வீட்டில் இருக்கக்கூடாத மூன்று பொருட்கள். இவை மட்டும் வீட்டில் இருந்தால் நமக்கிருக்கும் அதிர்ஷ்டத்தை நம்மிடமிருந்து விலக்கி விடும்

lakshmi
- Advertisement -

ஒவ்வொருவருக்கும் பணம், பேர், புகழ் இவை அனைத்தையும் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாக இருக்கும். யாருக்குத்தான் பிடிக்காது புகழ்பெற்ற வாழ்க்கை கிடைப்பது. ஆனால் இப்படி நினைக்கும் அனைவருக்குமே இதுபோன்ற வாழ்க்கை கிடைப்பதில்லை. ஒருசிலர் ஆடம்பர வாழ்க்கையில் ஆஹா ஓஹோ என இருப்பார்கள். ஆனால் நிம்மதி என்பதே அவர்களிடம் இருக்காது. ஒரு சிலர் மிகவும் ஏழ்மையான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்தாலும் மனநிம்மதியுடன் இருப்பர். சிலர் எந்த வித மகிழ்ச்சியும் இல்லாமல் எப்பொழுதும் போராட்டமான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருப்பார்கள். இவ்வாறு நமது இல்லத்தில் சந்தோஷம் நிறறைந்திருக்க வாஸ்து சாஸ்திரங்களில் பலவித சூட்சம விஷயங்கள் சொல்லப்பட்டிருக்கின்றன. அவ்வாறு வாஸ்துவின் படி ஒரு வீட்டில் இருக்கக் கூடாததும், அதிர்ஷ்டத்தை தடுக்கின்ற பொருட்களையும் பற்றி தான் இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

cash

ஒரு வீடு கட்டுவதற்கு முன்னர் அல்லது குடிப்பெயர் வதற்கு முன்னர் அந்த வீடு கிழக்கு பார்த்த வாசலில் இருக்க வேண்டும் என்று கூறுவார்கள். அப்படி இருந்தது என்றால் சூரியனின் கதிர்கள் நேராக வீட்டிற்குள் நுழையும் பொழுது அவை நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுக்கின்றன. அது மட்டுமல்லாமல் சமையல் அறை அக்னி மூலையில் இருக்க வேண்டும், பணம் வைக்கும் வரை குபேர மூலையில் இருக்க வேண்டும் இவையெல்லாம் வாஸ்து சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மனித வாழ்க்கையை முன்னேற்றுவதற்கான தகவல்களாகும்.

- Advertisement -

அவ்வாறு முக்கியமாக ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர்வாழ ஆதாரமாக இருக்கும் தண்ணீரை கவனமாக கையாள வேண்டும். ஒரு வீட்டில் தண்ணீர் எந்த அளவிற்கு அதிகமாக செலவு செய்யப்படுகிறதோ அந்த வீட்டில் பண விரயமும் அதிகமாக இருக்கும். எந்த அளவிற்கு சிக்கனமாக தேவையான அளவு தண்ணீரை மட்டும் உபயோகப்படுத்துகிறோமோ அந்த அளவிற்கு அதிர்ஷ்டம் நமது வீடு தேடி நம்மிடம் வந்து சேரும்.

water

எனவே சமையலறையில் எப்பொழுதும் தண்ணீர் சிந்தி கொண்டிருக்கக் கூடாது. வீட்டில் உள்ள எந்த குழாய்களிலும் இவ்வாறு தண்ணீர் கசியக்கூடாது. வீட்டு வாசலில் நேராக தண்ணீர் குழாய், கிணறு, அடி பம்பு இருக்கக்கூடாது. அப்படி தற்செயலாக அமைந்து விட்டது என்றால் அந்த தண்ணீர் பகுதியில் சிறிதளவு மண் தோன்டி ஒரு ரூபாய் நாணயத்தை புதைத்து வைக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் எதிர்வினைகளை குறைக்க முடியும்.

- Advertisement -

அதுபோல இப்பொழுதெல்லாம் ஒரு சிலர் தங்கள் வீட்டின் வாசலில் சுவற்றில் பதிக்கும் பெயர் பலகையை கிரானைட் கற்களைக் கொண்டு வைக்கின்றனர். இவ்வாறு செய்வது நமது வீட்டின் அதிர்ஷ்டத்தை குறைக்கிறது. கிரானைட் கல்லில் உயிரோட்டம் இல்லை என்று சொல்லப்படுகிறது. எனவே இவ்வாறு செய்வதை தவிர்ப்பதென்பது குடும்பத்திற்கு நன்மையைத் தரும்.

kan-thirusti-vinayagar

அதுமட்டுமல்லாமல் வீட்டு வாசலில் ஒரு சிலர் செல்வ கடவுள்களான பெருமாள், மகாலட்சுமி போன்ற கடவுள்களின் படத்தினை வைக்கின்றனர். அவ்வாறு செய்வது நமது வீட்டின் அதிர்ஷ்டத்தை நாமே வெளியில் அனுப்புவதாக அர்த்தமாகும். எனவே வீட்டிற்கு வெளியே கண் திருஷ்டி விநாயகர் படத்தை மட்டுமே பொறித்து வைப்பதென்பது மிகவும் சிறப்பாக அமைகிறது.

- Advertisement -