நாம் முறையாக வழிப்பட்டோம் என்றால் நம்முடைய தேவைகளுக்கு ஏற்றவாறு நரசிம்மர் தன்னுடைய அவதாரத்தை உருமாற்றிக் கொண்டு நமக்கு அருள் புரிவார் என்பதுதான் உண்மை. இந்த வழிபாட்டை செய்வதற்கு நமக்கு நரசிம்மரின் படம் தேவைப்படும். சிலர் வீட்டில் நரசிம்மர் படத்தை வைக்கக்கூடாது என்று கூறுவார்கள். லட்சுமி நரசிம்மையோ அல்லது பிரகலநாதரை மடியில் அமத்தியவாறு இருக்கும் நரசிம்மர் படத்தையோ வீட்டில் வைத்து தாராளமாக வழிபடலாம். அப்படியும் இல்லை என்றால் தீபச்சுடரில் நரசிம்மரை நினைத்துக் கொண்டு மனதார வேண்டினாலும் நரசிம்மரின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும்.

ஒரு புதிதாக வாங்கிய மண் அகல் விளக்கை எடுத்துக் கொள்ளுங்கள். அதை சுற்றி மஞ்சளை தடவி ஒரு சிறிய தாம்பாளத்தில் வைத்து விடுங்கள். அடுத்ததாக அது நிறைய நெய் ஊற்றி மஞ்சள் நிறத்தில் திரி போட்டு தீபம் ஏற்றுங்கள். ஏற்றிய தீபத்தில் நரசிம்மரை ஆவாகனம் செய்யுங்கள். இப்பொழுது அந்த தீபத்தில் நரசிம்மர் குடியேறி இருப்பார். நமக்கு இருக்கக்கூடிய பிரச்சனைகளை மனதார நரசிம்மரை மனதில் நினைத்துக் கொண்டு அந்த தீபத்திடம் நாம் கூற வேண்டும்.

- Advertisement -

நரசிம்மருக்கு பிடித்த நெய்வேத்தியமாக பானகம், கற்கண்டு, திராட்சை, ஏலக்காய் போன்றவற்றில் ஏதாவது ஒன்றை வைக்கலாம். பிறகு
“மகா ஜ்வாலாய நமஹ
சக்கர ராஜாய நமஹ
நரசிம்மாய நமஹ”

என்னும் மந்திரத்தை மனதார நரசிம்மரை நினைத்து நம்மால் இயன்ற அளவு குறைந்தபட்சம் எட்டு முறையாவது கூற வேண்டும். இவ்வாறு தினமும் மாலை நேரத்தில் நரசிம்மரை நினைத்து தீபம் ஏற்றி வழிபட வேண்டும். ஒவ்வொரு நாளும் புதிதாக திரியும் நெய்யும் போட்டு ஏற்ற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: வீட்டில் ஐஸ்வர்யம் பெருக குத்துவிளக்கு பூஜை

நம்முடைய தேவை அது எதுவாக இருந்தாலும் அந்த தேவைகளை பூர்த்தி செய்து நமக்கு இருக்கக்கூடிய தடைகளை தகர்த்தெறியும் அற்புத ஆற்றல் கொண்ட நரசிம்மரை நாம் இந்த முறையில் வழிபட்டு அவரின் பரிபூரணமான அருளை பெறுவோம்.

- Advertisement -