கடன் பிரச்சனை தீர, நல்ல வேலை கிடைக்க, பிரிந்தவர் சேர செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? இவரை கும்பிடுங்க நீங்க நினைச்சது தான் நடக்கும்!

narasimma
- Advertisement -

வாழ்க்கையில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான பிரச்சனைகள் இருப்பது உண்டு. நமக்கு இருக்கும் பிரச்சனை அடுத்தவர்களுக்கு இருப்பதில்லை! அடுத்தவர்களுக்கு இருக்கும் பிரச்சனை நமக்கு இருப்பதில்லை. இப்படி தத்தம் பிரச்சினைகளுக்காக பரிகாரத்தை தேடி அலைந்து கொண்டிருக்கும் பலரும் இவரை கும்பிட்டால் நீங்கள் நினைத்ததெல்லாம் நடக்கும் தெரியுமா? இவரை எந்தெந்த கிழமையில் கும்பிட்டால் என்னென்ன பலன்கள் கிடைக்கும்? என்கிற ஆன்மீக தகவலை தான் இனி பார்க்க இருக்கிறோம்.

பக்த பிரகலாதனின் பக்தியை மெய்ப்பிக்கும் விதமாக அவதரித்த நரசிம்மர் கலியுகத்திலும் கண்கண்ட கடவுளாக பக்தர்களுக்கு இன்றளவிலும் அருள் பாலித்து வருகிறார். நரசிம்மர் கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தால் எத்தகைய தடைகளும் விலகுவதாக ஐதீகம் உண்டு. அந்த வகையில் அவரை கும்பிட வேண்டிய கிழமைகளும், அதனால் கிடைக்கக் கூடிய பலன்களையும் நாம் தெரிந்து வைத்திருப்பது நல்லது.

- Advertisement -

மனித உடலும், சிங்க முகமும் கொண்ட இவர் உண்மையான பக்தி கொண்டவர் எவராக இருந்தாலும் அவர்களுக்கு நினைத்ததை உடனே கொடுத்து விடும் கொடை வள்ளலாகவும் இருக்கிறார். நரசிம்மர் உக்கிரமாக இருந்தாலும், அவர் உக்கிர தெய்வம் கிடையாது. ரொம்பவும் சாந்தமானவர். இவரை நாம் வழிபடும் பொழுது நம்மை குழந்தையாகவே அவர் பார்ப்பாராம். இவரை மனதார மனம் உருகி வேண்டி வழிபட்டு வந்தால் நினைத்தது எல்லாமே நடக்கும்.

அவ்வகையில் பிரிந்த தம்பதிகள் ஒன்று சேர அல்லது பிரிந்த எந்த உறவுகளும் மீண்டும் இணைவதற்கு வெள்ளிக்கிழமை தோறும் நரசிம்மரை வழிபடுவது சிறப்பு! எந்த சூழ்நிலையிலும் ஒருவர் இன்னொருவருடன் மீண்டும் இணைய விரும்பினால், அவருடைய உறவை பெற விரும்பினால் நீங்கள் இந்த எளிய பரிகாரத்தை செய்யலாம். நரசிம்மர் கோவிலுக்கு சென்று அவரை தரிசனம் செய்து மனமுருக பிரார்த்தித்துக் கொள்ளுங்கள் போதும்! அதே போல அன்றைய நாளில் அம்பாளையும் தரிசனம் செய்யுங்கள். பிரிந்தவர் உங்களை தேடி தானாகவே வந்து சேருவார். தொடர்ந்து இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வேண்டும் என்பதையும் மறந்து விட வேண்டாம்.

- Advertisement -

அதே போல புதன் கிழமையில் நரசிம்ம பெருமாளை வழிபட்டு வருபவர்களுக்கு மனதிற்கு பிடித்த நல்ல வேலை அமையும். சிலருக்கு என்னதான் திறமையும், துணிச்சலும் இருந்தாலும் அவர்களுக்கு பிடித்தமான வேலை கிடைப்பதில் தொடர்ந்து சிக்கல்கள் இருந்து கொண்டே இருக்கும். மனதிற்கு பிடித்த வேலை அமையவில்லையே, படிப்பிற்கு ஏற்ற வேலை அமையவில்லையே, அரசு உத்தியோகம் கிடைக்கவில்லையே, இந்த கம்பெனியில், இந்த வேலை, இந்த போஸ்டிங் நமக்கு கிடைக்கவில்லையே என்று எந்த வகையில் நீங்கள் வேலை ரீதியான மன சோர்வை கொண்டிருந்தாலும் ஒவ்வொரு புதன் கிழமையும் கோவிலுக்கு சென்று நரசிம்மரை தரிசனம் செய்து மனமுருக பிரார்த்தித்தால் விரைவிலேயே நீங்கள் நினைத்ததை நடத்திக் கொடுப்பார்.

அதே போல நரசிம்மரை செவ்வாய்க்கிழமையில் வழிபட தீராத கடன் தொல்லையும் தீரும் என்கிறது சாஸ்திரங்கள். எப்பேற்பட்ட கடன் பிரச்சனைகளிலும், சிக்கல்களிலும் மாட்டிக் கொண்டிருந்தாலும் நீங்கள் மனம் உருக ஒவ்வொரு செவ்வாய்க்கிழமை தோறும் கோவிலுக்கு சென்று நரசிம்மரை வழிபட்டு வந்தால், இந்த பிரச்சனைகள் எல்லாம் மலை போல் வந்திருந்தாலும், பனி போல் நீங்கி விடுவதை நீங்கள் காண முடியும். அந்த அளவிற்கு பக்தர்களுக்கு குறைகளை கேட்டது கேட்டபடி நீக்க கூடியவர் நரசிம்மர். செவ்வாய், புதன், வெள்ளி ஆகிய கிழமைகள் மட்டும் அல்லாமல் சனிக் கிழமைகளில் இவரை தொடர்ந்து வணங்கி வர சங்கடங்கள் அனைத்தும் தீரும், தடைகள் அனைத்தும் விலகி, வெற்றி உங்கள் கையில் தானாகவே வந்து தவழக்கூடிய அற்புதத்தை காணலாம்.

- Advertisement -