நாளை நரசிம்ம ஜெயந்தி தினம் இவற்றை செய்தால் மிகுதியான பலன்களை பெறலாம்

narasimmar
- Advertisement -

தன்னை கடுமையாக பழிப்பவர்களையும் இன்முகத்தோடு வரவேற்கும் மனம் கொண்டவர் ஸ்ரீமன் நாராயணன் ஆகிய பெருமாள். பெருமாள் ஒன்பது அவதாரங்கள் எடுத்திருந்தாலும், “இறைவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்று தன் பக்தன் பிரகலாதன் கூறிய கூற்றை மெய்ப்பிக்க, தூணை பிளந்து கொண்டு வந்து ஸ்ரீ நரசிம்ம மூர்த்தியாக வெளிப்பட்டு, இரண்யகசிபுவை வதம் செய்து, தர்மத்தை நிலை நாட்டினார். பகவான் நாராயணன் நரசிம்ம அவதாரம் எடுத்த தினமே நரசிம்ம ஜெயந்தியாக கொண்டாடப்படுகிறது. அந்த தினத்தில் நாம் செய்ய வேண்டியது என்ன என்பதை இங்கு தெரிந்து கொள்ளலாம்.

narasimma-logo

வைகாசி மாதம் பல ஆன்மீக முக்கியத்துவம் கொண்ட ஒரு மாதமாக இருப்பதை நம்மில் பலர் அறிவோம். அதர்மங்களை அழித்து, தர்மத்தை நிலை நாட்ட மகாவிஷ்ணு நரசிம்ம அவதாரம் எடுத்தது வைகாசி மாதத்தில் வரும் வளர்பிறை சதுர்த்தி தினம் ஆகும். இந்த தினமே பொதுவாக நரசிம்மர் அவதரித்த நரசிம்ம ஜெயந்தி விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த தினத்தில் வைணவர்கள் நரசிம்மர் விரதம் அனுஷ்டித்து, நரசிம்மரை வழிபடுவார்கள். மிகுந்த நன்மைகளை தரும் இந்த நரசிம்மர் விரதம் மேற்கொள்ளும் முறைகளை இங்கு காண்போம்.

- Advertisement -

நரசிம்மர் விரதம் மேற்கொள்ளும் தினத்தன்று அதிகாலையில் துயிலெழுந்து, குளித்து முடித்து விட வேண்டும். பின்பு வீட்டை நீரை ஊற்றி கழுவி சுத்தம் செய்ய வேண்டும். பிறகு பூஜையறையில் லட்சுமி நரசிம்மர் படத்திற்கு வாசம் மிக்க பூக்கள் சாற்றி, விளக்கெண்ணெய் தீபம் ஏற்ற வேண்டும். பின்பு பகல் முழுவதும் உணவு ஏதும் உண்ணாமல் நரசிம்மர் மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் துதித்து வழிபட வேண்டும். மாலையில் கோயிலுக்கு சென்று லட்சுமி நரசிம்மர் ஸ்வாமிக்கு செவ்வரளி, சிவப்பு ரோஜா மலர்களை கொண்டு அர்ச்சனை செய்து, சர்க்கரை பொங்கல், பானகம் போன்றவற்றை நைவேத்தியம் செய்து வழிபட வேண்டும்.

Narasimmar

மேலும் ‘நரசிம்மரே தாய்; நரசிம்மரே தந்தை, சகோதரனும் நரசிம்மரே, தோழனும் நரசிம்மரே, அறிவும் நரசிம்மரே, செல்வமும் நரசிம்மரே, எஜமானனும் நரசிம்மரே. இவ்வுலகத்தில் நரசிம்மரே, அவ்வுலகத்திலும் நரசிம்மரே, எங்கெங்கு செல்கிறாயோ, அங்கெல்லாம் நரசிம்மரே’. நரசிம்மரை காட்டிலும் உயர்ந்தவர் எவரும் இல்லை. அதனால் நரசிம்மரே உம்மை சரணடைகிறேன்” என்கிற இந்த சுலோகத்தை கூறி லட்சுமி நரசிம்மரின் முன்விளக்கேற்றி காய்ச்சி ஆறவைத்த பசும்பால் அல்லது பானகத்தை நைவேத்தியம் செய்ய வேண்டும்.

- Advertisement -

narasimha 3

நரசிம்மரை வழிபட்டு முடித்ததும், அவருக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட பிரசாதத்தை வீட்டில் நீங்களும், உங்கள் குடும்பத்தினர் அனைவரும் சாப்பிட்டு வர வேண்டும். இந்த முறை படி நரசிம்மர் விரதத்தை மேற்கொண்டால் 48 நாட்களுக்குள் நீங்கள் எண்ணிய காரியங்கள் ஈடேறும். உங்கள் நேரடி மற்றும் மறைமுக எதிரிகள் ஒழிவார்கள். ஏவல், செய்வினை, துஷ்ட சக்திகள் போன்றவற்றால் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள் நீங்கும். கொடிய நோய்கள் மற்றும் வறுமை நிலை நீங்கும். வாங்கிய கடன்கள் அனைத்தையும் வட்டியுடன் திருப்பிச்செலுத்தும் சூழல் உண்டாகும்.

இதையும் படிக்கலாமே:
உங்கள் குடும்பத்தில் செல்வ செழிப்பு உண்டாக இதை செய்யுங்கள்

இது போன்று மேலும் பல சுவாரஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

English overview:
Here we have Narasimha jayanti in Tamil. It is also called as Narasimhar valipadu in Tamil or Narasimha jayanthi pooja in Tamil or Vaikasi matha sirappugal in Tamil or Narasimmha jayanti sirappu in Tamil.

- Advertisement -