உங்க நட்சத்திரத்தின் படி இந்த கலர் கயிறை கையில் கட்டிக் கொண்டால் பணம் சம்பாதிக்கும் ஆர்வம் அதிகரிக்கும்.

kayiru
- Advertisement -

பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் தான் இருக்கிறது. ஆனால் பணத்தை அதிகமாக சம்பாதிக்க வேண்டும் என்று, அதிக ஆர்வத்தோடு ஒரு சிலர் மட்டுமே முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். உங்களுக்கும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆசை இருக்குதா, ஆனால் பண வரவுக்கு உண்டான வழிகள் இல்லையா, அந்த பணத்தை எப்படி சம்பாதிப்பது என்ற வழி தெரியாமல் தவித்து வருகிறீர்களா.

உங்கள் நட்சத்திரத்தின் படி உங்களுக்கு என்ன கலர் ராசி என்று தெரிந்து கொள்ளுங்கள். அந்த கலரில் ஒரு கயிறை வாங்கி கையில் கட்டிக் கொள்ளுங்கள் போதும். பணவரவு தானாக உங்களைத் தேடி வரும். பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற ஆர்வம் உங்கள் ஆழ்மனதில் விதையாக விழுந்து, விருட்சமாக வளர தொடங்கிவிடும். நம்பிக்கை உள்ளவர்கள் ஜோதிடம் சொல்லும் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரங்களை முழுமையாக படித்து பலன் பெறலாம்.

- Advertisement -

அஸ்வினி முதல் ரேவதி நட்சத்திரம் வரை ராசி கயிறு

அஸ்வினி நட்சத்திரக்காரர்கள் வென்பட்டு நிற நூலில் கயிறு கட்டிக் கொண்டால் அதிர்ஷ்டம் கிடைக்கும். பரணி நட்சத்திரக்காரர்கள் ஆரஞ்சு நிற கயிறை கையில் கொட்டிக் கொண்டால் பணம் சேரும். கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் வெள்ளை நிற கயிறு கையில் கட்டி கொண்டால் பணம் சேரும். ரோகிணி நட்சத்திரக்காரர்கள் சிவப்பு நிற கயிறை கையில் கட்டி கொண்டால் பணம் சேரும்.

மிருகசீரிஷம் நட்சத்திரக்காரர்கள் கருப்பு வெள்ளை நிற கயிறு இரண்டையும் ஒன்றாக திரித்து கையில் கட்டிக் கொண்டால் பணம் சேரும். திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் மஞ்சள் நிற கயிறு கையில் கட்ட வேண்டும். புனர்பூச நட்சத்திரக்காரர்கள் நீல நிற கயிறை கையில் கட்டி கொண்டால் பணம் சேரும். பூசம் நட்சத்திரக்காரர்கள் பச்சை நிற கயிறு கையில் கட்டிக்கொண்டால் பணம்.

- Advertisement -

ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் பலவண்ணத்தில் கயிறு இருக்கும் அதை வாங்கி கையில் கட்டிக் கொண்டால் பணம் சேரும். மகம் நட்சத்திரக்காரர்கள் பட்டு நூலில் கையில் கயிறு கட்டிக்கொள்ள வேண்டும். எந்த நிறத்தில் பட்டு நூல் கிடைத்தாலும் சரிதான். பூரம் நட்சத்திரக்காரர்கள் ஆரஞ்சு நிற கயிறு. உத்திரம் நட்சத்திரக்காரர்கள் வெள்ளை நிற கயிறு கையில் கட்டணும்.

ஹஸ்தம் நட்சத்திரக்காரர்கள் சிவப்பு நிற கயிறை கட்டிக்கொண்டால் பணக்கஷ்டம் தீரும். சித்திரை நட்சத்திரக்காரர்கள் கருப்பு வெள்ளை சேர்ந்த கயிறை இரண்டையும் ஒன்றாக திரித்து கையில் கட்டிக் கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும். சுவாதி நட்சத்திரக்காரர்கள் மஞ்சள் நிற கயிறை கையில் கட்டிக் கொள்ளவும். விசாக நட்சத்திரக்காரர்கள் நீலம் நிறம் கயிறை கையில் கட்டி கொண்டால் அதிர்ஷ்டம். அனுஷம் நட்சத்திரக்காரர்கள் பச்சை நிற கயிறு கையில் கட்டிக் கொள்ளவும்.

- Advertisement -

கேட்டை நட்சத்திரக்காரர்கள் பலவண்ண கயிறை கையில் கட்டிக் கொள்ளவும். மூலம் நட்சத்திரக்காரர்கள் வென்பட்டு நூலை கையில் கட்டிக்கொண்டால் அதிர்ஷ்டம். பூராடம் நட்சத்திரக்காரர்கள் ஆரஞ்சு நிற கையிறை கையில் கட்டிக் கொள்ளவும். உத்திராடம் நட்சத்திரக்காரர்கள் வெள்ளை நிற கயிறு கையில் கட்டிக் கொள்ளவும்.

திருவோணம் நட்சத்திரக்காரர்கள் சிவப்பு நிற கயிறு, அவிட்டம் நட்சத்திரக்காரர்கள் கருப்பு வெள்ளையும் சேர்ந்த கயிறு, சதயம் நட்சத்திரக்காரர்கள் மஞ்சள் நிற கயிறு, கட்டிக் கொள்ளவும். பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள் நீளம் அல்லது கருப்பு நிற கயிறு கட்டில் கட்டிக் கொள்ளலாம். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்கள் பச்சை நிற கயிறு கட்டிக்கொள்ளலாம். ரேவதி நட்சத்திரக்காரர்கள் பலவர்ணம் உள்ள கயிறை திரித்து கையில் கட்டிக்கொண்டால் அதிர்ஷ்டம் உண்டாகும்.

மேலே சொன்ன நட்சத்திரக்காரர்கள் உங்களுக்கு உரிய நிற கயிறை குலதெய்வத்தை நினைத்து வீட்டிலிருந்தபடியே கயிறை கையில் கட்டிக்கொள்ளுங்கள். 48 நாட்களுக்கு ஒரு முறை பழைய கயிறு புதுசாக மாற்றிக் கொள்ளவும். இந்த கயிறை இன்னைக்கு கட்டிக் கொண்டால் நாளைக்கு பண பிரச்சனை தீர்ந்துவிடும் என்று சொல்ல வரவில்லை.

இந்த கயிறை கட்டும்போது உங்களுடைய ஜாதக ரீதியாக உங்களுக்கு பணம் கஷ்டம் வந்தாலும் அதனை சரி செய்து கொள்ள உண்டான வாய்ப்புகள் உங்களைத் தேடி வரும். இன்று இந்த கயிறை கட்டி விட்டால் நாளை பணக்காரர் ஆகிவிடலாம் என்று யாரும் தப்பு கணக்கு போடாதீங்க.

இதையும் படிக்கலாமே: வெள்ளிக்கிழமை இப்படி சுவாமி கும்பிட்டால் பல தலைமுறைக்கு உங்கள் குடும்பம் செல்வ செழிப்போடு வாழும்.

ஆனால் அந்தந்த நிற கயிறு உங்களுக்கு வாழ்க்கையில் பணம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் முன்னேற்றத்தை தருவதற்கு படிப்படியாக உதவிகளை செய்து வரும். நம்பிக்கை உள்ளவர்கள் ஜோதிடம் சார்ந்த மேல் சொன்ன விஷயங்களை பின்பற்றி பலன் பெறுங்கள்.

- Advertisement -